ஊடலின் மௌன வலிகள்
சுரபி..
அறையின் ஓரமாய்
கதறித் திரிகின்றன
அவள்
கூந்தல் இறங்கிய
கற்றைகள் சில…
சுவரோரங்களில்
தேம்புகின்றன
அவள்
சுவாசம் படர்ந்த
ஒட்டடைகள் சில..
எதிர்பார்ப்புகள் தேக்கி
காத்திருக்கின்றன
அவள்
வாய்மொழி கேட்ட
சுவர்க்கோழிகள் சில..
அவளோ
மௌனத்தைப்
போர்த்திக்கொள்கிறாள்
இன்றும்..
நீண்டுகொண்டிருக்கும்
இரவின் – அடர்ந்த
மௌனத்தின் வலியில்
புலம்பித் தீர்க்கின்றன
பூச்சுக்கள் உதிர்ந்த
செங்கல்கள் சிலவும்,
விருப்பங்கள் காய்ந்த
செல்கள் பலவும்..
-சுரபி..
- குருமகான் சுப்ராஜி
- வேதவனம் விருட்சம் 79
- வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்
- ஊடலின் மௌன வலிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6
- சு.மு.அகமது கவிதை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -2
- செய்தாலி கவிதைகள்
- வட்டம்
- வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்
- சத்ரபதி ராஜாராமின் கீழ் மராத்தாக்கள் (1689 to 1700)
- முள்பாதை 23
- மனிதர்கள் குருடு செவிடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -11
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் ஒளி வேகத்தை நெருங்கிப் புரோட்டான் கணைகள் மோதல் – 5
- பகை போக்கும் பச்சைமயில்வாகனன்
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் கடவுள் துகளைத் தேடும் சோதனை – 4
- வெளிவந்துவிட்டது : அசை – தொகுப்பு இதழ் – 03.
- KUROSAWA CENTENARY SCREENING
- ஹாங்காங்கின் நாட்டிய சிகரா பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம்
- தமிழ் இலக்கியத் தோட்டம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
- காலம் சஞ்சிகையின் ஆதரவில் “ஈழமின்னல் சூழ மின்னுதே”
- இலக்கியப் பரிசுப் போட்டி
- ‘‘பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள்’’
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8
- எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன்.
- கருணையும் கருணையின்மையும் – வசந்தபாலனின் அங்காடித்தெரு
- திரைவிமர்சனம்: அங்காடித் தெரு -ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்
- கொட்டப்படும் வார்த்தைகள்