கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++++++++++
நாம் எங்கே இருக்கிறோம் ?
++++++++++++++++++++++++++++++++++
அங்கே புயல் அடித்துத் தூக்கிச்
சிதறிவிட உதவுகிறது
அதே வேளையில்
செலுத்துகிறது பாதை நோக்கி
ஒரு கப்பலை !
உண்மையாக உள்ளது கடவுள்
என்று எவரும்
உரைப்பர் அங்கே !
எங்கே ?
எதற்கு அப்பால் உள்ளது ?
+++++++++++
இங்கும் அங்குமாய் நுழைந்து
நெய்து செல்கிறது
ஒளி வெட்டித்
தையல் பொறிக் கருவி !
எங்கிருக் கிறோம் நாம்
கிழக்கிலா ? இல்லை மேற்கிலா ?
எங்கிருக் கிறேன் என்று
விண்ணில்
வினாவிக் கொண்டு மிதக்கும்
பரிதி கேட்பது போல்
தெரிகிறது !
+++++++++++
நண்பன் நுழைகிறான்
என் உடலுக் குள்ளே
நடு மையம் தேடிக் கொண்டு !
காண முடியாமல் தனது
கத்தியை உருவி
குத்திக் கிழிப்பான்
எங்காவது !
அங்கே ஓர் பளுவில்லா
வித்துள்ளது !
நிரப்பிக் கொள் உன் உடலுக்குள்
நீ அதனை,
இல்லையேல்
செத்து விடும் வித்து !
++++++++++++++
இந்த நீர்ச்சுழி விசையில் நான்
பிடி பட்டேன்
உந்தன் நெளிந்த கூந்தல் !
ஊமையாய் இருப்போன்
நியாயமாய் நடப்போன்
பித்தனாய் எண்ணப் படுவான் !
நானென்ன செய்கிறேன் என்று
எனக்குத் தெரிவதாய்
உனக்குப் புரிகிறதா ?
முழு மூச்சு அல்லது
அரை மூச்சு இழுக்க
நானெனக்குச் சொந்தமா ?
பேனா அறியுமா இனிமேல்
தானென்ன எழுதும் என்று ?
அல்லது
ஓடும் கோளம் ஒன்று
அடுத்துப்
போகு மிடம் யூகிக்குமா ?
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 30, 2010)
- குருமகான் சுப்ராஜி
- வேதவனம் விருட்சம் 79
- வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்
- ஊடலின் மௌன வலிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6
- சு.மு.அகமது கவிதை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -2
- செய்தாலி கவிதைகள்
- வட்டம்
- வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்
- சத்ரபதி ராஜாராமின் கீழ் மராத்தாக்கள் (1689 to 1700)
- முள்பாதை 23
- மனிதர்கள் குருடு செவிடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -11
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் ஒளி வேகத்தை நெருங்கிப் புரோட்டான் கணைகள் மோதல் – 5
- பகை போக்கும் பச்சைமயில்வாகனன்
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் கடவுள் துகளைத் தேடும் சோதனை – 4
- வெளிவந்துவிட்டது : அசை – தொகுப்பு இதழ் – 03.
- KUROSAWA CENTENARY SCREENING
- ஹாங்காங்கின் நாட்டிய சிகரா பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம்
- தமிழ் இலக்கியத் தோட்டம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
- காலம் சஞ்சிகையின் ஆதரவில் “ஈழமின்னல் சூழ மின்னுதே”
- இலக்கியப் பரிசுப் போட்டி
- ‘‘பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள்’’
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8
- எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன்.
- கருணையும் கருணையின்மையும் – வசந்தபாலனின் அங்காடித்தெரு
- திரைவிமர்சனம்: அங்காடித் தெரு -ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்
- கொட்டப்படும் வார்த்தைகள்