கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++
நண்பனே !
உன் கதையைச் சொல்ல
உரோம இழையாய்ச்
சுருங்கினேன் !
நீ என் கதையைச் சொல்வாயா ?
நெய்துள்ளேன்
நிரம்பக் காதற் கதைகளை !
புனைகதைப்
படைப்பாளி யென்று நான்
உணர்கிறேன் இப்போது !
சொல்
உரைப்பது நீ தானே
உண்மை அது !
நானோர் சினாய் மலை !
நீ ஏறி வரும்
மோஸஸ் !
++++++++++
இக்கவிதை உன் வாய்மொழியின்
எதிரொலிப்பு ! வெறும்
தரைநிலம் பேச முடியாது
எதுவும் அறியாது !
உரைப்பினும்
வரையறைக் குட்படும் !
ஆன்மீக வானியல் கணிக்கும்
ஓர் எந்திரம்
இந்த மனித உடல் !
உயரம் அளக்கும் கருவியை
ஊடுருவி நோக்கிக்
கடலாக ஆகிவிடு !
++++++++++++
சிந்தையைத் திருப்பும்
இந்த மொழிகள் எதற்கு ?
என் தவறில்லை
இப்படி நான் உளறு வதற்கு
இதைச் செய்தது நீ !
என் காதற் பித்தை
ஏற்றுக் கொள் வாயா ?
ஆமென்று சொல் !
எந்த மொழியில் கூறுவாய்
அரபியிலா
அல்லது பாரசீ கத்திலா ?
திரும்பவும்
கட்டப்பட வேண்டும் என்
கரங்கள் !
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 9, 2010)
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- ஓட்டை பலூன்
- எச்சரிக்கை……!
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- முப்பத்து மூன்று!
- மொழிக் குறிப்புகள்
- அர்சால்
- முள்பாதை 20
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- ஒரு மகள்.
- எங்கோ பார்த்த முகம்
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- உதிர்ந்த இலைகள்
- எப்போதும் முந்துவது…
- கனவு தேசம்
- வேத வனம் விருட்சம் 76
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- மகளிர் தினம்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- முக்காட்டு தேவதைகள்
- எனது மண்ணும் எனது வீடும்
- பாவனைப்பெண்