கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

நாவிஷ் செந்தில்குமார்


இரட்டைக்குழந்தைகள்
ஆணொன்று
பெண்ணொன்றுமாய்
வேண்டுமென்கிறாள்
வெற்றுமார்பில்
விரல் நகர்த்திக் கோலமிடும்
மனைவி
00
இருந்தால் ஆபத்தென்பதால்
குடல்வால்
அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி
கர்ப்பப்பையை
அகற்றிவிட்ட கதை
அறியாதவளிடம்
‘சரி’யெனச் சமாளிக்கிறான்
கணவன்
00
வெறுமை பரவிய
படுக்கையறையில்
ஏதுமறியாதவளின்
எண்ணங்களில்
கனவுகள் விரிய
எதார்த்தம் தெரிந்துகொண்டவனின்
கண்களில் குருதி வழிய
இனிவரும் இரவுகளில்
அவளது ஆண்மை
இவனைப் புணரும்
இவனது பெண்மை
கருவுற்ற நெஞ்சிலே
குழந்தையைச் சுமக்கும்!

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்