ப.மதியழகன்
மனப்பதிவுகள்
என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல்
இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ…
நதியில் நேற்று பார்த்த நீரலைகள்,
இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும்
ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும்
என் முகம் தெரிந்தது.
குலை, குலையாய் பனங்காய்கள் உள்ள
பனை மரததை விட, அவற்றுக்கிடையே நிற்கும்
மொட்டைப் பனைமரமே
கண்களின் கவனத்தை ஈர்க்கின்றது.
வெகு உயரத்தை அடைந்துவிட்டால்
செயலற்று சும்மா இருக்கலாம்
என்பதை ஆகாயத்தில் மிதக்கும்
கழுகு உணர்த்தியது.
இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளும்
சமீபத்தில் நம்மை விட்டு
மறைந்து போனவர்களின்
ஞாபகச்சுவடுகளை
மனஅடுக்குகளிலிருந்து தட்டி எழுப்புகின்றனவாய்
அமைந்திருக்கின்றன.
சூரியனுக்கு கீழே ஆயிரமாயிரம் மாற்றங்கள்,
வளர்ச்சிகள், கொண்டாட்டங்கள், பேரழிவுகள்,
அதிசயங்கள், ஆடம்பரங்கள்
ஆனால் கதிரவன் எவற்றையும்
பொருட்படுத்துவதில்லை
அப்படி இருப்பதால் தானே அவன் ஆதவன்.
அவனும்…. அவளும்…
அவன் பயணிக்காத ஊர்களின்
பாதைகளாய் அவள்
அவன் எழுதாத கவிதைகளின்
வரிகளாய் அவள்
அவன் வரையாத ஓவியத்தின்
தூரிகையாய் அவள்
அவன் படிக்காத புத்தகத்தின்
பக்கங்களாய் அவள்
அவன் சுவைக்காத பழங்களின்
ருசியாய் அவள்
அவன் ரசிக்காத மலர்களின்
எழிலாய் அவள்
அவன் பாடாத பாடல்களின்
ஜீவனாய் அவள்
அவன் வாழாத வாழ்கையின்
அனுபவமாய் அவள்.
mathi2k9@gmail.com
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2
- குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009
- பத்மநாபபுரம்
- ஹைக்கூக்கள்
- மவுனவெளி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>
- தீப ஒளியில் சிராங்கூன்
- ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…(1)
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும்
- அலிகளுக் கின்ப முண்டோ?
- நீங்கள் கேட்டவை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1
- என்னை ஆளும் விலங்குகள்
- பெயரிலென்ன இருக்கிறது?
- மனப்பதிவுகள்
- தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்
- குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!
- முரண்:
- ’ரிஷி’யின் இரு கவிதைகள்
- சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி
- கள்ளத்தனமான மௌனங்கள்
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- ஏமாற்று ஏமாற்று