பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சுடரொளி புரளும் கடல் மேல்
மஞ்சள் பாறைகளின்
உள்ளே,
தேன் போல் அற்புதமாய்
கொந்தளிப்பில்
சிதையாது,
நாற்புறமும் நேர் கோணத்தில்
தூயதாய் வைத்து !

++++++++++

தீப்பொறிகள் வெடித்துச்
சிதறுவது போல்
அல்லது
பச்சை இலைகள் ஊடே
பதுங்கிய தேனீக்கள் போல்
பகல் வெளிச்சம் ரீங்காரமிடும் !
பச்சை இலைகட்கு மேலே
பட்டொளி வீசும்
மினுமினுத்தும் மெல்ல
முணுமுணுத்தும் !

+++++++++++

தீயிக்குத் தீராத தாகம் !
வேனிற் காலம்
எல்லா வற்றையும் எரித்து
வெந்திடச் செய்யும்.
பச்சை இலைகளைப் பின்னி
ஏடன் பூங்காவைக்
கட்டி முடிக்கும் !
காரணம்,
கரிய முகம் கொண்ட
காசினி
இன்னலுற விழைவ தில்லை !

++++++++++++

பூமியானது
நீர், நெருப்பு, உணவை
ஒவ்வொரு வருக்கும்
புதியதாய் அளிக்க விரும்புகிறது !
மாந்தரை எதுவும் பிரிக்கக்
கூடாது
பரிதி, நிலவு, பகல் இரவு
அனைத்தும் ஒன்றே !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 17, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஜனவரி மாதம்
சிரமக் காலம் !
பகற் பொழுது கவலை யற்றுப்
பகலவ னோடு கைகோர்க்கும் !
கிண்ணத்தில் இட்ட
ஒயின் மதுபோல்
திண்ணமான பொன்னும்
மண்ணுலகை நிரப்பும் நீல
வண்ணத்தின்
வரம்பு விளிம்பில் !

++++++++++

பருவக் காலங்களின்
கொடுமையில்
திராட்சையின் பச்சைப் பிஞ்சுகள்
கசப்புச் சுவையைக்
கொதித்துத் திரவமாக்கும் !
பகற் பொழுதின்
குழப்பத்தில் மறைந்து போனக்
கண்ணீர்த் துளிகள்
பொங்கி வீழும்
கொத்துக் களாய்
கேடு தரும் காலநிலை
வாடி வெறுமை ஆக்கும் வரை !

+++++++++++

கிருமிகளை விதைத்தால்
பெருந்துயர் விளையும் !
கொளுத்தும் ஜனவரி
வெய்யிலில்
பயத்தால் தவிக்கும் ஒவ்வொன்றும்
பழுத்துக் கனியாகும் !
பழங்கள் முற்றியதும்
வெந்து போகும்
வெப்பத் தழலில் !

++++++++++++

நமது பிரச்சனைகளும்
முறிந்து போய்ப்
பிரிந்து விடும் !
ஆத்மாவை
அடித்துச் செல்லும்
புயல் போல !
இங்கு நாம் வசிக்கும்
இந்த மாநிலம்
துப்புர வாகும் மீண்டும்
புது ரொட்டி
மேஜை மேல் பரிமாறி !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 10, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பசுமை நிறம் ! பேரமைதி !
வெளிச்சத்தில் ஈரம் !
மாட்டில்தி(*) ! நீ
தென்கரைப் பகுதிகளில்
கடலையும் மணல் கற்களையும்
கடந்த போது
பகல் வேளையில்
ஜூன் மாதம் நடுங்கியது
பட்டாம்
பூச்சி போல் !

++++++++++

இரும்புப் பூக்களைக்
கரங்களில் நீ
பளுவாய் ஏந்திச் செல்கையில்
கடற் பசிகள் மோதின !
தென்திசைக் காற்று
புறக்கணிக்கும் ! ஆயினும்
அரித்திடும்
உன் உப்புக் கரங்கள்
இன்னும் வெளுத் திருக்கும்
மணலிலே
மலர்ந்த செடித் தண்டுகள்
கலந்து போய் !

+++++++++++

உனக்குக் கிடைத்துள்ள
தூய்மை யான
கொடைகள் மேல் காதல்
எனக்கு !
பளிங்கு போன்ற தோல்
உனக்கு !
உன் நகங்கள்,
உன் வெகுமதிகள்
உன் விரல்களின்
பரிதிகள் !
பூரிப்பு பொங்கிப் பூக்கும்
உனது வாயில் !

++++++++++++

பாதாளக் குழிக்கு அருகில்
உள்ள
எந்தன் இல்லத்தில்
சித்திர வதையில் கட்டிய
அந்த மௌனத்தை
அளிப்பாய் நீ
எனக்கு
மணல் வெளியில்
மறந்து போன
கடற்கரை
மாளிகையி லிருந்து !

++++++++++++++
மாட்டில்தி(*) – காதலியின் பெயர்
++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 58 << உன் கை வல்லமை >>

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஆனால் மறந்து போனேன்
பின்னிய
ரோஜாக் களுக்கு
ஊடே போய்
உன் கைகள்
வேர்களுக்கு
நீர் ஊற்றிய தென்று !
உன் விரல் பதிவுகள்
பூத்தன
பூரண மாக
இயற்கை மௌனத்தில்
இருக்கும் வரை !

++++++++++

செல்லக் குட்டியைப் போல்
உன் மண் வெட்டியும்
நீர் தெளிக்கும்
பூவாளியும்
நிலத்தைக் கொத்திச்
சமப் படுத்தி
நிழல் போல்
சுற்றி வரும் உன்னை !
அப்பணி
ஒப்பிலாப் புது வாசம்
உண்டாக்கி
வளப்படுத்தும் செழிப்பை !

+++++++++++

தேனீக்களின் பெருமிதமும்
பாசமும் உன்
நேசக் கைகள் பெற
ஆசைப் படுபவன் நான் !
அவ்விதம்
அடைக் காக்கும்
இனங்களைப் பெருக்கிக்
கலப்புடன்
விருத்தி செய்து என்
உள்ளத்தையும்
உழுது வளப்படுத்தும்
உன் கரங்கள் !

++++++++++++

நானொரு கரிந்து போன
பாறைக் கல்
போன்றவன் !
அதன் அருகில் நீ
உள்ள போது
அது வாயால் பாடும்
உடனே !
ஏனெனில் அது
கானகத்தில் நீ கொணர்ந்த
நீரைக் குடிக்கும்
நின் குரலைக் கேட்டு !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 28, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 57 << என் விழியில் நீ >>

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பாய்ந்து சென்றது உன் கரம்
பகலை நோக்கி
என் விழிகளைக் கடந்து !
ஒளி எழுந்து
ரோஜா பூங்காவைத்
திறந்து வைத்தது !
வானும் மண்ணும் தாளமிட்டு
முடிவிலாத்
தேன்கூடு போல்
செதுக்கப் பட்டது
நீலப் பச்சை நிறத்தில் !

++++++++++

உன் கரம் தொட்டது
எழுத்தசைவு இலக்குகளை !
மணிகள் போல் ஒலித்தன
மதுக் கிண்ணத்தை தொட்டது
மஞ்சல் எண்ணை
நிரம்பிய
குடங்களைத் தொட்டது
பூவிதழ்களை,
நீர் ஊற்றுகளை,
யாவற்றுக்கும் மேலாய்
காதலை !
பாதுகாப் பாக
உனது புனிதக் கை
அகப்பையில்
அள்ளிய காதலை !

+++++++++++

மாலைப் பொழுது கழிந்து
மெதுவாய்
இரவு வேளை நகர்ந்தது
உறங்கிப் போன
மனிதன் மீது
தாரகைச் சிமிழின் மீது
தாவிப் படரும் கொடி
நாறிடும்
வாசத்தைக் கசிந்து
வேதனையில்
வீசிடும் !

++++++++++++

அப்போதுன் கை தடுமாறும்
மீண்டும்
பாய்ந்து செல்லும் தன்
சிறகுகளை
சுருக்கிக் கொண்டு !
இறகுகள்
இழக்கப் பட்டன என்று
நினைத்தேன்
என் விழிகள் முன்னால்
ஆழ் இருட்டில்
மூழ்கிக் கொண்டு !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 20, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கடற் புதல்வி நீ !
ஆரிகானோவின் சொந்தக்காரி !
நீச்சல் குமரி நீ !
மேனி நீர் போல் தூயது !
சமையல்காரி நீ !
உன் குருதி விரையும்
மணல் போல்.
புரியும் வினைகளில் எல்லாம்
பூக்கள் பொழியும் !
பூமி வாசனை வழியும் !

++++++++++

கடலை நோக்கிப் போகும்
உன் கண்கள் !
குப்பென எழும்பும்
அப்போது பேரலைகள் !
நிலத்தை நோக்கி நீளும்
உன் கைகள் !
பொங்கி முளைத்தெழும்
அப்போது விதைகள் !
உன்னுள் கலந்த
களி மண்ணைப் போல்
பூமியின் வளமையும்
நீரின் முதன்மையும் ஆழ்ந்து
நீ அறிவாய் !

+++++++++++

நாடியா !
வெட்டிக் கூறுபோடு
உன் உடலை !
அத்துண்டங்கள் புத்துயிர்
பெற்றெழும்
சமையல் அறையில் !
அதுபோல் தான்
நீ வாழும்
எதுவு மாக மாறுவாய் !

++++++++++++

தூங்கு நீ ஆதலால்
துயர்களைத் தீர்க்கும்,
எனது கைகள்
உனைக் கட்டி அணைப்பதிலே !
ஓய்வெ டுப்பாய் நீ
அப்போது !
காய் கறிகள் கடல் விதைகள்
மூலிகைகள்,
உனது கனவு
நுரைகள் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 13, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இல்லத்துக்குப் போகிறோம்
இப்போது காதலி !
திராட்சைக் கொடிகள் அங்கே
தாவிப் படர்ந்திருக்கும்
பந்தல் கம்புடன் !
நீ வருவதற்கு முன்
வேனிற் காலம் வந்து விடும்
உன் படுக்கைக்குத்
தன் பசுமைக்
கொடி யோடு !

++++++++++

நமது நாடோடி முத்தங்கள்
ஞாலம் பூராவும்
உலாவித் திரிந்தன
ஆர்மீனியா, இலங்கை
யாங்சூ நதி,
பகலும் இரவும் நமது
பொறுமையைச்
சோதித்துக் கொண்டு !

+++++++++++

என்னருமைக் கண்மணி !
இப்போது
திரும்பு கிறோம்
வசந்த காலத்தை
எதிர்பார்த்து
குமுறும் கடலின் இடையே
குருட்டுப் பறவை
இரண்டு
கூட்டை நோக்கி
ஏகுவது போல் !

++++++++++++

ஏனெனில் காதல் மனம்
பயணம் செய்ய
இயலாது
ஓய்வெ டுக்காமல் !
நமது பயணங்கள்
இல்லம் நோக்கி மீளும்
கடல் பாறை களைத்
தேடும் !
நமது முத்தங்கள் திரும்பிச்
செல்லும்
தமது இல்லம் நோக்கி !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சின்ன ராணி நீ
என் எலும்பு மேனிக்கு !
முடி சூட்டுவேன் உனக்குத்
தென்னகத்தின்
வாகை சூடி !
பசுமை இலைகளோடு
புவி உனக்குத்
தயாரித்த
கிரீடம் இலாது நீ
வாழ முடியாது.

++++++++++

உன்னைக் காதலிக்கும்
என்னைப் போல் வந்தவள்
பசுமை
வட்டாரத்தி லிருந்து !
வந்தது
அங்கிருந்து தான்
நம் குருதியில் ஓடும்
இந்தக் களிமண் !
வர்த்தகக் கடைகள்
நாம் போகும் முன்
மூடி விடுமோ என்றஞ்சி
நகரத்தில் திரிந்தோம்
குழம்பிப் போய்
நாட்டுப் புறத்தாரைப் போல் !

+++++++++++

என்னருமைக் கண்மணி !
கனிகளின்
நறுமணம் கொண்டது
உன்னிழல் !
தென்னகத்து வேரிலே
பின்னிக் கொண்டவை
உன் விழிகள் !
புறாவைப் போல் வடித்த
களிமண் பொம்மை
உன்னிதயம் !

++++++++++++

கூழாங் கற்கள் போல்
நீரில்
வழுவழுப் பானது
உன் மேனி !
புதுப் பனித் துளியில்
கொத்தானவை
உனது முத்தங்கள்
பழங்கள் போல் !
உன் அருகில் உள்ள போது
என் வசிப்பு
இந்த வைய கத்தில் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 29, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


வறுமையில் பிறந்தவள் நீ
பெரு நாட்டின்
தென்னகத்தில் உன் குடிசை !
கரடு முரடான
குளிர்ந்து போன
பூகம்ப மேடு பள்ளம் அது !
வரப் பிரசாதமாய்
வந்தவை நமக்கு
தடுக்கி விழும் தெய்வங்கள்
மடிந்த பிறகு !
வாழ்க்கைக் கலைப்பாடம்
வடித்தது
களி மண்ணிலே !

++++++++++

கருமைக் களிமண்ணில்
உருவான
சிறு குதிரை நீ !
அருமைக் காதலியே !
கருஞ் சகதி முத்த மிட்ட
களிமண்
நாய்க் குட்டி நீ !
வீதிகள் வழியே பறந்த
வைகறை
மெல்லொளிப் புறா !
உண்டியல் கும்பாவில் கண்ணீர்
மண்டியது உன்
இளமை வறுமையில் !

+++++++++++

சின்னப் பெண்ணே !
நின் வறுமை வாழ்வை
உன் நெஞ்சுக் குள்ளே
ஒளித்து வைத்தாய் !
உன் பாதங்கள்
பாறைகளைக் கூராக்க
உதவும் !
உந்தன் வாய்
உணவும் இனிப்பும்
சுவைக் காதது
எப்போதும் !

++++++++++++

வறுமைத் தென்னகத்தில்
பிறந்தவள் நீ !
என் ஆத்மா வளர்ந்தது
அங்குதான் !
உயர் மேட்டில்
ஆடை துவைப்பாள்
உன் அன்னை
இன்னும்
என் தாயோடு !
ஆதலால்
நானுன்னைத் தேர்ந்தெடுத்தேன்
பேணும்
துணைவியாய் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 21, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நேசம் ! விதையி லிருந்து விதைக்கு
செடியி லிருந்து செடிக்கு
இருண்ட தேசங்கள்
பின்வழிப் புகுந்த
புயற் காற்றின் மீதும்
ரத்தக் கறைக் காலணிகள்
பூணும்
யுத்தத்தின் மீதும்
இரவில் முள் கொண்ட
பகற் பொழுதின்
பரிவு எனக்குண்டு !

++++++++++

தீவுகள், பாலங்கள் அல்லது
தேசக் கொடிகள்,
எங்கெங்கு சென்றாலும்
வயலின்
இசைக் கருவிகள் இருந்தன
ஓடுகின்ற
இலையுதிர் காலத்தில்
குண்டு ரவைகள் இடப்பட்டு !
ஒயின் கிண்ணத்தின்
ஓரத்திலே மினுமினுக்கும்
பூரிப்பு !
துக்கம் நிறுத்தி விடும் எம்மைக்
கண்ணீரால்
கற்ற பாடத்துடன் !

+++++++++++

குடியரசு நாடுகளின்
இடையே
அகந்தை பிடித்த அரண்மனைகளை
பனிபடிந்த சிகரத்தை
அடித்து முறித்தது புயல் !
திருப்பி அளிக்கும் மலர்களைச்
சன்மானமாய்ப்
பிறகு
அவரது பணிக்கு !

++++++++++++

இலையுதிர் காலத்தில்
உதிரும் போது
எப்போதும்
எம்மைத் தொடுவ தில்லை !
எமது நிரந்தரப் பீடத்தில்
முளைத்துக்
காதல் ஓங்கி
வளரும்
பனித்துளி போல்
தகுதியோடு
ஆற்றல் பெற்று !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 7, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சில்லியின் மனங்கவர் மணல்கரை நிறமோ
கௌத மாலாவின் ரியோ துல்ஸ்
முகப்பு வாசலோ உனது
தோற்றப் பண்பாட்டை எதுவும்
மாற்ற வில்லை !
கோதுமை மிதமாக்கித்
திராட்சைப் பழம் போல்
உருண்டு திரண்ட
உன் வடிவமோ, ‘கிதார்’ வாயோ
மாற வில்லை !

++++++++++

என் இதயமே ! என்னரும் இதயமே !
எல்லா மௌனத் துக்கும் முன்பு
திராட்சை கொடிகள் அரசாளும்
மேட்டு நிலங்கள் முதல்
கீழ்த்தள நஞ்சைப் புலங்கள் வரை
ஒவ்வோர் புனிதப் பீடத்திலும்
பிரதிபலிப்பது
தரணி உன்னைத்தான் !

+++++++++++

திபெத்தின் பனிப் பொழிவு கூட
போலந்தின் கற்கள் கூட
குன்றுகளின் கூசும் தாதுக் கரங்கள் கூட
ஒன்றும் மாற்ற வில்லை
உன் கோதுமைத்
தானிய வடிவத்தை !

++++++++++++

களி மண்ணோ அல்லது
கிதார் இசைக் கருவியோ
கோதுமைத் தளமோ அன்றி
சில்லியின் திராட்சைக் கனிக் கொத்தோ
தன்னிருப்பிடத்தை
உன்மூலம் மெய்ப்பித்துக் கொள்ளும் !
நாகரீக மற்ற நிலவு
தன் விருப்பைத் திணித்துக் கொண்டு
அவை யெல்லாம் தம்
உடமைகளை
உன்னிடம் பறித்துக் கொள்ளும் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 31, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என்னரும் காதலி !
உன்னை நேசித்தற்கு முன்னே
எதுவும் சொந்த மில்லை !
ஒன்றும் மனதில் ஒட்டாமல்
புரியாமல்
உருவங்கள் ஊடே
தெருக்களில் திரிந்தேன் !
ஒரு பெயர் எதன் மீதும்
நிலைக்க வில்லை !
காற்றால் உதித்த
உலகம்
காத்தி ருந்தது எனக்கு !

++++++++++

அறைகள் பூராவும் சாம்பலென
அறிந்தவன் நான் !
நிலவு குடியிருக்கும்
குகைகளைத்
தெரிந்தவன் நான் !
குப்பைக் கிடங்குகள்
என்னைப் பார்த்துக் குலைக்கும்
“ஒழிந்து போ” எனும்
வினாக் குறிகள்
அழுத்த மாகி விடும்
மணல் தளத்தில் !

+++++++++++

எல்லாம் காலியாய்க் கிடந்தன
செத்துப் போய்
ஊமையாய்த்
தடுமாறிக் கீழே வீழ்ந்து,
ஒதுக்கப் பட்டு
உருக்குலைந்து
எண்ணிப் பார்க்க இயலாத
அந்நியமாய் !

++++++++++++

யாரோ டாவது நான்
பந்த மோடு
சொந்தமாய் இருந்தேனா ?
இல்லை !
யாரோடு மில்லை நான்
உனது அழகும்
உனது வறுமையும்
இலையுதிர் காலத்தில் பொங்கிடும்
கொடைகளாய்
என்னை
நிரப்பிடும் வரை !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 24, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


காதலோ காதல் !
வானக் கோபுரத்தில்
ஏறின முகில்கள்
சாதித்து விட்டச்
சலவைப் பெண் போல் !
நீல நிறத்தில்
மின்னும் அவை எல்லாம்
ஒற்றைத் தாரகை போல் !
கடல், கப்பல், அந்த நாள் யாவும்
புலம்பெயர்ந்தன ஒருங்கே !

நீ பருவ காலத்தில் வந்து பார்
நீரில் செங்கனிப்* பழங்களை !
பிரபஞ்சத்தின் வட்டச் சாவி
விரைவாய்க் கண நேரத்தில்
நீலத் தீயைத் தொட்டு விடும்
பூவிதழ்கள் உலர்ந்து விழுவதற்கு முன் !

ஒளிவிளக்குக் கொத்துக்கள்
எண்ணிக்கையில்
உள்ளதைத் தவிர வேறில்லை !
தென்றலின் கனிவைத்
திறந்து விட்டது
விண்வெளி
இறுதி ரகசிய நுரையை
விட்டுவிடும் வரை !

வானத்தின் நீல வண்ணம்
வாயு குன்றும் நீல வண்ணம்
இவ்விதப் பல்வேறு
நீல நிறங்களில்
சிறிது குழம்பிப் போயின
நமது கண்கள் !
உள்ளுணர்வில் அவர்கள்
உளவ இயலாது
காற்றின் ஆற்றலைத் தெரியாமல்
கடற் புதிர்களின்
காரணம் புரியாமல் !

***************************
*செங்கனிப் பழங்கள் – Cherry Fruits

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 17, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


விளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு
வெறுப்பு நிலவு நீ !
புண் படுத்திய இரகசியத்தை
மண்ணில் பரப்பும்
மல்லிகை நீ !
அச்சக் காதலி லிருந்து
வெண்மையும் மென்மையும்
கொண்ட கைகளி லிருந்து
பொழியும்
அமைதி நிலையை என்
விழிகளில் !
ஏற்றி வைக்கும்
ஒளிப் பரிதியை
எனது
ஐம்புலன் களில் !

என்னருங் காதலி !
எத்தனை விரைவில் நீ
கட்டி முடித்தாய்
இனிய ஓர் எழுச்சியை
எனது புண் பட்ட
இடங்களில் ! வேட்டைப்
பறவை யோடு நீ
போராடி
நாமிருவரும் சேர்ந்து
இப்போது
ஒற்றைக் குடித் தம்பதிகளாய்
எப்படி நிற்கிறோம்
இவ்வை யத்தின் முன்பு !

என்னினிய கொடூரக் காதலி !
என்னருமை மாட்டில்டி* !
அப்படித்தான் இருந்தது
அப்போதும் !
அப்படித்தான் இருக்கிறது
இப்போதும் !
அப்படித்தான் இருக்கும்
இனிமேலும்
அன்று மலர்ந்த
கடைசிப் பூவோடு
ஆயுட் காலம் நமக்குச்
சமிக்கை
அறிவிக்கும் வரை !

அப்புறம் நீ ஏது ?
நான் ஏது ?
ஒளி விளக்கு ஏது ?
ஆயினும்
பூமிக்கு அப்பால்
அதன் நிழல் இருட்டைத்
தாண்டி
உயிரோ டிருக்கும்
நமது காதல்
உன்னதம் !

***************************
*மாட்டில்டி – (Matilde)
பாப்லோ நெருடாவின் காதலி

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 10, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நினைத்துக் கொள்ளாமல் உன்னை
நேரே நோக்காமல், காதலி
எத்தனை முறை உன்னைப்
பித்துடன் நேசித்தேன் ! உனது
ஓரக் கண்ணோட் டத்தைப் புரியாது
யாரென அறியாது
தவறான இடத்தில் வளரும் செடியாகத்
தெரிந்து கொள்ளாது
பகலில் கரிந்து போனேன் ! ஆயினும்
கோதுமை மணத்தை மட்டும் விரும்பிக்
காத லித்தேன் உன்னை !

‘அங்கோல்’ நகரின் கோடை நில வொளியில்
ஒயின் கிண்ணத்தை நீ கையில் எடுக்க
ஒருவேளை கற்பனை செய் தேனோ ? அல்லது
நிழலில் நாண் கம்பிகளில் நான் வாசித்து
ஆரவாரக் கடல் போல் அலறிய கிதார்
சீரிசைக் கருவியின் இடையா நீ ?

உனை நான் காதலிப்பதை உணரா மலே
நினை நான் நேசித்தேன். முன்பு நான்
நேசித்ததை நினைவில் தேடிப் பார்த்தேன் !
முன்னை அறிந்தவன் நானுனை யாரென
கள்ளத் தனமாய்ப் பல இஇல்லங்களில் புகுந்து
களவாட நினைத்தேன் உனக்கு விருப்ப மானதை !

திடீரெனத் தொட்டேன் உன்னை
என்னருகில் நீ இருக்கும் போது !
உடனே
நின்று போன தென் நெஞ்சு !
என்கண் முன்னே
நிற்கிறாய் நீ !
தாக்கிடும் காட்டுத் தீ போல்
ஆக்கிர மித்தாய் ஆட்சிக் களத்தை
மாட்சிமை ராணி போல் !
கனல் அரங்கு உனது
ஆட்சிக் களம் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 4, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


தன் நறுமணத்தைக் காதல் மட்டுமே
என் மூலம் பரப்பினால்
வசந்தம் இனி வராமல் ஒரு கணம்
வாழ வேண்டி இருந்தால்
என்னருமைக் கண்மணி !
என்னை விட்டேகு
உன் முத்தங்களை மட்டும்
என் கன்னத்தில் இட்டு !

உன் நறுமணத்தால் நிறுத்தி விடு
ஒரு மாதத்தின் விளக்கொளியை !
உனது கூந்தல் முடியால் மூடி விடு
அனைத்துக் கதவுகளையும் !
அழுது கொண்டு நாளை நான் எழுந்தால்
ஏன் என்பதை மட்டும் மறக்காதே !
என் கனவுகளில் காணாமல் போனச்
சின்னஞ் சிறு குழந்தை நான் !

இரவின் இலைகள் ஊடே புரட்டித்
தேடினேன் உனது
கரங்களைப் பற்றிக் கொள்ள !
அமுதைப் போல் அள்ளிப்
ஆனந்தமாய்த்
தழுவிக் கொள்ள
உன்னைத் தேடினேன்
ஒளியும் நிழலும் இணைவது போல் !

ஒன்று மில்லை இருள் நிழலைத் தவிர
உன் கனவில் நீ என்னோடு
உலவி வந்த அந்த இடத்தில் !
என்னருமைக் கண்மணி !
செப்புவாய் எனக்கு
எப்போது விளக்கொளி மீளும்
என்று ?

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி ! >>

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என் அழகீனக் காதலி !
நீயொரு
ஒழுங்கீனக் கொழுக்கட்டை !
எனதரும் அழகியே !
உனது வனப்பு
(மாசுடைய) வாயு போன்றது !
அவலட்சண மானது
உன் வாய் !
அகண்டு இரு வாய் நீளம்
கொண்டது !
எனதரும் அழகியே !
உனது முத்தங்கள்
புதிய முலாம் பழங்களைப்
போல்பவை !

அவலட்சணம் !
நீ எங்கே மறைத்துள்ளாய்
நின் கொங்கைகளை ?
சிறுத்தவை அவை !
ஈரகப்பைச் சிற்றுண்டி !
மார்பின் மேல்
கோபுரங் களாய்ப்
பூரித் தெழுந்து
நிலவிரண்டைப் போல்
இருக்க வேண்டுமென நான்
விரும்பினேன் !

அவலட்சணம் !
கடல் கூட
கொண்ட தில்லை
உன் பாத நகங்கள் போல் !
அழகு மயமாய்
பூவுக்கு மேலான ஒரு பூவாய்
தாரகைக்குச் சீரான
தாரகையாய்
அலை அலையாய் அடிக்கும்
காதல் மோகத்தில்
நின் மேனியின் ஒவ்வோர்
உறுப்பையும்
நிறுத்துப் பார்த்தேன் !

எனது அழகீனப் பெண்ணே !
உனது
பொன் இடுப்பின் மேல்
எனக்குக்
காதல் மோகம் !
என் எழில் பெண்ணே !
உன் நெற்றிச் சுருக்கம்
தருகிறது
காதல் மயக்கம் !
என்னருங் காதலியே !
காதலிக்கிறேன்
உனது
கருமை நிறத்தையும்
நினது பளிங்கு
நெஞ்சையும் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 13, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பரிதி கடல் அலையில்
விளையாடி
பூத அலை நுரைகள் எழுந்து
இஸ்லா நெக்ராவில்*
நீல நிற உப்போடு
நின் மீது
மோதும் போது
தேனீ தன் வேலையில்
ஆழ்ந்தி ருப்பதைப் பார்க்கிறேன்
பேராசைப்
பிரபஞ்சத் தேனிலே !

வருவதும் போவதுமாய்
இருக்கிறது தேனீ !
தனது பறப்புப் பயணத்தை
சமநிலைப் படுத்தும்
கண்ணுக்குத் தெரியாத
கம்பிகளின் மீது
வழுக்குவது போல் ! அதன்
மோக நடனமும்
தாகமுள்ள இடுப்பும்
குத்திக் கொல்லும்
கூரிய சிற்றூசியைக்
கொண்டு !

ஊர்தியைப் போல்
புல்லின் இலைகளின் மேல்
ஆரஞ்சு கலந்த பன்னிற
வான வில்லின்
ஊடே
வேட்டை ஆடும் !
கூரிய ஆணி போல்
உடனே பாயும்
ஒளிந்து மறையும் !

உப்பும் பரிதி வெளிச்சமும்
அப்பிக் கொண்டு நீ
கடலை விட்டு
அமணமாய்க்
கரை ஏறும் போது
பளபளக்கும்
எதிரொளிச் சிலை வாளாய்
மீள்கிறாய் இந்த
மேதினி
மணல் மேல் !

+++++++
*Casa de Isla Negra was one of Pablo Neruda ‘s three houses in Chile. It is located at Isla Negra, El Quisco , San Antonio Province, Valparaங்so Region about 85 km to the south of Valparaங்so and 110 km to the west of Santiago. It was his favorite house and where he and his third wife, Matilde Urrutia spent the majority of their time in Chile. Neruda, a lover of the sea and all things maritime, built the home to resemble a ship with low ceilings, creaking wood floors, and narrow passageways. A passionate collector, every room has a different collection of bottles, ship figureheads, maps, ships in bottles, and an impressive array of shells, which are located in their own “Under the Sea” room.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 6, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


குன்றுகளின் ஊடே
நீயொரு
தென்றல் போல் உலவுகிறாய் !
நீயொரு திடீர்
நீரோடை போல் வீழ்கிறாய்
பனிக் கடியில் !
பரிதியின்
ஒளிச் சுடர்கள் போல்
நளினம் காட்டும்
உன் கூந்தல் திரட்சி
என் மீது !

காகசுஸ் மலையின்
ஒளிமயம்
பாய்ந்து வீழும்
உந்தன் உடம்பு மேல் !
முடிவின்றி
பட்டை ஒளி வீசும்
பளிங்குச் சிமிழ் போல் !
நீரானது
அடுத்தடுத்து மலைமேல்
ஆடை மாற்றி
அப்பால் ஓடும்
ஆற்றோடு
பண்ணிசைக்கும்
ஒவ்வோர் அசைவிலும் !

படைகள் நடந்த குன்றின் ஊடே
பழைய பாதை
வளைந்து போகும் !
அதன் கீழிருக்கும்
பழைய ராணுவத்தின்
பலமான கோட்டைத் தளங்கள் !
குன்றுகள் சேமித்த
கனிமங்களின்*
குளத்து நீர்த் தேக்கத்தில்
ஒளி வெட்டும்
உடை வாள் போல் !

உனை நோக்கி வீசி
அனுப்பும்
திடீரெனக் கானகம்
இடி என்னும்
தலை யில்லா ஆணியை,
புதிய நீல வண்ணப்
பூக்களை !
புதிரான
கடும் அம்பு போல்
தாக்கும்
காட்டு நறுமணம் !

*கனிமங்கள் (Minerals)

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 29, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


விலை மிக்க அணிகலக்
கற்களாய் நீ இருப்பாய் என்றோ
ரோஜாக்
கணை அம்புகளைக்
கனல் மூலம்
அனுப்புவாய் என்றோ
நானுன்னை நேசிக்க வில்லை !
ஏதோ கறுப்பி ஒருத்தியாய்
நினைத்து
உனை நேசிக்கிறேன்
இரகசியமாய்
என் நிழலுக்கும் ஆத்மா வுக்கும்
இடையிலே !

பூவே ஒருபோதும் மலராத,
ஆயினும்
ஒளிந்துள்ள மலர்கள் ஏந்தி
நிமிர்ந்துள்ள
பூச்செடி போல் உன்னை
நேசிக்கிறேன் !
பூதளம் மேல் எழுந்து
கருமையாய் என் உடம்பில்
இருக்கும்
ஒரு நறுமணம் நாடும்
உன் இச்சைக்கு
நன்றி கூறுவேன் !

எப்படி யானவள் நீ,
எங்கிருந்தவள் நீ,
எப்போது வந்தவள் நீ
என்று அறியாமலே
உன்னை நான் நேசிக்கிறேன் !
கர்வப் படாமல்
சிக்கல் ஏதும் இல்லாமல்
நேர்மையாக நான் உன்னை
நேசிக்கிறேன் !
ஏனெனில் இவ்வழி தவிர எனக்கு
வேறெதுவும் அறியாததால்
நானுனை நேசிக்கிறேன் !

“எனக்கு” என்று எதுவும்
இருப்ப தில்லை
அது போல்
“உனக்கு” என்று ஒன்றும்
நிலைப் பில்லை !
அருகில்
என் நெஞ்சின் மேல் இருக்கும்
உன் கரம்
என் கைகள் தான் !
உன் கண்களும் மூடி விடும்
அண்டையில்
என் கண் மூடி நான்
விழும் வேளை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -41 << காதலி இறந்தால் ! >>

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



திடீரென நீ வசிக்காமல்
போனால்
திடீரென நீ வாழாமல்
மாண்டால்
உயிரோடு வாழ வேண்டும்
நான் மட்டும் !

துணிவில்லை எனக்கு
எழுதிட !
துணிவில்லை எனக்கு நீ
இறந்து போவாய்
என்று சொல்ல !
வாழ்ந்திருக்க வேண்டும்
நான் மட்டும் !

ஏனெனில்
ஒரு மனிதனுக்கு உரிமை ஓசை
எங்கே இல்லையோ
அங்கே இருக்கும்
என் ஓசை !

கறுப்பர் அடிக்கப் படும்
நாட்டிலே
மரிக்கக் கூடாது
நான் மட்டும் !

என் சகோதரர் எல்லாம்
சிறைக்கு
ஏகும் போது நானும்
போக வேண்டும்
அவரோடு !

எப்போது வெற்றி யானது
எனது வெற்றியாக
இல்லாது
பெரிய வெற்றி கிடைத்தால்
ஊமையாய் இருப்பினும் நான்
பேச வேண்டும் !
குருடனாய் இருப்பினும் நான்
நோக்க வேண்டும் !

இல்லை என்னை மன்னிப்பாய் !
இனி நீ வாழாது போனால்
என் கண்மணி !
என்னருமைக் காதலி ! நீ
மரித்துப் போனால் என்
மார்பின் மீது
இலை தளைகள் பொழியும் !
மழை அடிக்கும் என் ஆத்மாவில்
பகலிரவாய் !
பனித் துளிகள் கொட்டி
எரிந்து போய் விடும்
என் நெஞ்சு !
சூட்டிலும், குளிரிலும்
இறப்பிலும் பனி மீதும்
தடம் வைத்து
உன் மரணத் தளம் நோக்கி
என் நடை இருக்கும் !

எல்லா வற்றுக்கும் மேலாக
எவராலும் கட்டுப்படுத்த
இயலாது
வாழ வேண்டும் நான்
தொடர்ந்து !
ஏனெனில் நீ விழைந்தாய்
அவ்விதம்
நானிருக்க வேண்டும்
என்று !
நானொருவன் மட்டும் இங்கே
மானிடன் இல்லை
எல்லா மாந்தரும்
என்னவராய் இருப்பதை நீ
அறிவாய்
அருமைக் காதலி !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 15, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -40 << யுத்த வீரன் காதலி >>

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



யுத்தப் போக்கின் மத்தியிலே
வாழ்க்கை
வழிநடத்திச் செல்லும்
உன்னை யொரு
யுத்த வீரன்
காதலியாய் !

பழைய உனது
பாட்டாடை யோடு
பகட்டு நகை யோடு
நெருப்பு மேல்
நடந்து செல்ல நீ
தெரிந்தெடுக்கப் பட்டாய் !

வா இங்கு ! தெருச் சுற்றியே !
வந்தென் மார்பு மேல்
படிந்துள்ள
செந்நிறத்துப்
பனித்துளிகளைப்
பருகிடு !

எங்கு சென்றாய்
என்றுனக்குத்
தெரிய வில்லை !
நடனத் துணை மாதுனக்கு
இப்போது
நாடில்லை !
நடனக் குழு வில்லை !

அருகில் நீ என்னோடு
வருகிறாய் !
என்னோடு உன் வாழ்வு
இணைந் துள்ளது !
ஆனால் நம்
இருவர் பின் தொடர்கிறது
மரணம் !

பட்டாடை யோடு
இப்போது நீ
நடன அரங்குகளில்
நடன மாட
முடியாது இனிமேல் !

உன் காலணிகள் தேய்ந்து
ஓய்ந்து போயின !
ஆயினும் நீ
அணிவகுப்பு
நடையில்
உயர்ந்து போகிறாய் !

நடக்க வேண்டும் நீ
முட்கள் மீது
இரத்தச்
சொட்டுக்கள் தரையில்
விட்டுச் சிந்திட !

என் கண்மணி !
எனக்கு
முத்தம் கொடு !
சுத்தம் செய்
அந்தப்
பீரங்கியை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 9, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



என்னைத் தவிர மிகுதியாய்
வேறு எவரும்
விரும்பு வதில்லை
உன் கண்ணிமைகள்
தலையணை மீதிருந்து
உலகை எனக்குத் தெரியாமல்
மூடி இருப்பதை !
அங்கும்
உனது இனிய நெருக்கத்தில்
எனது இரத்தம்
உன்னோடு பள்ளி கொள்ள
விடுவிப்பேன்
என்னை நானே !

எழுவாய் !
எழுந்து நிற்பாய் !
என்னோ டிணைந் தெழுவாய் !
இருவரும் செல்வோம்
இணைவாய் !
எதிர்த்துப் பேய்க் குழுவோடு
போரிடுவோம்
நேருக்கு நேராய் !
பசிக்கு பாதை அமைக்கும்
ஏற்பாட்டுக் கெதிராய்,
அதிகார வர்க்கத்தின்
துன்பச்
சதிகளுக் கெதிராய் !

வாராய் ! இருவரும் செல்வோம் !
தாரகை நீ எனக்கு !
வாராய் என்னுடன் !
புதிதாய் ஒரே மண்ணில்
உதித்தவள் நீ !
ஒளிந்திருக்கும் ஊற்றினை
நெருப்புக்கு இடையே நீ
தெரிந்தி ருப்பவள் !
அருகிலே நீ இருக்கும் வேளை
உனது வீர விழிகள்
உயர்த்தும் என் கொடியை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என்னோடு நீ இருப்பது
எனக்குள்ளே
எத்துணை இழப்பு எண்ணத்தை
எழுப்புது அந்தோ ?
மானிட வெற்றி வீரர்களில்
நானொருவன் !
ஏனெனில்
நீ அறிய மாட்டாய்
உன்முகம் இதுவரைக் காணாது
என்னோடு இருப்பவர்
ஆயிரக் கணக் கானவர் !
பன்முறை வெற்றி பெற்றவர்,
என்னோடு அணிவகுத்து
ஒன்றாய் நடந்த
இதயங்கள் ! பாதங்கள் !

எனை நீ அறியாதவள் ! நான்
ஏகாந்தி அல்லன் !
தனித்து வசிப்போன் அல்லன் !
அணி வகுப்பில்
என்னோடு வருவோருடன்
மட்டும்
முன் வரிசையில்
நின்று
வழி நடத்துவேன் !
வலுப் பெற்றவன் நான் !
ஏனெனில்
என்னோடு இருப்பது
சின்னஞ் சிறிய
என் வாழ்வு மட்டு மின்றி
எல்லாரது வாழ்வுகளும்
பின்னியது !

தளராத நடையில்
நான் முன்னோக்கிப் போகிறேன்
ஏனெனில்
ஆயிரம் விழிகள் எனக்கு !
தாக்கி அடிக்க இருக்கிறது
பாறைப் பளு எனக்கு !
காரணம்
ஆயிரம் கைகள் எனக்கு !
உலகக் கடற்கரை எங்கணும்
ஒலிக்கும் குரல் எனக்கு !
ஏனெனில்
பேசாதோர், பாடாதோர்
எல்லோரது
ஓசை முழக்கமும் சேர்ந்தது !
இன்றைக்கு அவர் இசைக்கும்
இக்குரல்
உன்னை முத்தமிடும்
என் வாய்க் குரல் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 25, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


அந்தோ வேண்டாம் உனக்கு
நீ அஞ்சிடும்
வறுமைப் பிணி !
அறுந்த செருப்புடன்
கடைத் தெருவுக்கு நீ போக
வேண்டாம் !
மீண்டும் இங்கு வா
உந்தன் பழைய
உடையோடு !

என்னரும் காதலி !
இன்னலோடு
நாம் வாழச் செல்வந்தர்
நாடுவது போல்
நமக்குள் பாசப் பிடிப்பில்லை !
இதுவரை
மானிட இதயத்தைக் கடித்த
வறுமையை
வேண்டாத பல்லைப் போல்
தோண்டி எடுப்போம் !

அதற்கு நீ அஞ்சுவதை நான்
விரும்ப வில்லை !
என் தவறால்
வறுமை
உன் குடிசைக்குள் புகுந்து விட்டால்
வறுமை உன்
பொன் காலணியை
நீக்கி விட்டால்
உன் புன்னகை மட்டும்
நீங்காமல்
பார்த்துக் கொள் !
அது என் உயிர் வாழ்வுக்கு
ஓர் உணவு !

உன்னால்
வீட்டுக்கு வாடகை தராமல்
போனாலும்
வேலைக்குப் போ வழக்கம் போல்
செருக்கு நடையோடு !
நினைவில் வைத்துக் கொள்
உனை நான்
கண்கா ணித்து வருவதாக !
என்னரும் காதலி !
இப்புவியில் என்றென்றும்
நாமிருவரும் தான்
சேமிக்கப்பட்ட
மாபெரும் சொத்து !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஒரு குன்று உள்ளது
என் தேசத்தில் !
ஒரு நதியும் உள்ளது
என் தேசத்தில் !

என்னோடு வா !

மேலே ஏறிச் செல்லும் இரவு
மலை மீது !
கீழே இறங்கி வரும் பசி
நதி நோக்கி !

என்னோடு வா !

எவராக இருக்கப் போகிறார்
துயர்ப் படுவோர் ?
எவரென்று நானறியேன்
ஆயினும் அவர் அனைவரும்
என் தேச மக்கள் !

என்னோடு வா !

என்னைத்தான் விளிக்கிறார் மக்கள்
எனக்குத் தெரியவில்லை !
என்னிடம் முறையிடுகிறார் :
தாங்கள் யாவரும்
இன்னல் அடைவதாய்ச்
சொல்லி !

என்னோடு வா !

என்னிடம் சொல்கிறார் அவர்கள் :
“உமது மக்கள்
அதிர்ஷ்டம் இல்லாதவர் !
மலைக்கும் நதிக்கும் இடையில்
பசியோடும் துயரோடும்
தனியாய்ப்
போராட விரும்பிலர் !
காத்திருக்கிறார் உமது உதவிக்குத்
தோழரே !

நீ தான் எனக்கு !
உன்னைத்தான்
நான் காதலிப்பது
சின்னப் பெண்ணே !
என் கோதுமைச்
செங்கதிரே !

எமது போராட்டம்
கடுமை யானது !
நமது குடிவாழ்வும்
கடின மானது !
ஆயினும் நீ என்னோடு
அருகில் வா !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 11, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன் பாதம் முதல்
உன் கூந்தல் வரை பளிச்சிடும்
ஒளிச் சுடரும்
உன் மெல்லிய உடலுக்குள்
ஒளிந்துள்ள வல்லமையும்
உன்னத முத்துக்கள் அல்ல !
சில்லிட்ட வெள்ளியும்
அல்ல !
நீயோ கோதுமைப்
பண்டத்தில்
உண்டாக்கப் பட்டவள் !
வெப்பக் கணப்பில் விளைந்த
மாவுப் பதார்த்தம் !

தானியப் பயிர்கள்
அறுவடை செய்த போது
மேனிக் குள்ளே வளர்ந்தன
உன்னதக் கதிர்கள் !
தக்க பருவ காலத்தில்
உப்பிய மாவுப் பதார்த்தம் !
உருண்டு திரண்டு பொங்கின
இரண்டு கொங்கைகள் !
என் காதல்
எரியும் நிலக்கரியாய்
உனக்குக்
காத்திருக்கும் தயாராய்க்
காசினியில் !

கோதுமை ரொட்டி போல்
குவிந்த நெற்றி
உன்னிரு கால்கள் !
உன் வாய் இதழ்கள் !
நான் புசிக்கும் உணவாய்த்
தோன்றினாய் நீ
உதய வேளை ஒளியோடு !
என் காதலி
பச்சைக் கொடி காட்டும்
கோதுமைத்
தின் பண்டம் !

குருதியின் பாடத்தைக்
கற்றுக் கொடுத்தது உனக்கு
அக்கினி !
கோதுமை மாவிலிருந்து !
உனது புனிதத்தை
நீயே
உணர்ந்து கொண்டாய்
உன் தாய்மொழியும்
உன் நறுமணமும்
கோதுமைப்
பண்டத்தி லிருந்து
உண்டானவை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 4, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பெண்டிரே !
மாபெரும் காதலில் மயங்கி
மாயக் காதல் தேடிப்
போகும்
மங்கையரே
என்ன நேர்ந்தது ?

ஒரு வேளை காலமா ?
காலத்துக்கு நீ
காத்தி ருக்கிறாயா ?

காரணத்தை இப்போது
காணலாம் இங்கு !
சொர்க்கத்தின்
வசீகரக் கற்களைக்
கவர்ந்து கொண்டு
கடந்து செல்வதை நோக்கு
பூக்களையும்
புற்களையும் அழித்துக் கொண்டு,
நுரை அரவ மோடு,
ஆண் விந்தும்
மல்லிகைப் பூ மணத்தோடு
குருதி கசியும்
நிலவுடன் !

இப்போது நீ
குள்ளப் பாதத்தை
நீரில் இட்டு
உள்ளத்தில் விரும்பி
என்ன செய்வதென
ஒன்றும் புரியாது
நிற்கிறாய் !

சில இராப் பயணங்கள்
நலம் அளிப்பவை !
சில வாகனப் பெட்டிகள்
செம்மை யானவை !
உலாவிச் செல்லும்
சில மகிழ்வு நடைப் பயணங்கள்
சிறந்தவை !
பெருத்த விளைவுகள்
இல்லாத
சில நடனங்கள்
தொடர்வதைத் தவிர
தடை ஏது மில்லை !

பயத்துக்கு மடிவதை
அல்லது
குளிருக்குத் தயங்குவதை
அல்லது
ஐயத்தால் மரிப்பதை
உனது நெஞ்சுக் குள்ளோ
உனக்கு அப்பாலோ
கண்டுபிடித்து விடுவேன்
நீண்ட நடை
கொண்ட நான் !
அடையாளம் கண்டு விடுவாள்
அவளும் என்னை !
காதலைக் கண்டு
நடுங்காமல்
மோகத்தில் பிணைந்து
பிறப்பிலும் இறப்பிலும்
பின்னிக் கொள்வாள்
என்னோடு !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 27, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -33 << எல்லைக்குள் காதல் >>

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


வையம் போல் விரியும்
கைப்பிடி யில்லாக்
கிண்ணத்தில் உள்ள காதலையும்,
விண்மீன்களும் முட்களும்,
பின்னி யுள்ள காதலையும்
நான் உனக்கு அளித்தேன் !
ஆயினும்
குள்ளப் பாதத்தில்
நீயோ
குதியுயர்ந்த
அழுக்குப் பாத அணி மாட்டி
அக்கினி மேல் நடந்து
அணைத்து விட்டாய் !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

போராட்டத்தில் நான்
பின்வாங்க விட வில்லை !
வாழ்வை நோக்கிப் போக
சமாதா னத்தை நாட
எல்லோ ருக்கும் உணவுத் தேடத்
தடை செய்ய வில்லை !
கரங்களில் தூக்கி உன்னை
முத்தமிட்டேன் இறுகக்
கட்டிக் கொண்டு !
மனிதக் கண்கள்
இதுவரைத்
துணியாத முறையில்
துருவிப் பார்த்தேன் உன்னை !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

அப்போது என் தர உயர்வை
அளக்க வில்லை நீ !
உனக்காக உணவு, நீர்,
உதிரத்தை
உதாசீனம் செய்தவனைக்
குழப்பி விட்டாய்
உனது கீழ் உடுப்புக்குள்
ஒரு சிறு பூச்சி
உட்சென்ற போது !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

தூரத்தி லிருந்து உன்னை நான்
திரும்பிப் பார்ப்பேன் என்று
எதிர்பார்க் காதே !
நின்று கொள் நான்
உனக்களித்த சீதனத்துடன் !
நடந்து போ நீ
நய வஞ்சகம் செய்யப் பட்ட
என் படத்துடன் !

தொடர்ந்து செல்லும் என் பயணம்
அகண்ட பாதைக்கு
வழி திறந்து
நிழலை எதிர்த்து
வையத்தை வழுவழுப் பாக்கி !
விண்மீனின் சுடரொளியை
பரப்பி வைப்பேன்
என்னை
வரவேற் பவர்க்கு !

நிற்க வேண்டும் பாதைக்குள் !
நெருங்கி விட்டது
இரவு வேளை !
பொழுது புலர்ந்ததும்
மறுபடியும்
ஒரு வேளை
சந்திக்கலாம் நாம்
ஒருவரை ஒருவர் !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 20, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் ! >>

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஒன்றை நீ அறிந்து கொள்ள
வேண்டு மென்று
நான் விரும்புகிறேன் !

இது எப்படி என்று
தெரியும் உனக்கு !
பலகணி வழியே
செந்நிறக் கிளை ஊடே தெரியும்
இலை உதிர் காலத்துப்
பளிங்கு நிலவை நான்
பார்த்திடும் போதும்,
நெருப்பின் அருகில்
கரத்தை வைக்கும் போதும்
ஆறிப் போன சாம்பலும்
முறிந்த மோன
மரக் கட்டையும்
என்னை ஏந்திச் செல்லும்
உன்னிடம் !
நறுமணம், சுடரொளி,
உலோகம் போல்
உலகில் நிலவிய ஒவ்வொன்றும்
சிறிய படகுகளாய்
உனது தீவை நோக்கிச் சென்று
எனக்குக் காத்திருக்கும் !

நீ இப்போது என்னை
நேசிக்காது
சிறிது சிறிதாய்
நிறுத்திக் கொண்டால்
நானும்
சிறிது சிறிதாய்
நிறுத்தி விடுவேன்
உன்னை
நேசிப்பதையும் !

திடீரென என்னை நீ
மறந்து போனால்
தேடி வராதே
என்னைத்
திரும்பக் காண்பதற்கு !
ஏனென்றால்
நான் உன்னை
ஏற்கனவே
மறந்து விட்டேன் !

என் வேர்கள் முளைத்துள்ள
கடற் கரையிலே
என்னை விட்டு நீ
விலகிச் செல்ல
முடிவு செய்தால்,
அன்றைய தினத்தில்
பித்துடன்
ஆழ்ந்து நீ சிந்தித்தால்
என் வாழ்வில் எதிர்ப்படும்
சினப் புயலை
நினைவில் வைத்துக் கொள்

அந்த மணி நேரத்தில்
எந்தன் கரங்களை
உயர்த்த வேண்டும் நான் !
எந்தன் வேர்கள்
அடுத்த தேசத்தை நோக்கிப்
பயணம் செல்லும் !

ஒவ்வொரு தினமும்
ஒவ்வொரு மணிப் பொழுதிலும்
எனக்குரியவள் நீ யென
இனிமை யோடு
உணர்வா யானால்,
அனுதினமும் மலரொன்று
உனது உதடுகள் மேல்
ஏறிச் சென்று
என்னைத் தேடுமானால்,
எனக்குரியவளே !
என் நேசகி !
கனற் பொறிகள் யாவும்
மீண்டெழும் எனக்கு !
எதுவும் அணையாது, மறக்காது
என் காதலி !
உன் காதலே
என் காதற் பசி ஆற்றும்
நீ வாழும் வரை !
நிரந்தரமாய் இருக்கும்
உன் கைகளுக் குள்ளே
என் கைகள்
பின்னிக் கொண்டு !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 13, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -31 << என் கனவு ! >>

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



கடல் மணல் மீது நான்
நடந்த போது
உன்னை விட்டு விலகத்
தீர்மானித்தேன் !

நடுங்கி வந்த
கருங் களிமண் மேல்
கால் தடம் பதித்தேன் !
களிமண் ணுக்குள்
கால்கள் முங்கியும்
மேல் எழுந்திடும் போது
உறுதி செய்கிறேன் :
என்னி லிருந்து நீங்கி நீ
வெளிவர வேண்டும் என்று !
பளுப் பாறையாய்
அழுத்தி
என்னைக் கீழே
அமுக்கிக் கொண்டிருக்கிறாய் !
உன் வேரைப் பிடுங்கிக்
காற்றில்
பறக்க விட்டு
படிப் படியாய்
உன்னை இழந்து போவதால்
என்ன நஷ்டம்
ஆகும் என்று
எண்ணிப் பார்க்கிறேன் !

ஆகா ! என் கண்மணி !
ஒரு கணத்தில்
கனவு ஒன்று
கொடூர இறக்கை யோடு
போர்த்திக்
கொண்டுள்ளது
உன்னை !

உணர்ந்து கொண்டாய் நீயே
உன்னைக் களிமண்
விழுங்கிக் கொள்வதாய் !
உடனே நீ
விளித்தாய் என்னை !
ஆயினும்
விரைந்திட வில்லை நான் !
எதிர்ப்பின்றி நீயே
அசைவின்றிப்
புதைந்து கொண்டிருந்தாய்
புதைமண்ணில்
மூச்சு முட்டி !

என் முடிவு பிறகு
வெறுப் போடு
எதிர்கொண்டது
உன் கனவை,
உதிரும் நம் இதயங்களின்
முறிவுகளை !
மீண்டெ ழுந்தோம் இருவரும்
தூய காதலராய்
நிர்வாணத்தில்
கனவின்றி,
களிமண் ணின்றி
கதிரொளி முழுதாய் வீசிக்
கனல் நம்மைக்
கவச மாக்கி !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 6, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன்னைத்தான் தேர்ந்தெடுத்தேன்
எல்லாப் பெண்டிருக்குள்ளே
இந்தப் பூமியில் !
நடன மிடும் என் இதயம்
நாட்டிய அணியோடு
அல்லது
போராட்டம் புரியும்
தேவை யான போது
திசை தெரியாது !

என் மகன் எங்கே
என்றுன்னைக் கேட்டேன் ?
என்னை உணர்ந்து கொண்டு
எனக்குள்ளே சொல்லிக் கொண்டு
உன்னுடைய
கருவுக் குள்ளே
எதிர்பார்க்க வில்லையா
என்னை நானே ?
என் மகனை
எனக்குத் திருப்பிக் கொடு !

இன்பக் கதவுகளுக் கு:ள்ளே
மறந்து விட்டாயா
மகனை ?
பகைத்து வீணாக்குபவளே !
சந்திக்கும்
இந்த இடத்துக்குப்
பந்த பாசமோடு
வந்திருப்பதை நீ
மறந்து போனாயா ?
நாமிருவரும் இணைந்து
அவன் வாய் மூலம்
எனது காதலைச் சொல்லியதை
மறந்து போனாயா ?
நமக்குள்ளே
ஒருவரிடம் ஒருவர்
உரைக்க முடியாமல் போனது
ஒவ்வொன்றும்
உனக்கு
நினைவில் உள்ளதா ?

நெருப்பும் குருதியும்
கலந்த அலையி லிருந்து
மீட்டுன்னை நான்
மேலே
தூக்கும் போது
இரட்டிப் பானது வாழ்க்கை
நமக்கிடையே !
எவரும் நம்மோடு
இதுவரை உரையாட வில்லை !
ஒருவர் நம்முடன் உரையாட
வரும் போது
பதில் பேசாது போனால்
தனித்து விடப் படுவோம்
பயந்த கோழைகளாய் நாம்
தவிர்க்கும்
இந்த வாழ்விலே !

வாழ்வை வீணாக்கு பவளே !
வாசற் கதவைத் திற !
உன் இதயத்தில்
உள்ள முடிச்சை அவிழ்த்துப்
பறந்து போ
இந்தப் பூமி வழியே
என் குருதியும் உன் குருதியும்
எடுத்துக் கொண்டு !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 30, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மூழ்கி விடுகிறாய் நீ சில வேளை
ஆழ்ந்த மௌனக் குழிக்குள்
வீழ்ந்து கொண்டு !
கர்வக் கோபத்தில்
தத்தளித்து நீ
மீண்டு வருவது அபூர்வம்
உன் பிறவி அடிப்படையின்
மிச்சங்கள்
இன்னும் மேலெழுந்து
வந்திடும் உனக்கு !

என்னருமைக் காதலி ! நீ
என்ன காண்கிறாய்
உன் மூடிய கிணற்றில் ?
கடற்பாசிகள்
சதுப்புநிலச் சேறு, பாறைகள் ?
கசப்போடு
காயப் பட்டு
குருட்டுக் கண்களில் நீ
காண்பது என்ன ?

காண முடியாது கண்மணி !
எதனையும்
தவறி நீ வீழ்ந்த
கிணற்றுக்குள் !
பனித்துளி மேவும்
மல்லிகைப் பூங்கொத்து,
பள்ளத்தை விட
ஆழ்ந்த ஒரு முத்தம்,
உனக்காக நான்
உயரத்தில் வைத்தேன் !

அஞ்ச வேண்டாம்
எனைக் கண்டு நீ !
வெறுப்புக் கிணற்றில் நீ
விழ வேண்டாம்
மறுபடியும் !
உலுக்கி விடு
உன்னைக் காயப் படுத்த
வந்திடும்
என் வார்த்தையை !
வெளியே றட்டும் அது திறந்த
பலகணி வழியாக !
வந்திடும் அது
என்னைக் காயப் படுத்த நீ
உந்தி அனுப்பாமல் !
கடுப்பூட்டும் அச்சொற்கள்
விடுவிப் படையும் என்
நெஞ்சை விட்டு !

புன்னகை புரி ஒளியோடு
என் வாய் உன்னைக்
காயப் படுத்தினால் !
தெய்வக்
கதைகளில் வந்திடும்
கதா நாயகன் போல்
ஆடுகள் மேய்க்கும்
நானொரு சாந்த
மானிடன் இல்லை !
நல்ல மரவெட்டி !
மண்ணை, காற்றை மற்றும்
மலைக்காடு முட்களை
பகிர்ந்து கொள்பவன்
உன்னோடு !

என்னை நேசிப்பாய் நீ !
புன்னகை புரி
என்னை நோக்கி !
உதவி செய் எனக்கு நான்
உத்தமனாக !
என்னுள் இருக்கும்
உன்னைக்
காயப் படுத்திக் கொள்ளாய் !
எனெனில்
ஏது பயனு மில்லை !
என்னையும்
காயப் படுத்திச் செல்லாய்
நீயும்
காயப் பட்டுக்
கொண்டதால் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 23, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் ! >>

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



புண்படுத்தி விட்டேன் உன்னை
என் கண்மணி !
துன்புறுத்தி விட்டேன் கிழித்து
உன் ஆத்மாவை !

புரிந்து கொள்
என்னைச் சரியாய் !
அறிவார் என்னை
ஒவ்வொரு நபரும்
நன்றாய் !
“நான்” என்னும் தனித்துவமும்
நான் உனது
நாயகன் என்னும்
நேயமும் சேர்ந்திருக்கும் !

என் நடத்தை தடுமாறிப் போனது
உன்னிடம் !
ஏறி இறங்கும்
எனது மோகத் தீ !
எல்லாப் பிராணிகள் போல
என்னைப் பலவீனனாய்க்
காண்பது
உன் உரிமைப் பாடு !
உணவு பண்ணி
இசைக் கருவி மீட்டும்
உன் மெல்லிய கரங்கள்
தடுக்க வேண்டும்
என்னை
இதயம் சண்டைக்கு
ஏகும் போது !

ஆதலால் நான் நாடுகிறேன்
நிலைத்த
சிலையாக உன்னை !
உன் குருதியில் நனைந்து
என் இரும்புக் கரங்கள்
உறுதியை தேடு கின்றன
உன்னிடம் !
உனது ஆழ்ந்த சிந்தனை
எனக்குத் தேவை !
உனது வெண்கலச் சிரிப்பு
எனக்குக் கேட்டால்,
எனது கடூர நடத்தைக்குக்
காரணம்
ஏது மில்லை என்றால்,
ஏற்றுக் கொள் நீ
போற்றத் தகுந்தவளே !
எனது துயரத்தை
என் சினத்தை !
மன்னித்திடு
உன்னை மெல்ல அழிக்கும்
என் பகையாளிக் கைகளை !
களிமண்ணில் உருவாகி
வெளியே வருவாய் எனது
போராட்டங் களுக்காக
புதுப்பித் துன்னை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 16, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



காதலி உன்னைச் சீர்குலைத்தது
ஒரு கேள்வி !
மீண்டும் வந்தேன் உன்னிடம்
முள்ளான ஐயமுடன் !
வாளைப் போல் நேராக நீ
வந்திட விழைகிறேன் !
அல்லது உன் பாதை நேராக
அமைய வேண்டும் !
ஆயினும் நான் விரும்பாத
ஓர் நிழலை
முடுக்கு மூலையில் நீ
வைத்திருக்க வற்புறுத்துவாய் !

என் கண்மணி !
புரிந்துகொள் என்னை
உன்னை முழுமையாய் நான்
காதலிக் கிறேன்
கண்கள் முதல் கால்கள் வரை
ஒளிச் சுடராய் வைத்துள்ள
உன் உள்ளழகை !

உன் கதவைத் தட்டுவது
நான்தான்
என் கண்மணி !
அது பேயில்லை !
உன்னை ஒரு சமயம்
ஜன்னல் வழியாய்த்
தடுத்து நிறுத்திய ஒன்றில்லை !
கதவை உடைத்துத்
தள்ளி விட்டுப்
புகுந்தேன் உன் வாழ்வில் !
உன் ஆத்மா வுக்குள் வாழக்
குடி புகுந்தேன் !
ஆனால் என்னோ டிசைந்து
வாழ முடிய வில்லை
உன்னால் !

ஒவ்வொரு கதவாக நீ
திறக்க வேண்டும்
என் ஆணைக்குக் கீழ்ப் படிந்து !
திறந்திடு உன் கண்களை !
தேட வேண்டும் நான்
அவற்றுக் குள்ளே !
தடதட வென்று ஒலிக்கும்
என் கால்
எட்டு வைப்புகள்
பாதை நெடுவே
எப்படி உள்ள தென
எட்டிப் பார்க்க வேண்டும் நீ !

அஞ்ச வேண்டாம் நீ
உனக்கு உரியவன் நான் !
ஆயினும் நானொரு
வழிப் போக்கன் அல்லன்
பிச்சை எடுப்பவனும் அல்லன் !
நீ காத்திருந்த
உன் எஜமானன் நான் !
இப்போது நான் நுழைகிறேன்
உன் வாழ்க்கையில் !
தேவை இல்லை வேறெதுவும்
காதலி ! காதலி ! காதலி !
அங்கு நான்
தங்குவதைத் தவிர !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



காதல் ஒரு பயணம்
கடலோடு விண்மீனோடு
மூச்சு முட்டும் வாயு வோடு
சூறாவளித் தூசி யோடு
பின்னிய
மின்னல் அடிப்புக்கள் தான்
காதற் பயணம் !
ஈர் உடல்களை இளகச் செய்யும்
ஒற்றைத் தேன் அமுது !

முத்தம் முத்தமாய் ஈந்து
பயணம் செய்கிறேன்
முடிவில்லா
உன் சிற்றுலகில்
உனது வேலிகளில்
உனது நதிகளில்
உனது சிற்றூர்களில்
உனது ஜனன
உறுப்புக் கனல் சுவையில்
ஊறிப் போய்
மாறிப் போய் !

++++++++++++++++

<< நானின்றி நீ மடிவாய் >>

மறுபடியும் உன்கால் பாதம் எனைக்
புறக்கணித்துச் சென்றால்
அப்பாதம்
அறுத்து விடப்படும் துண்டாய் !

வேறு பாதைக்கு உன்கை உன்னை
இழுத்துச் சென்றால்
அந்தக் கை
அழுகிப் போய்விடும் வீணாய் !

என்னிட மிருந்து உன் வாழ்வை
முறித்துக் கொண்டால்
மரணமே உனக்கு
உயிருடன் நீ வாழ்ந் தாலும் !

நீடித்த மரணத்தில் கிடப்பாய் !
நீ அல்லது
நிழலாய் நகர்வாய்
நானில் லாத இந்தப் பூமியில் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 2, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -25 << நாமிருவர் எப்போதும் >>

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உனக்கெதிரே நிற்கும் போது
எனக்கில்லை பொறாமை !
ஓர் ஆடவ னோடு வா
உன் முதுகிலே
ஏற்றிக் கொண்டு !
நூறு ஆடவ ரோடு வா
உன் கூந்தலிலே
வாரிக் கொண்டு !
ஆயிரம் ஆடவ ரோடு வா
உன் மார்புக்கும்
பாதங் களுக்கும் இடையே
ஏந்திக் கொண்டு !
என்றைக்கும் நுரை பொங்கும்
கால நிலைச்
சீற்ற முள்ள கடலில்
சேர்ந்திடும்
ஆற்றைப் போல் ஓடி வா
மூழ்கிப் போன
மனித ரோடு !

இழுத்துக் கொண்டு வா
எல்லோரையும்
காத்துக் கொண்டிருக்கும்
என் இடத்துக்கு !
ஆயினும்
நாமிருவர் மட்டும்
ஏகாந்தமாய் இருப்போம்
எப்போதும் !
இல்வாழ்வை ஆரம்பிக்க
நீயும் நானும் மட்டுமே
எப்போதும்
வாழ்ந்திருப் போமிந்த
வையத்தின் மீது !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 23, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன்னிட முள்ள தவறென்ன ?
நம்மிட முள்ள தப்பென்ன ?
நமக்கென்ன நேர்ந்து விட்டது ?
நம்மைக் கட்டிப் போட்டுக்
காயப் படுத்தி வரும்
காதல் நாண்
கரடு முரடானது !
நமது காயத்தை நீக்கவோ
நட்பை அறுத்துக் கொள்ளவோ
நாமிருவரும் விரும்பினால்
நமக்கு அது
புது முடிச்சைப் போடும்
அப்போது !
நம்மைக் கண்டிக்கும் !
நம் குருதியை வீணாக்கும் !
நாமிருவரும்
எரிந்து போவோம்
ஒன்றாக !

உன்னிட முள்ள குற்றம் என்ன ?
உற்று நோக்கினேன் !
ஒன்றும் காண வில்லை
உன்னிடம்
உன்னிரு கண்கள் தவிர !
எல்லோரையும் போல் காணும்
கண்கள் தான் !
நான் முத்த மிட்ட
ஆயிரம் வாய்களில்
இழந்து போன ஒன்றுதான்
உனது வாய் !
நினைவை விட்டு நீங்காத
நான் தழுவிய
மேனிகள் போலிருக்கும்
மிக்க வனப்புள்ள
உன் உடம்பு !

எத்தகைய இல்லாமையில் நீ
இத்தரணி வழியே
பயணம் செய்திருக்கிறாய்
பழுப்பு நிறக் குவளை போல்
காற்றில்லாது
புகாரின்றி ஓலமிடாது
பொருளின்றி ?
உன்னிடம் தேடினேன் வீணாக,
ஓய்வின்றிப்
பூமிக்குக் கீழே
உன் தோலுக் குள்ளே
விழிகட் குள்ளே
விழுந்த தனங்களின் கீழே
அடித் தளத்தில்
தோண்டும் கரங்களுக்கு
வேண்டிய ஆழத்தை !
பட்டை தீட்டிய
பளிங்குச் சீரமைப்பாய்ப்
பாடி ஓடும்
ஓட்டம் ஏன்
பாய்ந்தோடுது ?
ஏன் ? ஏன் ? ஏன்
என் பைங்கிளி ?

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 16, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன் வாய், உன் குரல்,
உன் கூந்தல்
அனைத் துக்கும் ஏங்குவேன்
மௌனப் பசியில் வாடி !
இரை தேடிச் செல்கிறேன்
தெருவிலே !
ஊட்டம் அளிப்பதில்லை
உணவு வகைகள் !
காலை விடிவு
என்னைக் கொந்தளிக்க வைக்கும் !
உன் பாதத் தடங்களை
அளந்திட
அடிக்கோல் தேடுகிறேன் !

உன் தனித்துவச் சிரிப்பினைக்
காணப் பசி எனக்கு
உண்டாகும் !
காட்டுத் தனமாய்ச் செய்த
அறுவடைக்
கறை நிறத்தில் உன் கைகள்
காணப்படும் !
வெளுத்த விரல்களின்
பவளக் கல் நகங்களைப்
பார்க்கப் பசி !
வாதாம் பருப்பு போன்ற
உன் சதையைச்
சுவைத்திட இச்சை எனக்கு !

சூரிய ஒளிநடனம்
பொன்னுட லாக்கும்
உன்னெழில் மேனியைச்
சுவைத்திட இச்சை எனக்கு !
அகந்தை முகத்திலே
உள்ளது உனக்கு
அரச பரம்பரை மூக்கு !
மின்னல் வெட்டும்
இமைகளின் நிழலைச்
சுவைத்திட இச்சை எனக்கு !

இங்கு மங்கும்
இச்சை மிகுந்து நான்
நடமாடி வருகிறேன் !
காலை இளம் பரிதியின்
கதிரொளியைச்
சுவாசித்து
வேட்டை யாடுவேன்
உன்னையும்
உன் நெருப்பு நெஞ்சையும்
வெட்ட வெளியிலே
பெருவியன்
வேங்கை போல் தேடி !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 9, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இசைபோல் செடிபோல்
இந்த அழகி
மென்மை யானவள் !
வைரம், பஞ்சு, கோதுமை,
பீச் கனி வழியாக
ஒளி ஊடுருவி உருவாக்கிய
ஓர் உயிர்ச் சிலை அவள் !
இப்போது அனுப்புகிறாள்
வெளியே
அலைகளின் மீது
அவளது
புதிய நறுமணத்தை !

வெய்யில் பதம் படுத்திய அவள்
பாதத் தடங்களை
மணலில் அச்செடுத்துக்
காட்டும்
கடல் அலை நீரடிப்பு !
இப்போ தவள்
பெண் நெருப்பில் மலர்ந்த
ஒரு ரோஜா !
உதய சூரியனைக் கடலைப்
பந்தயத்தில் எதிர்க்கும்
ஒரு நீர்க் குமிழி !

ஏதொன்றும் தொடுவ தில்லை
உன்னை
குளிர்ந்த உப்பினைத் தவிர !
தொடர்ந்து வரும் வசந்த
காலத்தைக்
காதலும் பாதிக்காது !
முடிவில் லாத கடல் நுரை
எதிரொலிக்கும்
வனப்பு மங்கை அவள் !
உனது சிற்ப இடுப்பானது
அன்னத் துக்கும்
மல்லிகை மலருக்கும்
புத்தளவை உண்டாக்கும்
உன் உடற் கட்டுப்
பளிங்கு நீரிலே
மிதக்கும் போது

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 2, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு ! >>

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பெருவியன் கழுகு நான் !
பறப்பேன்
விரைந்து செல்லும் உன் மீது !
திடீரெனத்
தாக்குவேன் உன்னை
இறக்கையால்
சுழற்சி விசைப் புயலாய்க்
கூரிய
பாதத்தின் நகங்களால் !
தூக்கிச் செல்வேன்
உன்னை
ஊளையிடும் சூறாவளிக்
கூதலில் !

என் குளிர்ப்பனிக் கோபுர
உச்சியில்
உன்னைத் தூக்கி வைப்பேன்
இருள் சூழ்ந்த எனது
பருந்துக் கூட்டில் !
இறகுகளைப்
போர்த்திக் கொண்டு நீ
தனித்து வாழ்வாய் !
அசையாமல்
பூமிக்கு மேல்
பறந்து செல்வாய்
உயரத்தில் !

பெண் கழுகே !
நாமிருவர்
பாய்ந்து பற்றுவோம்
இந்தச்
செந்நிறப் பிராணியை !
கிழித்து விடுவோம்
தளிர்க்கும் அந்த வாழ்வை
இருவரும் எழுந்து செல்வோம்
ஒருங்கே நமது
கோட்டித் தனமான
வேட்டை யாடலில் !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 26, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -20 << காம வெறி ! >>

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நான் ஒரு வேங்கை !

நான் ஒரு வேங்கை !
காத்துக் கிடப்பேன் பதுங்கி
இலைகளுக் கடியில்
ஈரக் கனிமத்தில்
உப்பி விட்ட
உலோகக் கட்டிபோல் !

மூடுபனிக் கடியிலே
நீளமாய்
ஓடுது வெண்ணிற ஆறு !
நீ வருவாய் அங்கே !
உடுப்பணி யாது
நீரில் முங்குவாய் !
காத்திருப்பேன் நான் !

பாய்வேன் உன்மேல்
நெருப்பாக நான்
இரத்த வெறி பிடித்து !
பற்களால் கிழித் தெறிவேன்
உன் முலையை !
உன் சிற்றிடையை !

உறிஞ்சிக் குடித்தேன்
உன் குருதியை !
உடைத் தெறிந்தேன்
உன்னுடல் உறுப்புகளை
ஒவ்வொன் றாக !

பல்லாண்டு காலமாய்
வனாந்திரக் காட்டிலே
கவனித்து
வருகிறேன் அசையாது உன்
எலும்புகள் மீது
எரிந்த சாம்பல் மீது
வெறுப்பைத் தாண்டி
கோப மின்றி
உன் மரணத்தில் வலுவிழந்து !
என் மீது காட்டுச் செடிகள்
படர்ந்திட அசையாது
மழையிலே
காவல் புரிகிறேன்
கருணை யோடு என்
காமக் கொலையை !

+++++++++++++++
கனிமம் – Mineral

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை !>>

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன்னை நான் பிரிந்திருந்தது

வெகு அபூர்வம் !

மன உலைச்ச லோடு,

அல்லது

நடுக்க மோடு

அல்லது

நான் உண்டாக்கிய

காயத் தோடு

அல்லது

காதல் மோகத் தோடு

மூழ்கிப் போயுள்ளாய் என்னுள்

பளிங்குச் சிலை போல்

தடையின்றி

நான் தந்த சுக வாழ்வுக்

கொடையில்

சொக்கிப் போய் !

என்னருமைக் காதலி ! நாமே

ஒருவரை ஒருவர்

கண்டுபிடித்தோம்

தாகமோடு

நீர் அனைத்தும் குடித்து,

குருதி சிந்தி !

ஒருவரை ஒருவர் நாமே

கண்டுபிடித்தோம்

பசியோடு

நெருப்பு சுடுவது போல்

இருவரும்

ஒருவரை ஒருவர்

கடித்தோம்

காயத் தடங்கள்

உண்டாக்கி !

காத்திரு ஆயினும் எனக்கு !

இனிய கனிவுச் சுவை

எனக்கென நீ

வைத்திரு !

உனக்கென நான் தருவேன்

ஒரு ரோஜா !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda

English Translation from Spanish By : Stephen Tapscott (1986)

University of Texas Press

Sixteenth Paperback Printing (2004)

Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)

English Translation from Spanish By : Donald D. Walsh (1972)

New Directions of publishing Corporation

80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 12, 2008)]

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19

<< அருகில் நீ இல்லாமை ! >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : டொனால்டு வால்ஷ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்னை நான் பிரிந்திருந்தது

வெகு அபூர்வம் !

மன உலைச்ச லோடு,

அல்லது

நடுக்க மோடு

அல்லது

நான் உண்டாக்கிய

காயத் தோடு

அல்லது

காதல் மோகத் தோடு

மூழ்கிப் போயுள்ளாய் என்னுள்

பளிங்குச் சிலை போல்

தடையின்றி

நான் தந்த சுக வாழ்வுக்

கொடையில்

சொக்கிப் போய் !

என்னருமைக் காதலி ! நாமே

ஒருவரை ஒருவர்

கண்டுபிடித்தோம்

தாகமோடு

நீர் அனைத்தும் குடித்து,

குருதி சிந்தி !

ஒருவரை ஒருவர் நாமே

கண்டுபிடித்தோம்

பசியோடு

நெருப்பு சுடுவது போல்

இருவரும்

ஒருவரை ஒருவர்

கடித்தோம்

காயத் தடங்கள்

உண்டாக்கி !

காத்திரு ஆயினும் எனக்கு !

இனிய கனிவுச் சுவை

எனக்கென நீ

வைத்திரு !

உனக்கென நான் தருவேன்

ஒரு ரோஜா !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda

English Translation from Spanish By : Stephen Tapscott (1986)

University of Texas Press

Sixteenth Paperback Printing (2004)

Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)

English Translation from Spanish By : Donald D. Walsh (1972)

New Directions of publishing Corporation

80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 12, 2009)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -18 << பூமியின் காயங்கள் ! >>

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இந்த பசுமை பூமி
அறுவடை காலத்தில்
ஈகை புரிந்திடும்
தானி யங்களை
மஞ்சள் நிறத்தில் !
தங்க நிறத்தில் !
வேளாண்மைப் பண்ணைகளை
புல்லின் இலைகளோடு !
இலையுதிர் காலத்தில்
காணும் அகண்ட விளம்பரத்தில்
கண்ணில் படுவது
உன் தளம்தான் !

புராதனக் கல்வெட்டுகளாய்
பாறைகள்
பிளந்து போனதைப்
பார்க்கிறேன் !
உடைந்த பாறைகளின்
தடத்தைத் தொட்டால்
உனது
உடல் பதில் சொல்லும்
எனக்கு !
நடுங்கிக் கொண்டு
என் விரல்கள்
உணர்ந்திடும்
உன் மென் சுவையை !

கடந்து செல்கிறேன்
மௌனமாகப்
உனது சிறிய படிகளில்
பாரிலே சமீபத்தில்
பாராட்டப் பட்ட
வீரர்களைப்
பார்த்துக் கொண்டு !
நீயா அது ? அல்லது வேறா ?
நேற்று நோக்கினேன்
வேரோடு
சாய்க்கப் பட்ட
ஓர் முதிய
குட்டை மரத்தை !
எதிர்த்து வெளிவரக் கண்டேன்
எனை நோக்கும் உன்
சினத்தை
கோரம் செய்யப் பட்ட
தாகமான
வேர்களி லிருந்து !

நித்திரை தழுவி என்னை
நீண்டு நெளியப்
படுக்கப் போட்டு
மௌனத்தில் தள்ளும் போது
வெண்ணிறப்
பெரும் புயல் அடித்து
உறக்கத்தைக் கலைக்கும் !
குருதியை வடிய வைத்து
இலைகள் உதிரும்
என் மீது
ஈட்டிகள் போல் !
ஒவ்வோர் உடற் காயமும்
ஒத்திருக்கும்
உன் வாயின்
வடிவத்தை !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 5, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -17 << எப்படி வந்தான் என் மகன் ? >>

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மகனே ! நீ அறிவாயா ?
உனக்குத் தெரியுமா
எங்கிருந்து நீ வந்தாய் என்று ?
பசி மிகும் வெள்ளைக்
கடற் பறவைகள்
காணப்படும் ஓர்
ஏரியிலிருந்து வந்தாய் !

குளிர்க் காலத்தில் நீர்க் கரையில்
அவளும் நானும்
சொக்கப்பனை கொளுத்தி
ஆத்மா இரண்டும்
ஒன்றை ஒன்று முத்தமிட்டு
உதடுகள் தோலுரிந்து
உடலை எரித்துச்
செந்தீயில் வடித்தோம் உன்னை !
அவ்விதம் நீ அவதரித்தாய்
இந்த அவனியில் !

என்னைத் தேடிக் காணவும்
ஒரு நாள்
உன்னைப் பெற்றுக் காணவும்
கடல்களைக் கடந்து
வந்தாள் அவள் !
மெல்லிய அவள்
சிற்றிடை அணைத்துச்
சுற்றி வந்தேன்
இந்த உலகம் முழுதும்
மண்ணிலும், மலையிலும்,
முள்ளிலும், கல்லிலும், போர்
முனையிலும் நடந்து !
அவ்விதம் நீ அவதரித்தாய்
இந்த அவனியில் !

நெடுந் தொலைவில்
நீ பயணம் செய்து
நீர் மயத்தில், நில மயத்தில்
தீ மயத்தில், பனி மயத்தில்
நெகிழ்ந்த நேசமுடன்
எம்மைச் சங்கிலியில் பிணைத்துப்
பல்வேறு இடத்திலிருந்து
வந்திருக்கிறாய்
எங்கள் இருவரை நோக்கி !
நீ எப்படி இருப்பாய் ?
நீ என்ன சொல்வாய்
எம்மிடம்
என்று காத்திருந்தோம் !
ஏனெனில்
நீ மேன்மையாய் அறிந்திருந்தாய்
யாமளித்த உலகில் !

பெரும் புயல்போல்
அசைத்தோம் வாழ்க்கைத்
தருவின் கீழ்த்தள
வேர்களின் புதைந்த
நார்களை !
இப்போது தோன்றி
இருக்கிறாய் நீ
இலைகளின் ஊடே
இசை பாடிக் கொண்டு
எமக்குன்னை
எட்டக் கூடிய
உச்சக் கிளை உயரத்தில் !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 29, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இரவு வேளையில் இன்று
தெரியாமல் புகுந்து
திருட வேண்டும் நாம்
ஒரு பூச்சரக் கிளையை !

மதில் மீது ஏறிக்
குதிக்க வேண்டும் நாம்
அன்னியன் தோட்டத்தில்
இருட்டின் நிழலில் ஊர்ந்திடும்
இரு நிழல்களாய் !

குளிர்காலம் இன்னும்
கடந்திட வில்லை !
திடீரென ஆப்பிள் மரத்தில்
நறுமணக் கனிகள்
தளுத்துள்ளன அடுக்கடுக்குத்
தாரகை களாய்
மாறிப் போய் !

இரவு வேளையில் இன்று
தெரியாமல் புகுந்து
திருடி வர வேண்டும்
ஆடித் தொங்கும் கிளைகளில்
அந்தத் தாரகை களை
உன் சின்னக் கை
என் கரத்துடன் இணைந்து !

மௌனமாய் நம் வீட்டுக்குள்
இரவினில் நுழைவோம்
உன் பாத நிழலில் !
நறுமணம் நின் மோனத் தடம் !
பாதங்கள் தாரகை
பதிந்தவை !
வசந்த காலப் பருவத்தின்
பளிங்கு மேனி !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நளின மாதே !
உந்தன் புன்னகை
வசந்த காலத்துக்
குளிர்ப் பாறைமேல் தெறிக்கும்
வெள்ளத்தில்
பொங்கு நுரைதனை
வெளிப்படுத்தும் !

நளின மாதே ! உனது
மெலிந்த கைகளும்
மென்மைப் பாதங்களும்
வெண்ணிற
மட்டக் குதிரைபோல் நகரும் !
உலகின் ஒரு மலராய்
உன்னைக் காண்பேன் நான்
நளின மாதே !

நளின மாதே ! உனது
தலையின் மீதொரு
தாமிரக் கூடு சிக்கியுள்ளது !
என் இதயக் கனலை
எழுப்பி நான் இளைப்பாறும்
பழுப்பு நிறத்
தேன் போல் இருக்கும்
வண்ணக் கூடு !

நளின மாதே !
உன் கண்கள் பெரியவை
உந்தன் முகத்துக்கு !
உன் கண்கள் பெரியவை
இந்தப் பூமிக்கும் !

உந்தன் கண்களிலே
ஓடுகின்றன ஆறுகள் !
உந்தன் கண்களிலே
உள்ளன தேசங்கள் !
உன் கண்களில்
என் தேசமும் இருக்குது !
இந்த உலகுக்கு விளக்காய்
ஒளிகாட்டும்
உன் விழிகள் !
நடந்து அந்த வழியே
கடக்கி றேன் நானும் !

நளின மாதே !
உந்தன் முலைகள் இரண்டும்
மண்ணில் விளைந்த
தானியத்திலும், தங்க நிலவிலும்
பண்ணிய ஆப்பங்கள்
நளின மாதே !

நளின மாதே !
ஓராயிரம் ஆண்டுகளாய்
உன்னினிய மேனியில் ஓடி
நெளிந்த நதி போல்
உன் இடுப்பை வடித்தவை
என் கரங்கள் தான்
நளின மாதே !

நளின மாதே !
உன் பின்னழகைப் போல்
உள்ளதோ வேறிங்கு ?
ஒருவேளைப் பூமியில்
இருக்கலாம்
ஒளிந்து கொண்டு
எந்த இடத்தி லாவது !
உன் உடல் வளைவும்,
உன்னத நறுணமும்
இருக்கலாம்
எந்த இடத்தி லாவது
நளின மாதே !

நளின மாதே !
என் நளின மாதே !
உன் குரல், உன் தோல்,
உனது நகங்கள்
உனது தோற்றம், உன் ஒளி,
உனது நிழல் எல்லாம்
எனக்குரியவை நளின மாதே !
எல்லாம் எனக்குரியவை
என் கண்மணியே ! நீ
நடக்கும் போதோ அல்லது ஓய்வு
எடுக்கும் போதோ
பாடும் போதோ அல்லது
படுத்து உறங்கும் போதோ
கவலையுறும் போதோ அல்லது
கனவு காணும் போதோ
அருகில் இருந்தாலும் அல்லது நீ
அப்பால் வாழ்ந்தாலும்
எனக்குரியவள் நீ
எப்போதும்
என் நளின மாதே !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



இந்தக் கரங்களைப் பார்த்தாயா ?
உலகளந்த கைகள் இவை !
தாதுப் பொருளையும்
தானியங் களையும்
பிரித்தவை இவை !
போரையும் சமா தானத்தையும்
உண்டாக் கியவை இவை !
எல்லாக்
கடல்களுக்கும் உள்ள
இடைவெளியை
உடைத்தவை இவை !
நதிகளுக் கிடையே உள்ள
தூரத்தைத்
தகர்த்தவை இவை !

ஆயினும் அந்தக் கரங்கள்
சின்னப் பெண்
உன்னைத்
தழுவிக் கொள்ளும் போது
சுற்றிக் கொள்ள
முடியாமல்
விழுங்கி விடும்
கோதுமைப் பயிராய் !
முலையில் அமர்ந்து
பறக்கும்
இரட்டைப் புறாக்களைக்
கரங்கள் தேடும் போது
களைத்துப் போய்விடும் !
தொடை வெளியை
அளக்கும் !
இடை மெலிவைப்
பின்னிக் கொள்ளும்
கொடிபோல் !

பொக்கிஷம் எனக்கு நீ !
கடலை விட மிகை யானது !
கிளைப் பகுதிகளை விட
அதிக மானது !
வெண்ணிறமும்
நீல நிறமும் சேர்ந்து
நற்பருவ காலத்தின்
மண்வளம் போல்
விரிவானவள் நீ !
நெற்றி முதல் பாதம் வரை
நிலைத்த உன்
உடல்வளப் பகுதியில்
கடப்பேன், கடப்பேன், கடப்பேன்
என் முழு ஆயுட்
காலத்தை !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 8, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


புயல் ஒரு குதிரை !
ஓங்கி அது வீசுவதைக் கேள்
கடல் வழியே
வான் வீதியில் !

என்னைத் தூக்கிச் செல்ல
விழைகிறது !
எப்படிப் புவிதனைச்
சுற்றுது பார்
என்னை வெகு தொலைவில்
இழுத்துச் செல்ல ?

என்னை மறைத்துக் கொள்
உன் கரத்துக்குள்
இந்த இரவு மட்டும்
வையத்தின் வாசல்களை
கடலின் எண்ணற்ற
வாய்களைப்
பேய் மழை அடித்துப்
பிளக்கும் போது !

எப்படித் தாவி வந்து
என்னை வெகு தொலைவில்
ஏந்திச் செல்லப்
புயலானது
மோதி அழைப்பதைக்
காதில் கேள் !

உன் நெற்றி என் நெற்றியுடன்
ஒட்டிக் கொண்டு
உன் வாய் என் வாயுடன்
உரசிக் கொண்டு
நமது உடலிரண்டும் காதலில்
தழுவிக் கொண்டு
விழுங்கிக் கொள்ளும்
ஒன்றை ஒன்று !
திரிந்து தொலையட்டும் புயல்
என்னை மட்டும்
பிரித்திட வேண்டாம் !

விரைந்து போகட்டும் புயல்
நுரைக் கிரீடம் சூடி !
உரையாட
ஓடி வரட்டும்
அழைத் தென்னை !
தேடி வரட்டும் என்னை
நிழலில்
ஓடிக் கொண்டு
இந்த இரவு மட்டும்
உந்தன் பெரு விழிகளின்
கீழ் நான் ஓய்வில்
மூழ்கும் போது !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 1, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



இரவு பூராவும் உன்னுடன்
உடலுறவு கொண்டேன்
கடலுக்கு அருகில்
முடங்கிய தீவில்
தீவிரமாகத்
தெவிட்டாத இனிமையில்
இன்பத்துக்கும் தூக்கத்துக்கும்
இடையே !
கனலுக்கும் புனலுக்கும்
இடையே !

ஒருவேளை
கால தாமதமாகிப் போய்
நம்மிருவர்
கனவுகள் இணைந்தனவா ?
மேலே கிளைகள்
காற்றால் தொடுவது போல்
கீழே
சிவப்புக் கிழங்குகள்
வேர்களால்
பிணைத்தது போல்
சேர்ந்தனவா ?

உன் கனவு ஒருவேளை
என் கனவுக்கு
அப்பால் விலகியதா ?
இருட் கடலில் உலாவி
எனைத் தேடி வந்ததுவா ?
முன்னைப் பொழுதில் நீ
இன்னும் பிறக்காத போது
என் கண்கள்
உன்னைக் காணாத போது
உன்னருகில் நான்
உலவி வந்தேன் அறிவாயா ?
நின் விழிகள் தேடின
இப்போது நிகழ்வதை !
உணவு, ஒயின், காதல், கோபம்
எல்லாம்
உன்மீது குவித்தேன் !
ஏனெனில்
என் வாழ்வுக் கொடைகளை
ஏந்திக் கொள்ளும்
பாண்டம் நீ எனக்கு !

இரவு பூராவும் உன்னுடன்
உறவு கொண்டேன்
இறப்பையும், பிறப்பையும் ஏந்தி
இருளில் இந்த உலகம்
உருளும் போது !
திடீரென விழித்து
இரவின் நிழலுக் கிடையில்
என் கரங்கள்
பின்னிக் கொள்ளும்
உன்னிடையை !
இரவுப் பொழுதோ
உறக்கமோ
பிரிக்க முடிய வில்லை
நம்மிருவரை !

உடலுறவு கொண்டேன்
உன்னுடன் !
உறங்கி எழுந்தவுடன்
நின் கனவில் வந்த
வாய் முத்தம்
வையகச் சுவை எனக்கு !
வாழ்வின் ஆழம்
கடற் பாசி
கடல் நீரின் துவர்ப் பானது !
ஏற்றுக் கொண்டேன்
சூழ்கடலி லிருந்து
எழுவது போல் காலைப்
பொழுதில்
எனைத் தேடி வந்த
உனது ஈர வாய்
முத்தத்தை !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 24, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கண்கள் என்னை விட்டு அவள்
பின்னே சென்றன
கறுத்தப் பெண் ஒருத்தி என்னைக்
கடந்து சென்ற போது !
கருமுத்தால் ஆக்கப் பட்டு
கருந் திராட்சைக் கனிபோல்
இருந்தவள் எனது
குருதியைக் கலக்கி அடித்தாள்
தன் அக்கினி வாலால் !
பின் தொடர்ந்து போவேன் அந்தப்
பெண்டிரை யெல்லாம் !

பொன் கூந்தல் பெண்ணொருத்தி
வெளுத்த தோற்றம் !
தன் கவரும் கொடைகளை அசைத்துத்
தங்கக் குடம் போல் சென்றாள் !
பின்னே சென்றன உடனே
கண்கள் வாய் திறந்து
அலைகள் செல்வது போல் !
முலைகள் தாக்கிய
மின்னலில் பொங்கிடும்
எந்தன் குருதி !
பின் தொடர்ந்து போவேன் அந்தப்
பெண்டிரை யெல்லாம் !

ஆனால் நான் உன்னை விட்டு
அப்பால் இருந்து
காணாமல் உள்ள போது
அகலாமல் ஏங்கும் வேளை
உன்னை நாடிச் செல்லும்
என் உதிரம் !
என் வாய் முத்தங்கள் !
என் கறுப்பழகி நீ ! என் சிவப்பழகி நீ !
நெட்டை மாது ! சின்ன ராணி !
மெலிந்தவளே ! நலிந்தவளே !
இழிந்தவளே ! நீ எனக்கு
எழில் மாது !

உடல் முழுதும் பொன்னால்
வடிக்கப் பட்டவள் நீ !
வெள்ளியில்
வார்க்கப் பட்டவள் நீ !
கோதுமை
உருவாக்கிய கோதை நீ !
மண்ணில்
பண்ணிய பாவை நீ !
தண்ணீரில்
உண்டான பெண்மணி நீ !
கடல் அலைகள் போலிருக்கும்
உடல் அமைந்தவள் நீ !
கரங்கள் அணைத்திட எனக்கு
உருவானவள் நீ !
உதடுகள் முத்தமிட எனக்கு
உரிமை யானவள் நீ !
ஆத்மா தழுவிட எனக்காக
ஆக்கப் பட்டவள் நீ !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 18, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -10 << உன் மகத்தான புன்னகை ! >>

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எனது உணவை நீ
எடுத்துக் கொள் !
இல்லையேல்
எனது சுவாசக் காற்றைத்
தடுத்துக் கொள் !
ஆனால்
என்வசம் உள்ள
உன் புன்னகையை
மட்டும்
எடுத்துக் கொள்ளாதே !

நீ விரும்பும் ரோஜாவை
என்னிட மிருந்து
எடுத்துக் கொள்ளாதே !
உந்தன் பூரிப்பில் வெடித்துச்
சிந்தும்
கண்ணீர்த் துளிகள்,
உதித்தெழும்
உன் உள்ளத்தில்
திடீரென
வெள்ளி மய அலைகள்,
எதனையும் நீ
எடுத்துக் கொள்ளாதே !

என் போராட்டம் கடுமை யானது !
மாறாமல் இருக்கும்
இந்தப் பூமியைப் பார்த்து
மலைத்து நிற்கிறேன்
களைத்து ! ஆயினும்
உன் புன்னகை
மின்னும் போது
விண்ணுக்கு உயர்த்துகிறது
என்னைத் தழுவி !
திறந்தெனக்கு
வைக்கிறது
வாழ்வுக் கதவுகளை !

அருமைக் காதலி !
இருண்ட வேளைகளில்
என் நெஞ்சைத் திறக்கிறது
உன் புன்னகை !
என் உதிரம் உடனே
தெருக் கற்களைக்
கறைப் படுத்தினால்
சிரித்திடு !
காரணம் உன் சிரிப்பே
கூரிய வாள் என்
கரங்களுக்கு !

இலையுதிர் காலத்தில்
கடற்கரை மணல் ஓரங்களில்
அலை அலையான
நுரைகளாய்
உயர்த்தி எழுப்பட்டும்
உன் புன்சிரிப்பு !
காத்திருக்கிறேன்
நீலப் பூ ரோஜாவுக்கு
நானும் !

சிரித்திடு இரவில் பகலில்
நிலவில் !
தீவிலே சிரித்திடு நெளியும்
தெருக்களில் !
உன்னை நேசிக்கும்
இந்தக் கோமாளி மனிதனைப்
பார்த்துச் சிரித்திடு !
விழிகளைத் திறந்து நான்
மூடும் போது
வெளியே சென்று நான்
மீளும் போது
உணவு, சுவாசக் காற்று, வசந்தம்
ஒளி விளக்கு,
எதனையும் நீ
தடுத்து நிறுத்தலாம் !
ஆனால்
ஒருபோதும் நிறுத்திடாய்
உன் புன்னகை !
இல்லையேல் நீங்கிடும்
என்னுயிர் !

+++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 10, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பென் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என் காதலுக்காக
உன் கைகள் பறந்து போய்
என்ன கொண்டு வருகின்றன ?
என் வாய்வரை வந்து
உடனே அவை
ஏன் நின்று போகின்றன ?
நான் உன் கைகளைத்
தொடுவதற்கு முன்பே அவற்றை
அறிந்த தாயும்
அவை முந்தியே இருந்த தாகவும்
என் நெற்றி மீதும்
இடை மீதும்
தடவிப் போன தாகவும்
ஏன் நான் உணர்கிறேன் ?

நீண்ட காலப் பயணத்திலும்
நீலக் கடல் மீதும்,
எரிமலைப் புகை மேலும்
வசந்த பருவத்தில்
மென்மை வந்ததுன் கைகளுக்கு !
உன் கரங்கள்
என் மார்பைத் தழுவும் போது
பொன் புறாவின்
சிறகுகள் அவை யென
உணர்ந்தேன் !
அக்களி மண் உடலை
அக்கோதுமை நிறத்தை நான்
அறிந்து கொண்டேன் !

வாழ்நாள் பூராவும் அவற்றைத் தேடி
வழிப் பயணம் செய்தேன் !
மலைமேல் ஏறினேன் !
பல பாதைகள் கடந்தேன் !
இரயில் பயணம்,
கடற் பயணம் செய்தேன் !
திராட்சைத் தோலைத் தொட்டுன்
கரத்தைத் தொட்டதாய்
நினைத்தேன் ! வனம்
உனது மென்மையை
இனம் காட்டிய தெனக்கு !
ஆல்மண்டு அறிவிக்கும் உன்
கரங்களின்
இரகசிய மென்மையை !
இரு கைகளும்
என் மார்பினை அணைத்து
முடிவு செய்தன
இனிய பயணத்தை !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 20, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -8 << உயிரூட்டம் உள்ளவைகள் ! >>

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



முகத்தை நோக்காத வேளை
நானுனது பாதங்களைப்
காணுவேன் !
உந்தன் பாதங்களைக்
காதலிக்கிறேன் !
காரணம்
இந்த மண் மீதும்
காற்றின் மூலமும்
கடலின் மேலும்
நடந்து வந்தவை அவை
என்னைக்
கண்டுபிடிக்கும் வரை !

வெண்ணிலவின் வண்ணத்தில்
ஒருநாள் களிமண்ணாய்
கனலாகவோ வினை யாகவோ
உனது விழிகள்
இல்லாது போனால்,
தென்றல் நடைபோல்
உன் தோற்றம் சுறுசுறுப்பாக
நளின மோடு
நகர வில்லை யானால்,
ஆரஞ்சு வண்ண
எச்சரிக்கை யாய் நீ
வாராது போனால்,

மஞ்சல் நிறமில்லாமல்
இலையுதிர் காலத்து
மரக் கொடிகள் மேல் ஏறினால்
குறை நிலவைப் பிசைந்து
வான மெங்கும் அதன்
மாவைத் தெளித்துத்
தயாரித்த ரொட்டி யாய் நீ
இல்லாது போனால்,

அவ்விதம் நான் உன்னைக்
காதல் புரிய மாட்டேன் !
ஆயினும் நானுன்னை
ஆட்கொள்ளும் போது
மண்ணும் மரமும் காலமும்
சூழ்ந்த நீர்மய மான
உனது
உடலுக் குள்ளே
அடங்கி யுள்ள
எல்லா அமைப்புகளும் எனது
ஏற்புடமை பெறும் !

உயிருடன் நான் வாழ்வதற்கு
ஒவ்வொன்றும்
உன்னிடம்
உயிர் பெற்று எழுகின்றன !
நீக்கமற நின்று
அவற்றை யெல்லாம்
நோக்க முடியுது என்னால் !
ஒவ்வொன்றும்
உன் வாழ்வில்
உயிர்த் தெழுவது
தென்படு கிறது எனது
கண்களுக்கு !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 13, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


<< முத்தத்தில் எழும் கடற் புயல் >>

இன்று தான், இந்த நாள்தான்
மதுக் கிண்ணம் நிரம்பி வழியும் !
இன்று தான், இந்த நாள்தான்
உன்னத அலை எழும்பும் !
இன்று தான் முழுமை யாய்க்
கண்படும் மண்தளம் !
இன்று தான் புயல் கடல்
இருவர் முத்தத்தில்
எங்களைத்
தூக்கிடும் உயரத்தில் !
மிக்க மிக்க உச்சத்தில்
நாங்கள்
திக்குமுக் காடினோம்
மின் வெட்டில் !
கட்டுண்டோம் !
கடல் ஆழத்தில் மூழ்கினோம்
இரண்டறக்
கலந்து கொண்டு !

இன்று தான் நமது உடல்கள்
எழும்பி விரிந்தன ! உலகின்
எல்லையைத் தொட்டன !
இரு உடல் மெழுகாய்
உருகிப் போய்
ஒரு துளி யாகும் !
அல்லது வானில்
எரி விண்கல் லாகும் !
உனக்கும் எனக்கும் இடையில்
திறந்துள்ளது
ஒரு புதுக் கதவு !
இன்னும் முகவரி இல்லாத
ஏதோ ஒன்று
அங்கே காத்திருக்கும்
எங்களுக்கு !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 29, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


<< நீயே எனக்கு விதிக்கப் பட்டவள் >>

பூத்துப் பொங்கும் உன்முழு மேனி
மிருது வானது ! எனக்காக
உருவானது !
உனது மேனி மீது
விரல்கள் தடவும் போது
ஒவ்வொர் அங்கத்திலும்
ஜிவ்வெனத் துடிக்குது ஒரு புறா
எனைத் தேடி !
காதலால்
என் குயவன் கை விரல்கள்
களிமண்ணில்
கடைந் தெடுத்த உடம்பு !

உன் முழங்கால்,
உன் கொங்கைகள்
உன் சின்ன இடை எல்லாம்
என்னிடம் இல்லாத
அங்கங்கள் ! . . .
நாமிருவரும்
பூரணம் அடைபவர்
ஒன்றாகி
ஒற்றை நதி போல்,
ஒரு தானியக் கல்லைப் போல் !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

++++++++++++++++++++++++++++++++

பாப்லோ நெருடாவின் கவிதைகள்
காலைக் கவிதை -5

<< காதலில் என் இருப்பிடம் >>

பறிக்கப் போவ தில்லை உனது
இராப் பொழுதை !
நிறுத்தப் போவ தில்லை உன்
சுவாசக் காற்றை !
கலைக்கப் போவ தில்லை விடியும்
காலைப் பொழுதை !
காசினி, மெய்ப்பாட்டுக்
கனிக் கொத்துகள் !
உப்பிடும்
இனிய நீர் உரிஞ்சி
ஆப்பிள்கள்,
நறுமணம் வீசும் உந்தன் நிலத்தில்
தரைக் களிமண் !
மரக் கோந்துகள் !

சில்லி நாட்டில் முதன்முதல்
திறந்தன உன் கண்கள் !
சில்லி முதல் மெக்ஸிகோ வரை
உரிமை ஆயின
எனக்கு
உன்கால் தடங்கள் !
எனக்குப் பழக்கமானக் கருமைக்
களிமண் நீ !
உன் இடையை ஒரு கையில்
அணைத்துக் கொண்டு
மறு கையில்
கோதுமைப் பயிரை அள்ளி
வயலில் நிற்கிறேன்
மீண்டும் !

சில்லியின் செல்வி நீ
அறிய மாட்டாய் :
உன்னை நேசிப்பதற்கு முன் எப்படி
நின் முத்தங்களின்
நினை விழந்தேன் என்று !
உன் இதழ்களை ஆயினும்
என் இதயம் மறக்க வில்லை !
புண்பட்ட மனிதனாய்
என் வாழ்க்கைப் பாதை
தொடர்ந்தது !
காதலில்
புரிந்து கொண்டேன் எனது
இருப்பிடத்தை !
முத்தங்களும் எரிமலைகளும்
நித்தமுள்ள நிலம் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


<< நீயே எனக்கு ராணி >>

நீ என் ராணி யெனக்
குறிப்பிட்டேன் !
உன்னை விட உயரமாய்
மாதுள்ளாள்,
உயர மாக ஆம் !
உன்னை விடத் தூயதாய்
மாதுள்ளாள்
தூய தாக ஆம் !
உன்னை விட நளினமாய்
மாதுள்ளாள்
நளின மாக ஆம் !
ஆயினும்
நீயே எனக்கு ராணி !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

++++++++++++++++++++++++++++++++

பாப்லோ நெருடாவின் கவிதைகள்
காலைக் கவிதை -4

<< பூமியின் கொடைகள் >>

நறுமணம் வீசி இனிதாய்க்
குதித்தோடும்
அந்த நீரோ டையை
அறிவாய் நீ !
சில சமயம் அதில்
குளித்த ஒரு பறவை
குளிர்காலச்
சிறகுகள் இருந்த போதும்
நடுங்கிப் போகும் !

இந்த மண்ணகத்தின் கொடைகள்
சிந்தையில் உள்ளதா உனக்கு ?
நீக்க முடியாத நறுமணம் !
பொன்னிறக் களிமண் !
காட்டு மரங்களிடை முளைக்கும்
களைகள் !
கோளாறாய் வேர்கள் !
வாள்கள் போன்ற
மாய முட்கள் !

நீ எடுத்த மலர் வளையம்
நினைவிருக் கிறதா உனக்கு ?
நிழல்கள் !
மௌன நீர்க் குளங்கள் !
நுரைகள் சுற்றிக் கொள்ளும்
நீர்ப் பாறை
மலர் வளையமாய்த்
தோன்றும் !

ஒருபோதும் அத்தகைய தோர்
தருணம் வரவில்லை !
அப்படித்தான் எப்போதும் !
ஆதலால்
நாமங்கு போகலாம்
நமக்கு எதுவும் காத்திராத
அந்த இடத்துக்கு !
ஆனால் அங்கு
எல்லாம்
காத்திருக்கும் நமக்கு !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 15, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


<< உன்னுள்ளே இந்த மண்ணுலகம் >>

காதலில் உனைத் தளர்த்தி விட்டாய்
கடல் நீர் வெள்ளம் போல் !
விண்ணில் மிகத் தொலைவில் உலாவும்
விழிகளை அளப்பது கடினம் !
உந்தன் வாயிதழ் அருகில் குனிகிறேன்
இந்த மண்ணுலகை நான் முத்தமிட !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

++++++++++++++++++++++++++++++++

பாப்லோ நெருடாவின் கவிதைகள்
காலைக் கவிதை -3

<< முறிந்த காதல் பாதை >>

கசப்பான காதல் என்பது
காட்டுச் செடி முட்களின்
கார வலிதரும் எ·கு ஊசிகள்
போலிருக்கும் செங்கருமை
நீலக் கிரீடம் !
சோகத்தின் வேல் முனை !
வெஞ்சினத்தின் வெடி வீச்சு !
எப்படி முடிந்தது உன்னால்
என் ஆத்மாவை நீ
ஆக்கிர மித்துக் கொள்ள ?
உன்னைப் பின்னிக் கொண்டது
என்ன துக்கம் ?

உனது மென்மை மேனிக் கணப்பை
உடனே
எனது தண்மை உடல்
பசுமை இலைகள் மீது
அள்ளிப் பொழிந்த காரணம் என்ன ?
யாருனக்கு வழி காட்டினார் ?
எந்த மலர், எந்த மலை,
எந்த முகில் காட்டியது உனக்கு
என்னிருப் பிடத்தை ?

ஆமாம் ! அதிர்ச்சி யுற்றது
இந்த பூமி
அந்த பயங்கர இரவில் !
பூமி ஆட்டம் கொண்டதால்
பொழுது புலர்ந்த பின்
நிரம்பிடும் ஒயின் மது
கும்பாக் களில் எல்லாம் !
தானே பறைசாற்றும் பரிதி
வானத்தில் !

ஆயினும் என் உள்ளத்தி னுள்ளே
சுற்றிச் சுற்றி என்னை
வட்ட மிட்ட தொரு
காதல் காயம்
சூடாக !
இதயத்தின் உள்ளே
ஊசி முள்ளாய்க் குத்தி
உட்செல்லும் !
ஊடுருவிப் போகும்
போர்வாள்
காதல் பாதையை முறித்து !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 8, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


<< விடுதலைப் பாதை நெடுவே >>

நானிந்த ஊரில்தான் வளர்ந்தேன் !
ஆற்றுக்கும் குன்றுக்கும் இடையே
உதித்தது என் முதல் கவிதை ! அதற்கு
அரவம் அளித்தது பெய்த மழை !
இரண்டறக் கலந்தது வனங்களுடன்
மரத்தைப் போல் ஓங்கி வளர்ந்து !

விடுதலைப் பாதையின் நெடுவே
நடந்தின்று நான் செல்கையில்
இளைப்பாறி னேன் சற்று நேரம்
தெமூகோ நகரின் அருகிலே !
பாடுவதை எனக்குக் கற்றுக் கொடுத்த
நீரோட்டச் சலசலப்பைக் கேட்டேன் !

சிந்திக்க வைக்கும் சீரிய நூல்களே
உதவிகள் புரியும் அதிகமாய் உனக்கு !
கடிய பாதையில் அறிந்து கொள்வது
எளிய வழிமுறைப் படிப்பில் வருவது !
உன்னத ஞானியர் ஆக்கும் உயர்ந்த நூல்கள்
உண்மையும் அழகும் ஆழ்ந்து மேவும்
எண்ணங்கள் ஏற்றிய ஓர் பளுக் கப்பல் !


பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

++++++++++++++++++++++++++++++++

பாப்லோ நெருடாவின் கவிதைகள்
காலைக் கவிதை -2

<< மலர விரித்திடும் வையகம் >>

முத்தம் தரக் காதலுக்கு எத்தனை தூரம் ?
எத்தகையத் தனிமைத் துன்பம் எனக்கு
உன்னை ஒரு துணையாய் அடைந்திட ?
மழையில் புரண்ட வண்ணம் இருவரும்
வழியைத் தொடர்ந்தோம் தனிமையில் !
தால்தலில் பகலும் இல்லை ! வசந்தமு மில்லை !

நேசித்து வந்தோம் நீயும் நானும் !
உடைமுதல் நம்மின வேர் வரை
ஒன்றான தால்நாம் இருவரும் சேர்ந்தோம் !
ஒன்றாக ஆற்றில் நீராடி னோம் !
உலாவி வந்தோம் இலையுதிர் காலத்தில் !
முடிவில் தனியாய்க் கூடினோம்
நீ மட்டும், நான் மட்டு மாகி !

எத்தகை ஆற்றல் உள்ளது நமக்கு !
நீரோட்டம் பற்பலக் கூழாங் கற்களை
போரவா சங்கமத்தில் இழுத்துச் செல்லும் !
எண்ணிப் பார்த்தால் என்னையும், உன்னையும்
பிரிப்பது தூரம் ! நாம் வெவ்வேறு தேசம் !


நேசிப்போம் நாம் ஒருவரை ஒருவர்
ஆடவர், மாதர் குழப்பம் அடையினும் !
வாசனை மிகும் மலர்களை எழச் செய்து
மலர விரித்திடும் வையம் மகத்துவமாக !

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 1, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – காலைக் கவிதை -1 காதலி : மாடில்தே உரூத்தியா (Matilde Urrutia)

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


களைத்துப் போனேன் மனிதனாய் வாழ்ந்து !

தையல் கடையிலும், திரைப்பட அரங்கிலும்

துளைக்க முடியாத ஓர் உணர்ச்சி அன்னமாய்

நுழைய நேர்ந்தது நான் தளர்ந்து போய் !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

From : Walking Around

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

++++++++++++++++++++++++++++++++

பாப்லோ நெருடாவின் கவிதைகள்

காலைக் கவிதை -1

காதலி : மாடில்தே உரூத்தியா

(Matilde Urrutia)

மாடில்தே ! (காதலி பெயர்)
ஓர் செடியின் பெயர் அது !
ஓர் பாறைக் கல் அது ! அல்லது
ஒயின் மதுபானம் அது !

ஆதி முதலாகப் புவியிலே தோன்றி

அந்தமாய்ப் போவது ! அந்த

வார்த்தை உச்சரிப்பால்

வளர்ந் தோங்குவது

காலைப் பொழுதின் முதல் கண்திறப்பு !

வேனிற் கால எலுமிச்சங் கனியில்

வெடித்தெழும் ஒளி !

அந்தப் பெயர் மூலமாக

மரக் கப்பல்கள் மிதந்து செல்லும் !

அந்தக் கப்பல்களை முற்றுகை செய்யும்

நீலக் கனல் அலைகள் !

அந்தப் பெயரின் எழுத்துக்கள்

ஆற்று நீரின் வெள்ளங்கள் !

சூடாகி வரண்ட என் இதயத்தில்

ஊடுருவிப் பொழிபவை அவை !

பின்னிய கொடிகளுக் கிடையே

பெயர் மறையாமல் தெரிகிறது

நறுமண உலகை நோக்கிச் செல்லுமோர்

இரகசியக் குகையின் முகக் கதவு போல் !

உன் கணப்பு வாய் உதடுகளால்

என்னோடு போர் தொடு !

உன் இரவு மயக்க விழிகளால்

உளவு செய் என்னை !

உன் பெயரை நினைத்து

உன்னைக் கப்பலாய் நான்மட்டும் செலுத்த

என்னை விட்டுவிடு நீ விரும்பினால் !

ஓய்வெடுக்க வேண்டும் நான் அங்கே !

***************************

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda

English Translation from Spanish By : Stephen Tapscott (1986)

University of Texas Press

Sixteenth Paperback Printing (2004)

Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)

English Translation from Spanish By : Donald D. Walsh (1972)

New Directions of publishing Corporation

80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************

List of Spanish Works By Pablo Neruda

Crepusculario (1923)

Viente Poemas de Amor y Una Cancion Desesperada (1924)

Tentativa del Hombre Infinitivo (1926)

Hondero Entusiasta (1932)

Residencia en la Tierra (1935)

Obra Poetica de Pablo Neruda (1948)

Canto General (1950)

Dulce Patria (1951)

Poesia Politica (1953)

Todo el Amor (1953)

Las Uvas y el Viento (1954)

The Captain’s Verses – Los Versos del Capitan (1954)

Odas Elementales (1954)

Nuevas Odas Elementales (1956)

Extravagario (1958)

Bestiario (1958)

Navegaciones y Regresos (1959)

Aun (1959)

Cancion de Gesta (1960)

100 Love Sonnets – Cien Sonetos de Amor (1960)

Cantos Ceremoniales (1961)

Las Piedras de Chile (1961)

Antologia Poetica (Ed. Pablo Luis Avila; 1962)

Obras Completas (1962)

Plenos Poderes (1962)

Memorial de Isla Negra (1964)

Poesias (1965)

Arte de Pajaros (1966)

La Barcarola (1967)

Las Manos del Dia (1968)

Obras Completas (1968)

Fin de Mundo (1969)

La Espada Encendida (1970)

Antologia General (1970)

Antologia Esencial (Ed. Hernan Loyola; 1971)

Geografia Infructuosa (1972)

La Rosa Separada (1972)

Incitacion al Nixoncidio y Alabanza de la Revolucion Chilena

Posthumous:

Jardin del Invierno (1973)

El Mar y las Campanas (1973)

2000 (1974)

Elegia (1974)

Libro de las Preguntas (1974)

Pablo Neruda (Ed. Carlos Rafael Duverran; 1977)

Antologia Poetica (1981)

Prose

El habitante y su esperanza (1925)

Discurso pronunciado con ocasion de la entrega del premio Nobel de literatura (1971)

Confieso que he vivido: Memorias (1974)

Correspondancia (1980) edited by Margarita Aguirre.

Anthology

Paginas escogidas de Anatole France (1924)

Visiones de las hijas de Albion y el viajero mental (1935) by William Blake.

Visiones de las hijas de Albion y el viajero mental (1935) by William Blake.

Romeo y Julieta (1964) by William Shakespeare.

Cuarenta y cuatro (1967) ; Rumanian poetry.

Drama

Fulgor y muerte de Joaquin Murieta: Bandido chileno injusticiado en California el 23 julio 1853 (1967)

Poetry in Translation from Spanish

Residence on Earth (1962) selections from Residencia en la tierra trans. by Clayton Eshleman

The Heights of Macchu Picchu (1966) trans. by Nathaniel Tarn.

Twenty Poems (1967) from Residencia en la tierra, Canto general, and Odas elementales, trans. by James Wright and Robert Bly.

Twenty Love Poems and a Song of Despair (1969) translation by W. S. Merwin

A New Decade: Poems, 1958-1967 (1969) ed. by Ben Belitt, trans. by Belitt and Alastair Reid.

Pablo Neruda: The Early Poems (1969) trans. by David Ossman and Carlos B. Hagen.

Stones of the Sky (1970) trans. by James Nolan.

Selected Poems (1970) ed. by Nathaniel Tarn, trans. by Anthony Kerrigan and others.

Neruda and Vallejo: Selected Poems (1971) edited by Robert Bly; trans. by Bly and others.

New Poems, 1968-1970 (1972) ed. and trans. by Ben Belitt.

Splendor and Death of Joaquin Murieta (1972) trans. by Ben Belitt.

The Captain ‘s Verses (1972) trans. by Donald D. Walsh.

Extravagaria (1972) trans. by Alastair Reid.

Five Decades: A Selection (Poems 1925-1970) (1974) ed. and trans. by Ben Belitt.

Fully Empowered: Plenos poderes (1975) trans. by Alastair Reid.

Memoirs (1976) translated by Hardie St. Martin.

Pablo Neruda and Nicanor Parra Face to Face (1977) ; speeches.

Isla Negra: A Notebook (1980) trans. by Alastair Reid.

Passions and Impressions (1982) trans. by Margaret S. Peden.

Windows That Open Inward: Images of Chile (1984) trans. by Alastair Reid and others.

A Separate Rose (1985) trans. by William O ‘Daly.

Winter Garden (1986) trans. by William O ‘Daly.

100 Love Sonnets (1986) trans. by Stephen J. Tapscott.

The Stones of Chile (1987) trans. by Dennis Maloney.

The Sea and the Bells (1988) trans. by William O ‘Daly.

The House at Isla Negra (1988) trans. by Dennis Maloney and Clark Zlotchew.

Late and Posthumous Poems, 1968-1974 (1989) ed. and trans. by Ben Belitt.

Selected Odes of Pablo Neruda (1990) trans. by Margaret S. Peden.

The Yellow Heart (1990) trans. by William O ‘Daly.

The Book of Questions (1991) trans. by William O ‘Daly.

Spain in the Heart: Hymn to the Glories of the People at War (1993) trans. by Richard Schaaf.

Pablo Neruda: An Anthology of Odes (1994) ed. by Yvette E. Miller, trans. by Maria Giacchetti.

Full Woman, Fleshly Apple, Hot Moon : Selected Poems of Pablo Neruda (1998) trans. by Stephen Mitchell.

***************************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 27 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா