முதிர் இளைஞா..

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

சு.மு.அகமது



—————–
இருளடர்ந்த அறையின்
வெக்கை பிதுக்கும் தருணங்களில்
கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய்
பாரம் சுமக்கும் மனது

வலியின் உள்வெளியில்
சிரையாய் புடைத்த நினைவு
நிமிரா நாயின் சுருண்ட வாலாய்
மரவட்டையின் கணக்கற்ற கால்களின் நீட்சியாய்

யதார்த்த பரிமாற்றத்தின் பகிர்ந்தளிப்பு
நுகர்ந்து செறிக்கும் நிலைமாற்றம்
உணர்ந்து திளைக்கும் பொழுதில்
அருகாமையில் புணரலின் புதுமொழி

வெளிச்சப்பரவுதலில்
மிரண்ட பிணைந்த பல்லிகளின் கண்களில்
காமத்தின் மிச்சம்

அனிச்சையாய் கைகள் துழாவ
விளக்கின் உமிழ்தலாய் பரவுகிறது
உணர்வுகளுக்கான வடிகால்
கறுமை விரட்டும் வெண்பட்சியாய்.

சு.மு.அகமது
musthaqsyedahmed@gmail.com

Series Navigation

சு.மு.அகமது

சு.மு.அகமது