கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Kahlil Gibran’s Paintings
“The Polygamy Man”
“மனித இனத்தார் உடம்பின் கூண்டைக் கட்டி அமைப்பதில் கூட்டாக உழைத்து, ஆன்மீக ஆலயத்தைத் தகர்ப்பதில் ஒன்று படுகிறார் !”
“உமது இதயங்கள் இரவு பகலின் இரகசியங்களை மௌனமாய் அறிகின்றன. ஆனால் உமது செவிகள் உமது இதயங்களின் ஓசைகளைக் கேட்கத் தாகமுறுகின்றன.”
கலில் கிப்ரான்
+++++++++
<< மரணத்தின் அழகு >>
கவிதை -15 பாகம் -1
(மரணம் விடும் அழைப்பு)
தூங்கிப் போக விடுவீர் என்னை
ஏங்கிக் கிடக்கும் காதலில் என் ஆத்மா !
ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் நான் !
இராப் பகலாய் அருட் கொடைகளை
என் ஆன்மா பெற்றுக் கொண்டுள்ளது !
மெழுகு வத்திகளை ஏற்றி வைத்து
ஊதுபத்திகள் எரிந்து நறுமணம் பரப்பட்டும்
எனது படுக்கையைச் சுற்றிலும் !
மல்லிகை இலைகளை ரோஜா மலர்களை
என் உடம்பின் மீது பரப்புவீர் !
இரசாயனம் பூசி வாசனைத் திரவம் தெளிப்பீர்
எனது பாதங்களில் ! மேலும் வாசிப்பீர்
மரணத்தின் கை என் நெற்றியில் எழுதியிருப்பதை !
++++++++++
களைத்து விட்டன திறந்த என் கண்கள் !
தூக்கத்தின் கையணைப்பில் நான் ஓய்வாக வேண்டும்
வீணையின் வெள்ளி நாண்கள் நடுங்கி
அமைதி அடையட்டும் எனது ஆன்மா !
மெதுவாய் நிற்கும் என் இதயத்தைச் சுற்றிச்
சங்கிலும் புல்லாங் குழலிலும் முகத்திரை நெய்திடு !
கடந்ததை நம்பிக்கையுடன் பாடு என் கண்களில்
விடிவுக் காலம் புலர்வதைக் காணும் வரை !
அதன் மந்திரப் பொருள் : எனது நெஞ்சம்
இளைப்பாறும் இந்தப் பஞ்சு மெத்தையில் என்பது !
++++++++++
உலரட்டும் உமது கண்ணீர் என்னரும் தோழரே !
மலர்களைப் போல் உமது தலைகள் நிமிரட்டும் !
கிரீடத்தைக் கீழ் வைத்து விடிவை வரவேற்பீர் !
என் மெத்தைக்கும் முடிவில்லா எல்லைக்கும் இடையே
தோரண விளக்குத் தூண் போல் நிற்கும்
மரண மணப் பெண்ணை உற்று நோக்குவீர் !
நிறுத்திக் கொண்டு உமது நெடு மூச்சை, அவளது
இறக்கையின் சலசலப்பை என்னுடன் கேட்பீர் !
++++++++++
அருகே வந்தெனக்கு நீவீர் விடைகொடுப்பீர் ! உமது
முறுவல் இதழ்களால் தொடுவீர் என் விழிகளை !
சிறுவரின் பூக்கரங்கள் என் கைகளைப் பற்றட்டும் !
முதியோர் தம் கரங்களை என் நெற்றியில் வைத்து
ஆசீர் வாதம் வழங் கட்டும் எனக்கு !
என்னிரு கண்களில் கடவுளின் நிழலை
கன்னியர் காணட்டும் என்னை நெருங்கி !
என் மூச்சுடன் முந்திடும் கடவுளின் உயில்
எதிரொலிப் பதைக் கன்னியர் கேட்கட்டும் !
+++++++++++
(தொடரும்)
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 17, 2009)]
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அதிர்ஷ்டம்
- மழை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!
- போதிமரங்கள்
- ஊழிக் காலம்
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8