வேத வனம் –விருட்சம் 47
எஸ்ஸார்சி
வாசுதோஷபதி மனை காப்போன்
அறிக எம்மை
நோய் தராதிரும் எமக்கு
எம் வாயிற்கதவு உத்தமம் ஆகுக
மனிதரும் விலங்கும் சேமமுருக
சேறுக செல்வங்கள்
இந்து நீ
ஆ அசுவம் காத்திடுக
எம்மை இளமையாக்குக
தந்தை நீ
புதல்வர்கள் யாமுனக்கு
வாசுதோஷ பதியே
நீ அளித்த மனை
நலம் வளம் தனம் பெருகும் மனையொடு
பொலிவு அமைதி யோகம் தருக
உழைப்பில் சுகம் பெருகி
உள பொருளும்
வரு பொருளும்
காத்தருள்வீர் எமக்கு ( ரிக் 7/54)
சரமை எனும் இந்திர நாயின்
புதல்வ
நீ சயனிக்கவும்
திருடனும் கள்ளனும்
பார்த்து க் குரை
ஒய்வெடு தூங்கு
இந்திரனை வழிபடும் எம்மையா
அச்சமுறுத்துவாய்
அன்னையர் உறங்குக
தந்தையர் உறங்குக
உற்றார் உறங்குக
உறவினர் உறங்குக
தலைவன் உறங்குக
எல்லா மக்களும் இனிதே உறங்குக
ஒய்வில்லா
மனிதனின்
கண்களை
மனை வாயில் அடைப்பதுபோல்
மூடுகிறோம் யாம் (ரிக் 7/55)
இயற்கையாய் பலமுடை மருத்துக்களே
கவிகளே
புகழில் சூரியன் ஒத்தோரே
வேள்விக்கு வருக வருகவே
யாம் வலிமைக்கே வலு வழங்கும்
முக்கண்ணனை
சுகந்தனை
போற்றி நிற்கின்றோம்
வெள்ளரிப்பழமொன்று தான் தொங்கு
கொடியின் பிடியிலிருந்து
இற்றுக்கொள்ளும் இசைவொப்ப
இறப்பை ப்பாவித்து
அமுதம் பற்றுவோமாக. ( ரிக் 7/59 )
—————————————————————
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அதிர்ஷ்டம்
- மழை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!
- போதிமரங்கள்
- ஊழிக் காலம்
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8