ஆகவே சொல்கிறேன்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

நட்சத்திரவாசி


வீட்டின் மேலிருந்த
ஒரு ஓடு பிளந்திருக்கிறது
இடைவெளியில் சிக்கிக்
கொண்டது வானம்

மீனவன்
மீன் பிடிப்பதற்க்காக
வலையை வீசுகிறான்
வலைக்கும்
ஆழத்துக்கும்
இடையில் மீனொன்று
நீந்திச் செல்லுகிறது

விமான பயணம்
சுகமானது
சுராஸ்யமானதும் கூட
என்றாலும்
எல்லோரையும்
போலத் தான்
பயணம் செய்கிறது
அச்சம்.

நீ
உரத்துச் சொன்னாலும்
மறுத்துச் சொன்னாலும்
சொல் பட்டு
கலைவதில்லை
மேகம்.

நீயொரு
நட்சத்ரவாசி
நட்சத்திரங்களுக்கிடையிலல்லாமல்
என் கவிதையில்
வாசம் செய்ய
உனை தூண்டியது எது?

வெளிச்சத்தில் உண்டு
ஆயிரம் தீர்க்க ரேகைகள்
என்பதை போன்றதா
உன் ஒரு துளி நிலவு

உதிர்ந்து விழுந்த போது
வெளிச்சம் தீய்ந்தது
மரணம் இல்லை என
உரத்துச் சொல்

வீடு பற்றிய கனவு
எனக்கும் உண்டு
சிறிதோ
பெரிதோ
ரோட்டோரமோ
துரமோ
நல்லதாய்
நாலு பேர் மெச்சுவதாய்
இருக்க வேண்டும்
கனவிலாவது
வந்து தொலைய
மாட்டேங்குது
அந்த வீடு

விண்முட்ட நின்ற
பெருமரத்தின்
கிளைகளிடையே
சிக்கிய
பெருந்துயரோ
நிலா.

அமர்ந்து இருப்பதிலும்
தியானம் இருக்க்கிறது
அடிக்கடி கண்களை
மட்டும் சிமிட்டி
எனது யோசனையை
தாறுமாறக்குவதில்
உனக்கேனோ
பெருமை?

தூர தூரமாய் இருக்கும்
மலைகள் எனது வெளியை
இல்லாமல் ஆக்கின
காது கொடுத்தால்
நீங்களும் கேட்கலாம்
வானுக்கும் உண்டு
ஆயிரம் புகார்கள்

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி