மரணத்தைத் தவிர வேறில்லை
மனோ.மோகன்

உனது பழைய எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை
மொத்தம் இரண்டாயிரத்து நூற்று தொண்ணூறு
பூச்சிகள் அரித்துச் சிதைந்த எலும்புக்கூடு
மட்கியும் மட்காமல்
சதையொட்டிய எலும்புக்கூடு
வகுப்பறைக்குச் செல்லும் பாவனையில்
நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட எலும்புக்கூடு
சில எலும்புக்கூடுகளில்
பற்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால்
எண்ணிக்கை கூடலாம் குறையலாம்
பொத்தல் விழுந்த குரூர விழிகளுடன்
புன்னகைத்துக் கொண்டே
எனது உறக்கத்தைத் தின்றுகொண்டிருந்த
கீறல் விழுந்த மண்டையோடுகள் சிலவற்றில்
புராதன மொழியில் எழுதப்பட்ட
கனவுகள் பொறிக்கப்பட்டிருந்தன
எழுதப்பட்ட கனவுகளில் சில
கடவுளின் பெயரால் புனையப்பட்ட தொல்கதைகளாயிருந்ததையும்
தொல்கதையிலுலவும் கடவுளரனைவரும்
உனது பெயரில் இருந்ததையும்
கல்வெட்டு ஆய்வாளர் சொல்லிப் போனார்
வரலாற்றாஸிரியருக்குத் தெரிய வராத
இருண்டகாலக் குறிப்புகளடங்கிய
உனது ஆவணங்களுக்கென
அருங்காட்சியகம் அமைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன்
நீ உயிர்த்தெழுந்து வருவதற்குள்
உனது மதத்தின் வேதாகமத்தை
எழுதி முடிக்க வேண்டியிருந்ததால்
புராதன ஞாபகங்களோடு உறங்கப் பழகிக் கொண்டேன்
புராதன ஞாபகமென்பது வேறொன்றுமில்லை
ஒவ்வொரு கணமும் எரியூட்டி
நிகழ்த்திப் பார்க்கப்பட்ட எனது மரணத்தைத் தவிர
–
manomohan1982@yahoo.com
மனோ.மோகன்
- சாகசம்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- பூமி என்னும் வண்ணக்கலவை
- வலியறிதல்
- இயக்கம்..
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- கண்டனத்துக்குரிய சில…
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- இது பின்நவீனத்துமல்ல
- ஊகங்களும் ஊடகங்களும்
- வெட்கமற்றது
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- உயிர் தேடும் வண்ணங்கள்
- மெளன கோபுரம்
- ஆசை
- மரணத்தைத் தவிர வேறில்லை
- மூன்று கவிதைகள்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- ஆகவே சொல்கிறேன்
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- ” புறத்தில் பெருந்திணை “
- நன்றி, மலர் மன்னன்
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- screening of the documentary film Out of Thin Air
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- இரண்டு கவிதைகள்
- ஜெயபாரதன் தொடர்கள்
- பறவையின் இறப்பு
- இயலாமை
- ஒலி மிகைத்த மழை
- வேத வனம் – விருட்சம் 44
- இறகுப்பந்துவிடு தூது!
- தோற்கப் பழகு!
- மூன்று கவிதைகள்
- நிழலின் ஒளி
- மொட்டை மாடி
- கோ.கண்ணனின் கவிதைகள்