வேத வனம் – விருட்சம் 44
எஸ்ஸார்சி
மேகங்களை உலுக்கி
சலத்தை வர்ஷிக்கும்
ஒ மருத்துக்களே
காடுகள் உம்மை ஆராதிக்கின்றன
எமக்கு ஆ அசுவம்
தேர் செய் தேட்டம்
ஆண் வாரிசொடு
புகழும் தாருங்கள் ( ரிக் 5/57)
அக்கினியே நீ
அரணிக்கட்டையில் வதிவோன்
அவியை ஒர் அசுவமாய்
ஏந்திச்செல்வோன்
காற்றுபோல் எங்கும் வியாபி
வதியும் மனையோடு
உண்ணும் உணவு நீ
பிறந்த குழவிபோல்
எப்போதும் புதியவன்
பசுப் புற்களை மேய்வதொப்ப
விருட்சங்களை புசிப்போன் நீ
தேவர்க்கு எம்
தோத்திரங்கள் எடுத்துக்கூறு ( ரிக் 6/2 )
இந்திரன் ஒயாப்போராளி
வேள்விக்கு உறுதுணை
எப்போதும் நன்மை செய்பவன்
மனு வமிச மக்களை
பாலிக்கும் சோமம் அருந்தி
பலவான் அவன்
தச்யுக்களை வீழ்த்தி
மக்களை ஆரியனுக்காய் வென்றவன்
அது அவன் வீரச்செயல் ( ரிக் 6/18 )
இந்திரனே தயிரொடு
கலந்து சோமம் பருகுக
பரப்பிய தருப்பைப்புல் மீதமர்க
உன்னை விரும்புவோன்
நிலம் நீளட்டும்
பரத்துவாசன் யான்
சோமம் பிழியப்பட்ட அப்போதே
வணங்கும் அவர்களை
காத்திடுக நீ ( ரிக் 6/23)
சூரனே இந்திரனே
ஆரிய எதிரிகள்
தாச ப்பகைவர்கள்
இருவிதத்து மக்களோடு
மோதிப்பின்
வெட்டியும் வீழ்த்தினாய் ( ரிக் 6/33)
விண்ணகக்காளை
புவிக்கும் அப்படியே
நதிகட்குக்காளை
செடிகொடிகட்குமப்படியே
உத்தமக்காளையாம்
இந்திரனே உனக்கு
தேன் சுவை
சோமம் தயாராகிறது.
அவன் சோமன்
உஷைகளைச் சூரியனுக்கு
மணம் முடித்தவன்
சூரிய மண்டலத்தே
வின்ணைச்சமைத்தவன்
புவி அமைத்து
அச் சோமனே
அமிர்தத்தை க்கண்டவன்
கதிரவன் தேருக்கு
ஏழு புரவிகள் பிணைத்தோன்
பசுக்களைத் தீம் பாலொடு
பக்குவமாய்ப்படைத்தோன் சோமனே ( ரிக் 6/44 )
—————————————————-
essarci@yahoo.com
- சாகசம்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- பூமி என்னும் வண்ணக்கலவை
- வலியறிதல்
- இயக்கம்..
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- கண்டனத்துக்குரிய சில…
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- இது பின்நவீனத்துமல்ல
- ஊகங்களும் ஊடகங்களும்
- வெட்கமற்றது
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- உயிர் தேடும் வண்ணங்கள்
- மெளன கோபுரம்
- ஆசை
- மரணத்தைத் தவிர வேறில்லை
- மூன்று கவிதைகள்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- ஆகவே சொல்கிறேன்
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- ” புறத்தில் பெருந்திணை “
- நன்றி, மலர் மன்னன்
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- screening of the documentary film Out of Thin Air
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- இரண்டு கவிதைகள்
- ஜெயபாரதன் தொடர்கள்
- பறவையின் இறப்பு
- இயலாமை
- ஒலி மிகைத்த மழை
- வேத வனம் – விருட்சம் 44
- இறகுப்பந்துவிடு தூது!
- தோற்கப் பழகு!
- மூன்று கவிதைகள்
- நிழலின் ஒளி
- மொட்டை மாடி
- கோ.கண்ணனின் கவிதைகள்