நீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

கே.பாலமுருகன் மலேசியா


ஒருதுர்கனவின் உச்சத்தில்
அல்லது நீண்ட நேர சோம்பலின் அலுப்பில்
வீட்டின் தரையைக் கட்டுப்பாட்டிற்குள்
வைத்துக் கொள்ள தவறியிருந்தேன்.
தரை தளர்ந்துகொடுத்த சிறுசந்தர்ப்பத்தில்
நீர் பெருகியிருந்தது.
அப்பா தரையிலிருந்து நழுவியிருந்தார்.
அம்மாவின் தலை மேற்பரப்பில் மிதந்துகொண்டிருந்தது.
எல்லோரும் நீருக்குள் மூழ்கியிருந்தார்கள்.
வீட்டின் தரையில் இப்பொழுது கடல்மீன்கள்.

கே.பாலமுருகன் மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்