உயிர்த்தெழுதல்…

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


போய்ச்சேருமிடத்தில்
புதிதாய் ஒன்று
இருக்குமென்று
ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள்
அம்மா.

புறப்படும்போது
வாகனமொன்றில்
அடிபட்டு இறந்த
வீட்டுப் பூனைக்காக

விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான்
குட்டிப்பையன்.

பயணம் முழுதும்
அநேகர் மனதில்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழந்து
மரித்துக் கொண்டிருந்தது
அந்தப் பூனை.

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி