இருளில் ஒளி?

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

உத்தமபுத்திரா


மீண்டும்
ஒரு
தீக்குச்சியைப் பற்ற வைத்து
என் இருண்ட வீட்டிற்குள்…
தேடிய போதுதான்
தெரிந்தது
எஞ்சியிருந்த
எனது
ஒரே ஒரு
மெழுகுவர்த்தியையும்
யாரோ
திருடி விட்டார்கள்…
தீர்மானித்து விட்டேன்
இனி தீக்குச்சிகளே
தேவையில்லை என்று…
ஆம்
எரிவதற்கு என்னிடம்
இனி
என்ன இருக்கிறது?
என்னைத் தவிர…

இருளைப் பழகிய கண்கள்
உடைந்து போன
உடல் பாகங்களுக்கு
உத்தேசமாகத் தடவிக்
கொடுக்க
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னும்…

இப்போது உயிருக்கென்ன
உணவா தேவை?
கண்களை மூடினாலும்
கனவுகள் உறங்கவில்லை…
உலகமே ஒருங்கி உடைத்தது
என் உடலை மட்டுந்தானே?
உளத்துக்குள் இன்னும்
ஒளி தெரிகிறதே…
மரணம் தூரமாம்
மனது சொன்னது
ரணங்கள் ஆறட்டும்…

எங்கோ தெரியும்
வெளிச்சப் புள்ளி
விடியலைச் சத்தியம் என்றது…

தூங்கும்போதும்
இன்னும்
நான்
சுவாசித்துக் கொண்டுதான்
இருக்கிறேன்…

கவிதை: உத்தமபுத்திரா
UthamaPuthra@gmail.com

Series Navigation

உத்தமபுத்திரா

உத்தமபுத்திரா