பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒரு குன்று உள்ளது
என் தேசத்தில் !
ஒரு நதியும் உள்ளது
என் தேசத்தில் !
என்னோடு வா !
மேலே ஏறிச் செல்லும் இரவு
மலை மீது !
கீழே இறங்கி வரும் பசி
நதி நோக்கி !
என்னோடு வா !
எவராக இருக்கப் போகிறார்
துயர்ப் படுவோர் ?
எவரென்று நானறியேன்
ஆயினும் அவர் அனைவரும்
என் தேச மக்கள் !
என்னோடு வா !
என்னைத்தான் விளிக்கிறார் மக்கள்
எனக்குத் தெரியவில்லை !
என்னிடம் முறையிடுகிறார் :
தாங்கள் யாவரும்
இன்னல் அடைவதாய்ச்
சொல்லி !
என்னோடு வா !
என்னிடம் சொல்கிறார் அவர்கள் :
“உமது மக்கள்
அதிர்ஷ்டம் இல்லாதவர் !
மலைக்கும் நதிக்கும் இடையில்
பசியோடும் துயரோடும்
தனியாய்ப்
போராட விரும்பிலர் !
காத்திருக்கிறார் உமது உதவிக்குத்
தோழரே !
நீ தான் எனக்கு !
உன்னைத்தான்
நான் காதலிப்பது
சின்னப் பெண்ணே !
என் கோதுமைச்
செங்கதிரே !
எமது போராட்டம்
கடுமை யானது !
நமது குடிவாழ்வும்
கடின மானது !
ஆயினும் நீ என்னோடு
அருகில் வா !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 11, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- தூரதேசத்திருந்து
- புத்திஜீவிகள்
- மரணம் பேரின்பம்
- ஐந்து கவிதைகள்
- அதிரூபவதிக்கு…..
- பூங்கா!
- வேத வனம் – விருட்சம் 34
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- மனச்சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- மூர்த்தி எங்கே?
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- மே 2009 வார்த்தை இதழில்…
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- நேசகுமாருக்கு என் பதில்
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- தலைவாசல்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009