வேத வனம் – விருட்சம் 34
எஸ்ஸார்சி
இந்திரன் வச்சிராயுதன்
பயங்கரன் உக்கிரன்
அனைத்தும் தெரிந்தோன்
ஊக்கம் அளிப்பதில்
சோம பானம் நிகர்த்தோன்
தேவ கந்தர்வ அப்சர்ச அசுர ராட்சச
வென்னும் ஐந்து வகை
சனங்களை க்காக்கும் அவன்
பாலகனாய் வருக எமக்கு.
நிலத்துப்பூர்விக
தச்யுக்களை சிம்யுக்களை
வச்சிராயுதத்தால் ஒழித்தோன்
கதிரோனை மீட்டு
நீர் நிலயை வசமாக்கி
விளை நிலங்களை
வெள்ளை நிறத்து
நட்புக் குழாத்தோடுப் பாகமிட்டவன்
பல்லோர் விளிப்பதுவுமந்த
இந்திரனை வச்சிராயுதவானை. ( ரிக் 1/100)
அசையும் சுவாசிக்கும்
உயிரிகளுக்கு த்தலைவன்
கிடைத்தப் பசுக்களை
பிராம்ணர்கட்கு வழங்கி
தச்யுக்களை தன் பாதம்
கீழாய்க்கொணர்ந்த
இந்திரனே நீ எம்மொடு
கொள்க நட்பு. 101
மானிடர்களைக்காப்பவனே
பலவானே
முக்கயிறு முறுக்கிக்கிடைத்த
வலிய தேர்வடமே
வான் வதியும் கதிர்
மேகம் புதை மின்னல்
புவி தங்கு அனலென
முத்தீயும் நினது
அற்பச்சண்டையோ
உக்கிரப்போர் எதுவோ
எதற்கும் அழைப்போம் நின்னை
வாரும் இந்திரனே
தாரும் ஊக்கம்
அறவழி யேகிப்
பெறுவோம் உணவு
வருணன் மித்திரன் அதிதி ஆழ்கடல்
புவியொடு வானும் தீயும்
உடன் எழுந்தருளி
புரிகத் துணை எமக்கு . ரிக் 102
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- தூரதேசத்திருந்து
- புத்திஜீவிகள்
- மரணம் பேரின்பம்
- ஐந்து கவிதைகள்
- அதிரூபவதிக்கு…..
- பூங்கா!
- வேத வனம் – விருட்சம் 34
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- மனச்சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- மூர்த்தி எங்கே?
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- மே 2009 வார்த்தை இதழில்…
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- நேசகுமாருக்கு என் பதில்
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- தலைவாசல்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009