அவரும் இவரும் நீயும்!

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

தமிழநம்பி



அவர்:

ஒருவருடை இறப்பினுக்கே ஓரினத்தைப் பழிவாங்கும்

உளங்கொண் டாரோ?

உருளுலகில் இந்நாட்டை உயர்வல்ல அரசாக்க

உளங்கொண் டாரோ?

உருவாகும் ஈழத்தால் ஒற்றுமைக்கிங்(கு) ஊறென்றே

உளங்கொண் டாரோ?

ஒருமுடிவாய்ப் பலவகையும் உதவுகிறார் சிங்களர்க்கே

உணமை ஏதோ?

இவர்:

ஈழத்தில் இனமழிய இவ்வாட்சி எதற்காக

இனியெம் சொந்தம்

ஆழத்தாழ் துயர்மூழ்கி அழிகின்ற நிலைமாற்ற

ஆளும் தில்லி

தாழவிடா தாட்சியினைத் தாங்குகின்றோம் ஈழப்போர்

தடுப்போம்! என்றே

சூழல்கண் டுரைத்தார்பின் சோர்ந்தாரே! பதவிக்காய்ச்

சுருங்கி னாரே!

நீ:

இங்குதமிழ் நாடாளும் இயலாத்தன் னலத்தாரின்

ஏய்ப்புக் கூறி

பொங்கீழத் தமிழினத்தைப் பொல்லாரோ டிணைசேர்ந்து

போரில் மாய்க்கும்

எங்குமிலாக் கொடுமைசெயும் இந்தியத்தின்

எடுத்துக் கூறி

மங்கலலாப் புகழோடே மாய்ந்தமுத்துக் குமாரேயெம்

மறமே வாழ்க!

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி