சென்ரியு கவிதைகள்

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

மாமதயானை


நாற்காலி ஆசை
யாரைத்தான் விட்டது…
நாற்காலியில் பொம்மைகள்
*
கர்த்தர்
நம்மைக்காப்பாற்றுவார்…
சிலுவையில் கர்த்தர்
*
எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்….
சாயம் போன வாழ்க்கை

*
ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்…
மரம் வெட்டும் தந்தை
*
தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி
*

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்…
மண்வாசனை


manisen37@yahoo.com

Series Navigation

மாமதயானை

மாமதயானை