மாயமான் விளையாட்டு…

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



#

மகன் பிறப்பு குறித்து
நண்பன் ஒருவன்
உதிர்த்த வாசகம்:

“எப்படி இருக்கிறது
நீ படைத்த
கவிதை?”

வாகாய்க் கவிதை செய்ய
வார்த்தைகளோடு
வதைபடும்
மாயமான்
விளையாட்டுகளின்றி

இருக்கவேண்டுமே
இவன் வாழ்வாவது
என்றிருந்தது
எனக்கு.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி