சக்திக்குள்ளே சிவம்…

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



நாடெதுவென்றபோதும்
நாணம்கொள்ளும்
பெண்கள் அழகு
என்றெல்லாம்
எழுதி வந்தவன்
ஹரிகதா காலாட்சேபம்
சீதாக் கல்யாணம் என்று
தம்பதி சமேதராய்
தரிசனம் தருவதும்

ஒன்பது மணி நேரமும்
அலுவலகத்தில்
ஓயாமல் பேசும் நண்பனை
மனையாள் குழந்தையோடு
மார்க்கெட் ஒன்றில்
மௌனமூர்த்தியாய்
காண நேர்வதும்

தொலைதூரக் கட்டண
தொலைபேசி அழைப்புகளில்
மாதந்தோறும் அரைமணிநேரம்
மறக்காமல் பேசும் நண்பன்
இருவரி பதில்களாய்
ஈமெயில் அனுப்பத்தொடங்குவதும்

ஆகக்கூடி

சக்திக்குள்ளே சிவமென்பது


சாத்தியம்தான் போல.

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி