இருள்வெளி!

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

கருப்புநிலா


தெப்பத்தின்
நீரலையும் படிகளில்
குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன,
ஓராயிரம் மீன்கள்.

ஆழத்தின் நடுவிலிருந்து
அபயம்கேட்டு எழுகிறது,
திரட்சியில்லாத
கை ஒன்று!

திறந்திருக்கும்
அதன் உள்ளங்கையில்,
‘உ’வோ, ‘V’யோ எழுதியிருக்கிறது.
பிறைநிலவாகக் கூட இருக்கலாம்.

நீ¡¢ல்பாய
நான் முயலுகையில்,
காக்கும் கடவுள்
என்முன் தோன்றினார்.
அபயம் கேட்ட கையை
புன்னகையுடன் பார்த்தார்.

*

அபயம் கேட்ட கை
உடலாய் மிதக்கிறது,
இப்போது நீ¡¢ல்.

கையில் காணப்பட்ட
குறி
காணாமல் போயிருந்தது.

இருள்வெளியில்
பதுங்கிக்கொண்ட
கடவுளுக்கு பூஜை நடக்கிறது.
மணி ஒலி கேட்கிறது.

*

குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன,
ஓராயிரம் மீன்கள்.


karuppunilaa@gmail.com

Series Navigation

கருப்புநிலா

கருப்புநிலா