இரண்டு கவிதைகள்
ஹெச்.ஜி.ரசூல்
இலைப் பூ
பூவின் இதழ் நிரப்பிய தேன்மணம்
வழிமூடிக் கிடந்த முட்காட்டின்
உள்நுழைய எத்தனித்த பட்டாம்பூச்சியொன்று.
கூர் நுனிகள் எகிற
பிய்த்தெறிய முனைந்த விரல்களில்
ரத்தகிரீடம் சூட்டிப்பார்க்க முயலும்
கவிந்த இருளின் மெளனம்.
வெள்ளைப்பகல் உடைபட்டுச் சிதற
கையளவு கனவு ஏந்தி
ராப்பிச்சை கேட்கும்
தாடிக்காரனின் மடியில்
ஒரு ஜோடிக் கிளிகள்
பட்டாம்பூச்சி உட்கார நினைத்த இலைப் பூவின் மீது
வானயோனிவிரிய விழும் பனித்துளி
சீறும்பாம்பு
சீறும் பாம்பின் ஓசையில்
நடுநடுங்கும் சிறுமழலை.
துரத்தப்பட்ட மேகங்கள்
திரள மறுக்கின்றன
ஒடிந்த விழுதென்றும்
துண்டித்துவீசப்பட்ட வடமென்றும் ஏமாந்தவர்கள்
இன்னும் நெருங்கி பரவசப் புணர்ச்சி செய்கிறார்கள்.
மகுடி கேட்ட மயக்கத்தில் ஆட்டம் தொடர்கிறது.
இதயங்கிழித்து
கண்கள் கொத்தி
படம்விரித்தாடும்
நூறுதலைகளுள்ள நாகப்பாம்பு.
வெறி கொண்டு ஒருதலையை
வெட்டுகையில்
இரண்டு தலைகள் முளைக்கின்றன.
mylanchirazool@yahoo.co.in
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- அவஸ்த்தை
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- வீட்டுக்குப் போகணும்
- “தோற்றுப்போய்…..”
- பயணம்
- பங்குருப்பூவின் தேன்.
- சாமி கண்ண குத்திடுச்சு
- காற்றுக்காலம்.
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- வேப்பமரம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- அப்பனாத்தா நீதான்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- கவிதைகள்
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- இரண்டு கவிதைகள்
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- மகாகவி பாரதி நினைவரங்கம்
- நூல் விமர்சன அரங்கு
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு