குழந்தைக் கதை

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

ஜெயராமசாமி


விளையாடிக் களைத்த

குழந்தைகள்

சிரிப்புக் கதை கேட்க்கிறார்கள்

குழந்தைகளின் கேள்விகளுக்கு

பதில் சொல்வது போல

சிரமமானது

அவர்கள் சிரிக்கும்படியான

கதைகள் சொல்வதும்

பலமுக மன்னன் ஜோ,

தங்கமலர், சிறுவர்மணி

கதைகள்

தெனாலி, முல்லா கதைகள்,

இலக்கிய எழுத்தாளர்கள்

குழந்தைகளுக்காக

பிரத்யேகமாக எழுதும் கதைகள்

,

நான் படித்த கதைகள் எல்லாற்றையும்

சொல்லிப்பார்த்தேன்

எல்லாவற்றையும் நிரகரித்துவிட்டு

அவர்களுள் ஒருவனே கதை சொல்ல ஆரம்பித்தான்

” ஒரு ஊர்ல கேட் இருந்துச்சான்”

முகத்தை சற்று கோணலாக

வைத்துக்கொண்டு,
”அது மியாவ்ன்னு கத்துமாம்…”

மழைக் கால வெயிலைப்போல

அவ்வளவு அற்புதமாக

சிரித்தார்கள்

அத்தனை குழந்தைகளும்


jeyaraamasamy@gmail.com

Series Navigation

ஜெயராமசாமி

ஜெயராமசாமி