இருக்கவே செய்கிறார் கடவுள்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

பா.அ.சிவம்



கடவுளிடமிருந்து தொடங்கியதாம்
உலகம் …
எவர் கண்டார் ?

கடவுளே தனது தியானத்திலிருந்துதான்
தொடங்கியதாக கூறுகிறார்
சுவாமிஜி ஒருவர்

படைத்தவராக இருந்தாலும்
கடவுளைக் காண்பித்தவர்கள்
மனிதர்கள்தான் …

எல்லாரும் கடவுளைப்
படைக்கலாம்
கடவுளைப் படைப்பது
அரிதான ஒன்றல்ல …


கத்திரிக்காயில்
புடலங்காயில்
பப்பாளி பழத்தில் எல்லாம்
பிறக்கத் தொடங்கி விட்டார்
கடவுள் …

அவரவர் விருப்பத்திற்கேட்ப
அல்லது
வேண்டாத
பொருட்களில்
கடவுளை வடிவமைத்துக் கொள்ளலாம் …

அவற்றை விற்கலாம்
வாங்கலாம்
வாங்கி வழிபடலாம்

கடவுள்
தண்டிக்க மாட்டார்
இதற்கெல்லாம் …

தண்டிக்க வேண்டியவற்றை எல்லாம்
விட்டுத்தானே
வைத்திருக்கிறார் …


sivam_balan@yahoo.com

Series Navigation

பா.அ.சிவம் , மலேசியா

பா.அ.சிவம் , மலேசியா