காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பாலும் கசந்ததடீ ! – சகியே
படுக்கை நொந்ததடீ ! . . .
நாலு வைத்தியரும் -இனிமேல்
நம்புதற் கில்லை என்றார் !
உணவு செல்லவில்லை ! – சகியே
உறக்கம் கொள்ளவில்லை !
மணம் விரும்பவில்லை ! – சகியே
மலர் பிடிக்கவில்லை !
குணம் உறுதியில்லை ! – எதிலும்
குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே – சுகமே
காணக் கிடைத்த தில்லை !
பாரதியார் (கண்ணன் என் காதலன் !)
++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 32
மருத்துவன் நீதான் !
+++++++++++++++++++++++++++
காதல் பித்து பிடித்துள்ளது
எனக்குத் தோழியரே !
ஒருவருக்கும் அது தெரிய வில்லை !
முள்ளாய்க் குத்துகிறது
என் படுக்கை !
என் நேசன் படுக்கை
வேறிடத்தில்
விரித்துள்ள போது
எப்படித் தூக்கம் வரும்
எனக்கு ?
முள்ளின் தன்மை அறிந்தவர்
ஒருவர்தான்
புண்ணின் வலியை உணர்வார் !
நகை வணிகன் ஒருவனே
நகை மதிப்பை அறிவான் !
இழந்தேன்
என்னரும் ஆபரணத்தை !
அத்துயர் என்னை
வீடு வீடாய்
விரையச் செய்கிறது ! ஆயினும்
என் பித்தை நீக்கிட
எந்த மருத்துவனும்
வந்திலன் !
பிரபுவை அழைக்கிறாள் மீரா
கருமை நிறக் கண்ணா !
மருத்துவன் நீதான்
குணப்படுத்து என்னை !
*****************************
(English Translation By : Jane Hirshfield )
*****************************
(தொடரும்)
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 11 2008)]
- அக அழகும் முக அழகும் – 1
- எது சுதந்திரம்?
- அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
- விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
- வயதில்லாமல் வாழும் உயிர்
- நினைவுகளின் தடத்தில் – 15
- தயிர் சாதம்
- ரெண்டு சம்பளம்
- வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
- ஊர்க்கிணறு
- இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
- “மறக்கவே மாட்டோம்”
- தருணம்/2
- எட்டு கவிதைகள்
- குயில்க்குஞ்சுகள்
- வன்முறை
- ஏமாற்றங்கள்
- தொலைந்த வார்த்தை
- தன்நோய்க்குத் தானே மருந்து!
- சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
- “தொலையும் சொற்கள்”
- முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
- தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
- தேடலின் தடங்கள்
- தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- தாகம்
- பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
- எழுத்துப்பட்டறை – மும்பையில்
- ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
- 27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
- ‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
- ஏலாதி இலக்கிய சங்கமம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
- நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
- தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
- என்றும் நீ என்னோடுதான்
- கவிதைகள்
- லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
- Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
- ‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)