காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நித்தம் சோற்றினுக் கேவல் செயவந்தேன் !
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான் !
வித்தை நன்கு கலாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான் ! . . . .
சக்கரத்தை எடுப்ப தொருகணம் !
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் ! . . . .
கண்ணன் எங்கள் அரசன் புகழினைக்
கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன் !
பாரதியார் (கண்ணன் என் அரசன் !)
++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 28
கண்ணன் என் அரசன் !
++++++++++++++++++++++++
கண்ணுக்கு இனியவன்
என்னாசைக் காதலன் !
பழகிடச் சுவை யானவன் !
மூச்சுக்கே மூச்சானது அவன் விடும்
மூச்சுதான் ! அனைத்துப்
படைப்புக்களும் அவன்
கடைக்கண் நோக்கில் நடப்பவை !
அவனது ஆத்மாதான்
புவி மாந்தர்க் கெல்லாம் ஆத்மா !
புளுகு நிறைந்தது இந்த உலகு !
போலி யானவர் குடிமாந்தர் !
கண்களில் தெரிவ தெல்லாம்
மண்ணில் வெற்றிடம் !
கணவன் மனைவி எனும் பிணைப்பு
போலியாகி விட்டது !
தன் மனைவி யென
என்னை உரிமை கொள்ளும்
உன்னத அரசன்
உமிழ்கிறார் என் பதியின் மீது !
நிஜமான என் மணவாளன்
உலக ஆசனத்தில்
ஒய்யாரமாய் அமர்ந்துள்ளவர் !
சூட்டிய அவர் மணமாலையைப்
பூரிப்போடு அணிந்துள்ள நான்
பொன்னும் பட்டாடையும்
புறக்கணிப்பேன் !
நெற்றியில் அவரிட்ட திலகம் ஏந்தி
புனித முனிவருடன்
பொழுது போக்குகிறேன் !
புனித அவரின் தாமரைப் பாதங்களே
எனது இல்லம் !
மீரா சொல்கிறாள் :
மெய்யான துயர் எதுவென்றால்
மானிட ராய்ப் பிறந்து
மகாப் பிரபுவைச்
சிறிதேனும்
அறியாமல் போவது !
*****************************
(English Translation By : Jane Hirshfield )
*****************************
(தொடரும்)
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 13, 2008)]
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் ! (கட்டுரை: 35)
- வாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!!
- யாதும் ஊரே
- அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது
- இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை
- பிரகிருதி
- அறியாமல் பிழை செய்யும் அவர்களை…அரவாணிகளே… மன்னித்து விடுங்கள்…!
- நினைவுகளின் தடத்தில் – 14
- நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- சொல்ல வேண்டிய சில… 1
- கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி
- இரயில் நிலையப் பெஞ்சு
- தமிழுக்கு தமிழ் என்றே பெயர்
- அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்
- எல்லாம் கடவுள் செயல்
- மதங்களின் பெயரால்
- தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?
- என்றான், அவன்!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 16 (சுருக்கப் பட்டது)
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு
- ஊடுருவிப் பார்க்கும் கண்கள்
- திவசம் @ டோம்பிவிலி – அவுட்சோர்ஸிங் (Outsourcing)
- நினையாத நினைவு
- இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!
- கவிதை௧ள்
- அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்
- இன்னும் கொஞ்சம்…!
- நூல்வெளியீடு “பிரம்மா”
- கோவையில் மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கம்
- 27-வது பெண்கள் சந்திப்பு , கனடா
- In Memory of Sri Lanka’s Black July
- குர்சி (நாற்காலி)