காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வேதங்கள் கோத்து வைத்தான் ! அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை !
வேதங்கள் என்று புவியோர் – சொல்லும்
வெறுங்கதைத் திரளில் அவ்வேத மில்லை !
வேதங்கள் என்ற வற்றுள்ளே – அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு !
வேதங்க ளின்றி ஒன்றில்லை ! – இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் !
++++++
துயரில்லை ! மூப்பு மில்லை ! – என்றும்
சோர்வில்லை ! நோயொன்றும் தொடுவ தில்லை !
பயமில்லை ! பரிவொன் றில்லை ! – எவர்
பக்கமும் நின் றெதிர்ப்பக்கம் வாட்டு வதில்லை !
நயமிகத் தெரிந்தவன் காண் – தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான் !
பாரதியார் (கண்ணன் என் தந்தை)
++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 22
பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
++++++++++++++++++++++++
கருமை நிறக் கண்ணா !
எனது வேண்டுதல் கேளாய் !
உனது சேவகி நான்.
நினதொரு
தெய்வீகத் தெரிசனம்
பைத்தியமாய் ஆக்கிய தென்னை !
உன் பிரிவு எனதுடலைத்
தின்று வருகிறது !
உன்னால்தான்
நானொரு யோக மாதாய்ப்
போனது !
மறைமுக மாக அறைகளில்
திருநீறைப் பூசி வழிபட்டு
ஊர் ஊராக
நானலைந்து வருகிறேன்
மான் தோலைப் போர்த்திக் கொண்டும்
மேனியை எரித்து
வீணாக்கிக் கொண்டும் !
+++++++
காடு, மேடு சுற்றிச் சுற்றி
நானும்
கானம் பாடி வருகிறேன்
குரலை உயர்த்தி
இரங்கத் தக்க முறையில் !
பிறப்பும் இறப்பும் இல்லாதவனே !
உனது யாசகி
என்னை ஏற்றுக் கொள் !
இன்புற அணைத்து நீ
துன்பத் துக்கு முடிவு கட்டு !
மீரா சொல்கிறாள் :
“எனக்கு மீளும்
பிறப்பையும் இறப்பையும்
துறப்பது உறுதி,
எப்போதும்
கருமேனியான் திருவடிகளை
இறுகப் பற்றினால்.”
+++++++++
(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)
(தொடரும்)
************
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2, 2008)]
- கடவுள் பேசுகிறார்
- 1988-ம் வருட விபத்து
- ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு
- போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”
- சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்
- வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்
- சொல்ல முடியாத பாடல்
- ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு
- நினைவுகளின் தடங்கள் -(11)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8
- நம்பிக்கை தரும் நாம்-2
- வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)
- சாபத்தின் நிழல்
- நதியலை தீரத்தில் யாசித்த பறவை
- செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ·பீனிக்ஸ் தளவுளவி (ஜூன் 5, 2008)
- பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்
- காதலில் தொடங்கிய என் பயணம்
- கடிதம்
- NFSC and SHIKSHANTAR Jointly present film screening -” Great Indian School Show ” by Avinash Deshpande (India)
- காலம் தோறும் பெண்கள்
- கருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்
- கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)
- பாவாணரின் ‘திரவிடத்தாய் ‘
- கனவுகளில் தொலைந்த..
- தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- சிறுகதைத் தொகுப்பு “கலவை” வெளியீடு
- தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்
- தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா
- காலத்தின் சார்பு நிலை!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
- அரிதிற் கடத்திகள்
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 22 – எம்.டி.வாசுதேவன் நாயர்
- யானை வந்துச்சு..!
- ஆதி காக்கா முதற்றே உலகு
- அன்புடன்…
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14