வேரை மறந்த விழுதுகள்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

சித. அருணாசலம்


பேரைச் சொல்லப் பிறந்தவன்

பெரிதாய் ஏமாற்றி விடக்

காரை விழுந்த பற்களுமாய்க்

கைத்தடி மூன்றாவது காலுமாய்

தாரை தாரையாய்க் கண்ணீர்

ததும்புகின்ற கண்களுமாய்

குறைகளோடு ஒன்றிப்போன நிலையில்

குற்றுயிராய் இங்கே பெற்றோர்கள்,

வேரை மறந்த விழுதுகளால் – வாழ்வை

வெறுக்கின்ற நிலையைப் பெற்றார்கள்.


chidaarun@yahoo.com

Series Navigation

சித. அருணாசலம்

சித. அருணாசலம்