தீபச்செல்வன் கவிதைகள்
தீபச்செல்வன்
சிகரட் நண்பன்
வாகனங்கள் புகைத்தபபடி
போய்க்கொண்டிருந்தது
எனக்கு
ஒரு சிகரட் வேண்டும்
என்றான் நவராஜ்
அல்லது
என்னிடம் இருபது ரூபா இருக்கிறது
வா
ஒரு சிகரட் புகைப்போம் என்றான்.
கடையின் மேல் மாடியிலிருந்து
நானும் அவனும்
சிகரட்டை குடித்துக்கொண்டிருந்தோம்
கடையின் சமையல் பகுதியும்
புகைத்தபடியிருந்தது
அந்த மாடிக்கு செல்லும்
படிகள்
சாம்பல் படிகளாகியிருந்தன
ஒரு சிகரட்டை புகைப்பதற்காக
என்னை நகர் முழுவதும்
தேடிக்கொண்டு வந்தான்.
ஒரு நாள் இரவு
பெட்டிக்கடை ஒன்றிற்கு
பக்கத்தில்
நானும் அவனும்
ஒரு சிகரட்டை மாறிமாறி இழுத்தோம்.
அவனின் வீட்டில்
முழுநாளும் தங்கியிருந்தபோது
அம்மாவுக்கு தெரியாமல்
மாமரத்தில் ஏறி சிகரட்டை இரகசியமாய் குடித்தோம்
மாம்பூக்களில் கலந்திருந்தன சாம்பல்.
நான் உதிர்ந்த சாம்பலுக்காய்
வருத்தப்பட்டு தேடினேன்
விழுந்திருந்த ஓவியங்களை
ரசித்துவிட்டிருக்க மிதிபடும்
சாம்பலை கைகளால் மூடினேன்
எப்போழுதுக்குமாய் எனது தோள்களை
இறுகப்பிடித்திருந்தான்.
சைக்கிளின் முன்னாலிருந்தான்
பொக்கற்றில் கிடக்கும்
ஒரு சிகரட்டோடு
அந்த சைக்கிள் நகர மறுத்தது.
நாளைக்கு நீ போகாதே என்றான்
என்றாவது நான்
போயாகவேண்டியிருந்தது
அன்று முழுக்க அவனின்
தேளில் நகராமல் சாய்ந்திருந்தேன்.
சாம்பல் கிண்ணத்தில் நிறைந்து
கிடந்தன
சாம்பல்களோடு
சிகரட்டின் அடித்துண்டுகள்
சிகரட்டில் கலந்திருந்த நமது சொற்கள்
கிண்ணத்தில் நிரம்பிக்கிடந்தது.
நமது வாடிக்கையான தேனீர்கடையின்
மொட்டைமாடியில்
நம்மோடு இரண்டு சிகரட்டுகள்
புகைந்தன
அவனின் முகம் கரைந்தபடியிருந்தது
நான் நிலவைப் பார்த்தேன்
அதுவும்
ஒரு சிகரட்டை புகைக்க
கொட்டிக்கொண்டிருந்தது சாம்பல்
நமது நகரமெங்கும்…..
————————————————-
செலவு
————————–தீபச்செல்வன்
மூன்று நூறு ரூபாய்
தாள்களின்
முகத்தோடு பியர்
சிரித்துக்கொண்டிருந்தது
கிளாசில்
நிரம்பியிருந்த
வீண்செலவை
குடித்து விட்டு திமிரடைந்தேன்.
கலைச்செலவு
இருபத்தைந்து ரூபா
மதியமும் இரவும்
தொண்ணுறு ரூபா
ஜயாயிரம் ரூபாவில்
மீதி
படிப்புபகரணங்களுக்கு என்று
அவன் சிரித்தபடி கூறினான்.
மாலைத் தேனீரை தவிர்க்கப்போறேன் என்றான்.
அம்மாவின் காசுகள்
வியர்வைகள் என்றான்
எனக்கு வந்த
இரண்டாயிரம் ரூபாவில்
பல ஆயிரம்
அம்மாவின் களைப்புகள் கேட்டன.
அந்த சின்னவன் சிரித்தான்
எனது முகத்தில்
ஓங்கி அறைந்தது
அந்த பொறுப்புடைய வாழ்க்கைச் சிரிப்பு.
கிளாஸ் உடைய
அதற்குள்
எனது உடைந்த முகம்
நொருங்கிக் கொட்டியது…
—————————————————-
இரவு நதி
————————–தீபச்செல்வன்
இரவை மிருகம்
என்ற
நண்பனிடமிருந்து
நான் பிரிந்து விட்டேன்
இரவு நதியாகி பரவுகிறது
படிகள் இல்லாத
மொட்டை மாடியில்
விரிந்து கிடக்கிறது
வெக்கையடிக்கும்
எனது
பாட புத்தகங்கள்
அறையை பூட்டிவிட்டு போகிறான்
தோழன்
எனதறைக்கு
காதலி ஏறிவர
படிகள் இல்லை என்றாள்
இரவு அறைக்கு
ஏறி வருகிறது
இரவை ஒரு கோப்பையில்
நிரப்பி வைத்து
பார்த்துக்கொண்டிருந்தேன்
மின்குமிழ் அழுதது
படியிறங்கும்
என்னை தின்பதற்காய்
கீழே
ஒரு மிருகம் திரிகிறது.
நிலவு தேடிய குழந்தை
வாகனங்களுக்கிடையில்
குழந்தையின்
அழுகையும் சிரிப்பும்
தாயின் பாடலும்
நசிந்து விடுகிறது
நசிக்கப்பட்ட
கொஞ்ச சோறுகளுடன்
தாய் நிலவை
தேடிக்கொண்டிருந்தாள்
உயர வளர்ந்து
வானத்தை மூடிய
கட்டிடங்கள்
எரிந்து புகைவிட்டன
தலையில்
தூக்கி வைக்கப்பட்ட
ஜந்து மாடிகளையும்
இறக்கி
எறிந்து விட்டு
மொட்டைமாடியில்
அரிதாய் திரிகிற
காற்றை பிடித்து
குடித்துக்கொண்டிருந்தேன்
நிலவு வானத்தில்
ஒரு மூலையில்
ஒட்டி ஒளிந்திருந்தது
தாய் நிலவை
தேடிக் களைக்கிறாள்
சேரிக்குடியிலிருந்து
அவள்
என்னைக்காட்டி
குழந்தையின் வாயில்
சோற்றை திணிக்கிறாள்.
———————————————-
குறியுடன் வரும் இரவு
—————தீபச்செல்வன்
அடையிலிருக்கும் கோழியை
வலிந்து
சேவல் புணர்கிறது
இன்னும் சில சேவல்கள்
முதுகைக் கிழித்து
குறியை புதைக்கின்றன
சேவலின்
கால்களுக்கிடையில்
கோழி
நசிந்து கிடக்கிறது
இருட்டில் இருட்டுடன்
புணர்வதைப்போலிருக்கிறது
இரவோடு
முகம் கரைகிறது
வெறும் குறிகளும்
முலைகளும்
நிறைந்து தெரிகிற
நினைவில்
குறி புதைந்து விடுகிறது
சொற்களில்லை
நீளமில்லை
உடல்கள் ஒட்டிக்கொள்ளாது
சேவலைப்போல
குறி
எழும்பி விழுகிறது
குறியை புதைத்து விடுகிற
இரவு
பயங்கரமாய் வருகிறது
பகல் குருடாகிப்போக
இரவானதும்
நெருங்கிவிடுகிறோம்
குறிகள் புதைந்து விடுகிறது.
—————————————–
பல்லி வசித்த அறைக்கு திரும்பியது
————————–தீபச்செல்வன்
அவனுக்கு சொல்லாமலே
நான் அறையை விட்டு போய்விட்டேன்
எனது புத்தகங்களையும்
உடுப்புகளையும்
வந்து தேடினான்
எனது கட்டிலுக்கு கீழாய்
பழைய செருப்பு கிடந்தது
முகம்
பார்க்கும் எனது கண்ணாடியையும்
பழைய
வானொலிப்பெட்டியையும்
அவனுக்காய்
விட்டுச்சென்றிருந்தேன்
கண்ணாடியின் மூலையில்
உடைந்த
எனது துண்டு முகம்
ஒட்டியிருந்ததாய்
யாரிடமோ சொல்லியிருந்தான்
தண்ணீர் கூஜாவில்
தனித்தமுகம்
மிதக்கக்கண்டான்
அந்த வானொலிப்பெட்டி
எப்பொழுதும்
பாடியபடியிருந்தது
அது ஒரு குளிரான அறை
நான் வேறொரு
அறைக்கு சென்றபோது
என் புத்தகங்களிற்குள்ளும்
ஆடைகளிற்குள்ளும்
வெக்கை புகுந்தது
அந்த அறையின்
பயங்கரத்தை பற்றி
நான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை
அதற்கு பிறகும்
அவன் என்னை கண்டு பேசினான்
நான் ஒரு நாள்
அந்த பழைய அறைக்கு
சென்று
அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்தேன்
அவனது அறை
வெளித்து காற்று நிரப்பியிருந்தது
ஆறுதலாய் பேசினான்
அறையின் சுவர்கள் எங்கும்
புன்னகை
பூத்து விரிந்து கிடந்தது
தனியாளாய் படிகளால்
கீழே இறங்கினேன்
பயங்கர அறை ஒன்றினுள்
சென்றடங்குவதை
அவன் கண்டான்
வெளியில் தூக்கியெறிந்த
ப்பாக்கோடு
வீதியில் நின்றேன்
அந்த இரவில் என்னை
யாரும் காணவில்லை
மீண்டும் அவன் என்னை
கூட்டிச் சென்றான்
அந்த அறைக்கு
மாடியின் படிகள் பூத்திருந்தன
deebachelvan@gmail.com
- பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
- மனக்குப்பை
- நேற்றிருந்தோம்
- சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.
- இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
- வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்
- அக்கக்காக் குஞ்சு !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6
- புவியீர்ப்பு கட்டணம்
- ஆகு பெயர்
- தரிசனம்
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்
- கவிதைகள்
- வலி உணரும் தோல்கள்
- தாரா கணேசன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- ஏழு கவிதைகள்
- எனது மூன்று வயது மகள்
- அடுப்பிலே போடப்பட்ட அமைதி
- காட்டாற்றங்கரை – 2
- மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்
- மாதா வெளியேற மறுத்தாள்
- நம்ப முடியாத விசித்திரம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !
- எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்
- சுஜாதா என்கிற ஆளுமை
- சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!
- எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.
- சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்
- மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)
- “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி
- கவிதா நிகழ்வு
- கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை
- சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!
- யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்
- புரியவில்லையே…?
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
- கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?
- புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்
- சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை
- கருப்பாயி மகனுடைய பெட்டி