கவிதைகள்
எஸ் அனுக்ரஹா
கணிணியியல்
உயிர் மின்சாரம்
ஏறியதும்,
வாழ்கைப்
பதிவதின், நகர்வதின்
சூத்திரம்
‘உண்டு’ ; ‘இல்லை’ ;
முழுமை நிலையானதன்று
இரவுகள்தோறும்
சிரித்துக் கொண்டும்,
கரைந்து கொண்டும்,
வளர்கின்றன பிறைகள்.
ஓர் இரவு, முழு நிலவென
நிறைந்து ஒளியூட்ட,
முயற்சிகள் முடிவதில்லை;
மீண்டும் மீண்டும்
உருவாகும், முழு நிலவு.
இயற்கையிலேயே
முழுமை நிலையானதன்று.
சேவை
மேலிருந்து விழும்
கருணைச் சிதறலை
உறிந்து
எங்கும் பரப்பும்
மண் மெத்தை.
தேடல்
கலையா? வாழ்க்கையா?
இவ்விடையில்லாத்
தேடலின் தூண்டிலில்
சிக்குவதில்லை
நீரோடோடும்
மீன்கள்.
காலக்கடல்
பலர் சிலராவர்
சிலர் பலராவர்
காலக்கடலின்
ஒவ்வொரு அலையின்
எழுச்சியிலும்!
ஒவ்வொரு எழுச்சியும்
ஒரே கடலில்தான்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
ஒரே கரையில்தான்
பிம்பம்
நிலைக் கண்ணாடியில்
பிம்பங்களைக் காண
நானும் ஒரு பிம்பமென
சட்டகம் முழுதும் நிறைய
என்னைத் தாண்டிய
முப்பரிமாணத்தை
மறைத்து விட்டேன்.
பிழை
சிறுவயதில் செய்த
பிழையைத் திரும்பவும்
செய்ய வேண்டாம்.
எதையும், சூனியத்தால்
பெருக்கினால்
மிஞ்சுவது சூனியம் மட்டுமே!
வாழ்க்கை
ஓவியம் புரியவில்லையென
வண்ணங்களை
நகைப்பது போல
வாழ்க்கை புரியாதபோது
மனிதர்களை
நகைக்கிறோம்.
முதல் மிதிவண்டிப் பயணம்
வீதியின் விசும்பல்கள்
காற்றோடியைந்த ராகமாகி
செவிகளைத் துன்புறுத்தாது
மறைந்தன.
தெருவோர நிகழ்வுகள்
பல முகங்களின் வாழ்க்கையை
அம்பலப்படுத்தின
பார்க்க முனைந்த
விழிகளுக்கு மட்டும்
பலவித மரங்களும்
சூழலோடு புணர்ந்து
அகன்ற வீதியின் ஓரங்களிலே
தம் இருப்பைப் போற்றாது மரியாதையோடு
முகம் நிமிர்த்தி நின்றிருந்தன
தம்மை உணராதவர்க்கும் நிழலாக
உலகம் என் கண் முன்
மெதுவாக நகர்ந்தது
தன் எல்லா உறுப்புகளையும்
விரிவாக விளக்கியவாறு,
அசுர வாகனங்கள் நிரம்பிய வீதியின்
ஓர் ஓரத்தில் என்
மிதிவண்டிப் பயனம்
தொடர்கிறது.
சிறகுகள் முளைத்த சுதந்திரத்துடன்
கவலையின்றிப் பார்க்கிறேன்
கவலை தோய்ந்த முகங்கள்,
முன்னேற முந்துவதை.
வியர்வைத் துளிகள்
வீசிய தென்றலால்
குளிர்ந்தன.
(எழுதிய நாள் 07.08.2003)
மழை
மழைப் பருவம் மயக்கியது
மண் மணக்கும் வீதியில்
நீர் குட்டைகளைக்
கலைக்கும் மழை
நானும் கலைக்க முனைய,
உடனே என்னை
உயர்த்தி தேரளில்
சாய்த்துக் கொண்டார்.
விநோத பாஷையில்
வியாதி ஒன்றைச் சுட்டி
தோள் சவாரியும் சுகம்தான். . . .
குடை, உலகை மறைக்க,
கஷ்டப்பட்டுத்தான் அதைக்
கண்ணிலிருந்து துரத்தினேன்
கடவுளிடம் கேட்டு
நானே மேகப்பஞ்சைப்
பிழிய வேண்டும். . . .
மழை நின்றது
“சாமிக்கே கை
வலிக்குமா என்ன?”
அருகில் ஒரு மரம்
சோம்பல் முறித்து,
துளிகள் தெளித்தது.
நின்று கொண்டே இருக்கின்றன.
அவை சோம்பேறிகள்.
அட வண்ணமயமாய் பூச்சிகள்!
கடவுள் ஏதேனும்
சேதி சொல்லி அனுப்பியிருப்பாரோ?
கோயிலில், அன்று
அவரிடம் ஒன்று கேட்டிருந்தேன். . . .
வீட்டு வாசலில் இறக்கிவிட்டு
அப்பா சொன்னார்
“அம்மா, . . .என்ன மழை!”
ஹ்ம்ம்ம் . . . . அதற்குள் வந்துவிட்டோமே?!
(எழுதிய நாள் 28.02.03)
- பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
- மனக்குப்பை
- நேற்றிருந்தோம்
- சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.
- இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
- வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்
- அக்கக்காக் குஞ்சு !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6
- புவியீர்ப்பு கட்டணம்
- ஆகு பெயர்
- தரிசனம்
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்
- கவிதைகள்
- வலி உணரும் தோல்கள்
- தாரா கணேசன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- ஏழு கவிதைகள்
- எனது மூன்று வயது மகள்
- அடுப்பிலே போடப்பட்ட அமைதி
- காட்டாற்றங்கரை – 2
- மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்
- மாதா வெளியேற மறுத்தாள்
- நம்ப முடியாத விசித்திரம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !
- எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்
- சுஜாதா என்கிற ஆளுமை
- சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!
- எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.
- சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்
- மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)
- “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி
- கவிதா நிகழ்வு
- கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை
- சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!
- யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்
- புரியவில்லையே…?
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
- கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?
- புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்
- சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை
- கருப்பாயி மகனுடைய பெட்டி