தடுத்தாலும் தாலாட்டு

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

புகாரி


உள்ளத்தில் புரண்டோடும்
ஓரு கோடிக் கவி நதிகள்
அவை உயிரை எழுத்தாக்கி
உணர்வேந்தும் நவமணிகள்

சொல்லுக்குப் பொருளென்று
சில நூறு விளக்கங்கள்
அது சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் நெஞ்சுக்குள்

பள்ளத்தின் நிலையென்றும்
பரிதவிக்கும் தாகங்கள்
அதன் பசியுள்ளம்
கேட்பதெலாம்
பிரசவிக்கும் மேகங்கள்

வல்லோனும் வாழ்வதில்லை
வசைமொழியே இல்லாமல்
தினம் வந்தவற்றுள்
விசம்நீக்கி
வாழ்வதுதான் பெருவாழ்வு

கொண்டோடும் நதியோடு
கொடியாகச் சென்றாலும்
உன் கரைதேடும் கண்ணுக்குள்
கொள்வாய் ஓர் நம்பிக்கை

தண்டோடு தாழம்பூ
தனிவாசம் வீசிவரும்
நீ தடுத்தாலும் உனையள்ளித்
தாலாட்டுப் பாடிவிடும்

அன்புடன் புகாரி

Series Navigation

புகாரி

புகாரி