காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கீதங்களில் மூழ்கிப் போய் நான்
சாதுக்களுடன் அலைகிறேன்
வீதியின் வழியே !
எதையும் களவாட வில்லை !
எவரையும் காயப் படுத்த வில்லை !
யாரென்னைப் புறக்கணிப்பார் ?
யானை மீதிருந்து கீழே
நானிறங்கிக் கழுதை முதுகில்
ஏறுவேன் என்று நீ
நினைக்கிறாயா ?
புனித மீரா கானங்கள் (1498-1550)
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்தினில் எனைக் காணடி என்றான்;
கண்கள் உறங்கல் எனும் காரியமுண்டோ
கண்ணனைக் கையிரண்டும் கட்டலின்றியே ?
பாரதியார் (கண்ணன் என் காதலன்)
புனித மீராவின் வாழ்க்கை வரலாறு :
பதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. அவள் கண்ணன்
மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்கின்றன. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.
1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீதி பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.
சென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் !
நான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன !
மீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்ளனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்ததே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாக உள்ளது !
**********************
கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
கடைவீதிக்குச் சென்று நண்பனே
கருமேனி யானைப் பெற்று வந்தேன் !
இரவில் வணங்கிக் கொள் நீயவனை.
பகலில் பற்றிக் கொள்வேன் நானவனை.
முரசடித்து வந்தேன் அனுதினமும்
மெய்யாக அவனைக் கைக் கொளவே !
நிரம்பக் கொடை அளிப்பது நான் என்றாய் !
மிகவும் குறைவென நான் சொல்வேன் !
தராசில் நிறுத்தேன் நான் அவனை
மெய்யாக அவனைக் கைக் கொளவே !
ஈடாகத் தந்தேன் என் இல்வாழ்வை
என் நகர வாழ்வு, என் பொன் நகைகள் !
மீரா சொல்கிறாள்: “இப்போது அந்தக்
கருமேனி யான் தன் கணவன் என்று !
அருகில் இரு நான் உறங்கும் போது !
உறுதி அளித்தாய் நீ முன் பிறப்பில் !”
(ஆங்கிலத்தில் : ராபர்ட் பிலை)
(தொடரும்)
************
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 7, 2008)]
- பனிக்கரடி முழுக்கு
- ஒரு ராஜா ஒரு ராணி
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ராட்டடூயி
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- மூடு மணல்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- யார் இவர்கள்?
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வேட்டை நாய்
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- வருவதுதான் வாழ்க்கை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கிளைதாவி வரும் மின்னல்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- பெண்புத்தி, பின்புத்தி!
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- கத்தி குத்திய இடம்…
- அன்புள்ள கிரிதரன்
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- 27வது பெண்கள் சந்திப்பு
- கவிதைகள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- கடிதம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கவிதைகள்
- நண்பன்
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- “மலர்கொடி”
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- “அலமாரி”