கவிதைகள்
உஷா தீபன்

ஒன்றில் அதுவாகி அதனில் மற்றொன்றாய்
என்னுள் நானாகி பிறரில் நானாகும்
எதையும் காண எப்படியும் காண
எங்கோ ஜனித்ததொன்றை
எண்ணித்தொலைய கருமம்
இங்கே நிகழ்வதைத்தான்
என்றோ மறந்துபோகும்
நுட்பத்தில் நுட்பமாய்
நுணுகிப் புகுந்து பரவி
இயற்கையும் செயற்கையுமாய்
எதிலும் நிறைந்து வளரும்
கங்கையொடு கழிவு
நன்மையொடு தீமை
சோலையும் பாலையும்
சோகமும் மகிழ்வும்
எண்ணச் சுடரில்
எகிறிவிட்ட பொறியாய்
எல்லாமும் நிகழும்
அதுவே தோற்றுவாய்!
சொல்லிவிடு
படித்தது போதும்: எழுது மற்றவர்களுக்கு ஏதாவது விஷயஞ் சொல்
உன் கருத்தை உலகுக்குத் தெரிவி ஓங்கிக் குரலெழுப்பு
உட்கார்ந்து போகாதே
ஏட்டுச்சுரக்காய்
கறியாய் உதவட்டும்
அவநம்பிக்கை போக்கி ஆத்மசுகம் தேடு
அஞ்சுக்கு ரெண்டு
பழுதிருக்காது
முடிவுஅனைத்தும்
மூளைக்கே சொந்தம்
பிறருக்கும் அதுபோலே
ஆனாலும்
நீ சொல்வதைச்
சொல்லிவிடு
இறக்கிவிட்டோம் என்ற
எண்ணமேனும் மிஞ்சும்
அம்மா
கங்கையானாலும்
காவிரியானாலும்
எங்கோவோர் மூலையில்
ஏதோவோர் மலையிடுக்கில்
ஒரு சின்னதான ஜனனத்தில்
உயிர்த்து எழுந்து
தவழ்ந்து இறங்கி
பல்கிப்பெருகும்
புகுந்த இடத்தில்
முற்றிலும்
புதிதாய்
பூமியில் பரவும்
போகுமிடமெல்லாம்
தாகம் தணித்து
காணும் நிலமெல்லாம்
கசிந்து செழிப்பாக்கி
புவியை வளமாக்கும்
ஒரு ஜீவநதி
தலைமை
தேசம் முழுதும்
குப்பை கூளம்
சுத்தம் பண்ண நினைச்சுத்தான்
துடைப்பத்தைக் கொண்டு வச்சோம்
துடைப்பமே குப்பையாச்சு
தூசிகளும் அதிகமாச்சு
தேசம் முழுக்க குப்பை கூளம்
தேவை ஒரு புதுத்துடைப்பம்
ushadeepan@rediffmail.com
உஷாதீபன்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1
- பொற்கொடியும் பார்ப்பாள்
- நீரால் அமையும்
- கால நதிக்கரையில்……(நாவல்)-26
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 30
- பூகம்பம்
- அவருடைய புகழுக்குப் பின்னால்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2
- நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு
- காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !
- Marappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu
- தீபாவளி
- கவிதைகள்
- கவிதை
- சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…
- தமிழர் திருமகன் இராமன்
- புக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம்
- எழுத்துப் பட்டறை
- அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்
- எங்கள் தேசப்பிதாவே
- கொழுக்கட்டைச் சாமியார் கதை
- அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9
- தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)
- “படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
- ஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
- தைலம்
- Nfsc announces the Release of Video Documentary “Folklore of the Transgender Community in Tamil Nadu”.
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- “முகமிழக்கும் தருணம் இரவில்தான்”