மௌனம்

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

ஆதிராஜ்



மௌனமொரு பூஞ்சோலை – வண்ண
மலர்கள் அங்கு சிந்தனைகள்!

மௌனமொரு மொழியாகும் – அது
மனத்தீயை உசுப்பி விடும்!

மௌனமோர் இமயமலை! – அங்கு
மனமெங்கும் கங்கை நதி!

மௌனமொரு கலையரங்கம் – அங்கே
மனமேடை நாடகங்கள்!

மௌனமொரு சிறைச்சாலை – அங்கு
மனக் குரங்கு வசமாகும்!

மௌனமொரு மருந்தாகும் – பகை
மாறி வரும்! உறவாகும்!

மௌனமொரு நோன்பாகும்! – உண்மை
மலரும்! மனம் நிறைவாகும்!

மௌனமொரு விளக்காகும்! – இருள்
மறையும்! பாதை தெளிவாகும்!

மௌனம் தனி உலகமடா! – அதில்
மங்கலம் அனைத்து முண்டு!

– ஆதிராஜ்.

Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்