மனப்பறவை

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

புதியமாதவி, மும்பை


நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது
ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்பு பிடிகளுக்கு
நடுவில்
கதவுகள் திறக்க
காத்திருக்கிறது
போதும் போதும்
பறந்தது போதுமென்று
தடவிக்கொடுக்கிறது
காற்று.
சிறைகளை உடைத்து
வெளியில் வந்துவிடு
இரவோடு இரவாக
அழைக்கிறது
நிலவு.
ஆகாயமே சிறையாகிப் போனதால்
சிறகுகளை எரித்த
நெருப்பின் வெளிச்சத்தில்
கூண்டுக்குள் இடம்தேடும்
மனப்பறவை


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை