தைத்திருநாள் விழா கவியரங்கம்
கவிஞர் திருமுருகன்
தைத்திருநாள் விழா கவியரங்கம்
இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07
சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்)
முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி
ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி மற்றும் மரபுடமைச்சங்கம் (தமிழவேள் நற்பணிமன்றம் பொறுப்பு)
கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ
தலைப்பு…………………………………………..கவிஞர்கள்
அறுவடைத்திருநாள்………………கவிஞர் திருமுருகன்
திருவள்ளுவர் திருநாள்………….கவிஞர் மாதங்கி
புத்தாண்டு முதல்நாள்…………….கவிஞர் மகேஷ்குமார்
பொங்கல் திருநாள்……………….கவிஞர் மலர்விழி இளங்கோவன்
தமிழர்திருநாள்………………………கவிஞர் சேவகன்
பொதுத்தலைப்பு: தைத்திருநாள்
தமிழருக்கும் பொங்கலுக்கும்
தனிப்பொருத்தம் இருக்கிறது-அது
ஏழாம் பொருத்தமாய்
இருந்து கசக்கவில்லை
அந்தத் தனிப்பொருத்தம்
இனிக்கும் பொருத்தமாய்
இருந்து இனிக்கிறது
இயல்பாய் இருக்கிறது
தமிழருக்கும் பொங்கலுக்கும்
உள்ள பொருத்தம்-அது
உள்ளப் பொருத்தம்
உள்ளப் பொருத்தம்
உண்மையில் இருக்குமானால்
எந்தப் பெருக்கமும்
வெள்ளம்போல் பெருக்கம்தான்-கரும்பு
வெல்லம்போல் இனிக்கும்தான்
பொங்கல்
எல்லார் வீட்டிலும் பொங்குவார்கள்
தமிழர் வீட்டிலும் பொங்குவார்கள்
என்ன வித்தியாசம்?
எல்லாரும் பொங்குதற்கும்
தமிழர் பொங்குதற்கும்
என்ன வித்தியாசம்?
எல்லார் வீட்டிலும்
உணவுக்காகப் பொங்குவார்கள்
தமிழர் வீட்டில்
உணவுக்காகவும் பொங்குவார்கள்
உணர்வுக்காகவும்
உரிமைக்காகவும் பொங்குவார்கள்
உணவைப்
பொங்கி வழங்குவதும்
உணர்வுகளால்
பொங்கிவழிவதும்தான்
தமிழர்வாழ்க்கை
இனிக்கின்ற பொங்கலைப்
பொங்கி வழங்கியவர்கள்
கரிக்கும்
கண்ணீர்ப்பொங்கலோடும்
காலம் கழிக்கிறார்கள்
தமிழருக்கும் பொங்கலுக்கும்
தனிப்பொருத்தம் இருக்கிறது-அது
இனிக்கும் பொருத்தமாய்
இருந்து இனிக்கிறது
இயற்கையிலிருந்து வாழ்க்கையை
இயற்கையாய்க் கற்றவர்கள்
தமிழர்கள்
இயற்கையோடு இயற்கையாய்
இயைந்து வாழ்ந்தவர்கள்
தமிழர்கள்
அறியாமை
இல்லாத வாழ்க்கை
தமிழர் வாழ்க்கை
அறிவுடமை
அகலாத வாழ்க்கை
தமிழர் வாழ்க்கை
அறியாமை இல்லாத
அறிவுடமை அகலாத
அறுவடை விழாவை
அறிமுகப் படுத்தினான் தமிழன்
ஆதாரம் உயிருக்கு
ஆகாரம் என்பதறிந்தான்
அனைத்திற்கும் ஆதாரம்
ஆதவன் என்பதுணர்ந்தான்
சூரியனை வணங்கும்
சூத்திரத்தைச் சொல்லுதற்கே
அறுவடைத் திருவிழாவை
அறிமுகப் படுத்தினான்
இன்னலில்தான் வாழ்க்கை
இனிக்கும் என்பதை
கன்னலைக் காட்டித்தான்
கற்பித்தான்
இனிக்கும் கரும்பு
கடித்ததும் இனிப்பதில்லை
கடிப்பதும் எளிமையில்லை
துணுக்குகள் இனிக்கலாம்
கணுக்கள் இனிக்குமா?
கடிப்பதைக் கூட
நுனியில் தொடங்கினால்
இனிப்பது தொடரும்
அடியிலே தொடங்கினால்
அடியோடு நின்றுவிடும்
அடுத்தது கசப்புவரும்
இன்னலில்தான் வாழ்க்கை
இனிக்கும் என்பதை
கன்னலைக் காட்டித்தான்
கற்பித்தான்
ஏலம்போல் மணக்கச்சொன்னான்
தமிழன்
ஏதிலியாய் ஆகிப்போனான்
ஏதிலியாய் திசைதோறும்
ஏகினாலும்
தேன்கதலி செங்கரும்பு
செந்நெல் மஞ்சள்
இஞ்சி ஏலம்
வெல்லம் முந்திரி
எல்லாம் கைக்குவரும்
இனியநாள் கண்டுசொன்னான் -அது
தைத்திருநாள் என்றுசொன்னான்
அத்தை வந்தால்
அத்தையுடன்
அத்தைமகள் வரலாம்
வராமலும் போகலாம்
தைமகள் வந்தால்
தையோடு செந்நெல்வரும்
கையோடு கன்னல்வரும்
இனிக்கும் வாழைவரும்
ஏலம்வரும் வெல்லம்வரும்
இஞ்சியும் மஞ்சளும் சேர்ந்துவரும்
எங்கு வரும்?
எங்கும் வரும்.
சிங்கைக்கும் வரும்
சிராங்கூன் சாலைக்கும் வரும்
தைத்திங்கள் எங்கள்
திருநாள் என்றான்
அறுவடைத் திருநாள் (திருமுருகனை அழைத்தல்)
ஆதிவிழா தமிழனுக்கு
அறுவடைத் திருவிழாதான்
பாதியில்தான் வந்தன
பலப்பல விழாக்கள்
ஆமாம் எல்லாம்
பளபளக்கும் விழாக்கள்
பயன்தரும் விழாக்களில்லை
பகுத்தறிவு விழாக்களில்லை
பணமெல்லாம் சாம்பலாகும்
பக்குவமில்லா விழாக்கள்
அறுவடை விழாதான்
அறிவுவிழா
ஆதிவிழா
முதல்விழா-அனைத்திற்கும்
முதன்மைவிழா
அறுவடை நடந்தால்தான்
அடுப்புப்பொங்கும்
மனிதனின்
அகம்பொங்கும்
முகம்பொங்கும்
அனைத்தும் பொங்கும்
அனைத்தும் பொங்க
அடைப்படை விழாதான்
அறுவடைவிழா
நான்சொன்னால் நம்பமாட்டீர்கள்
முருகன்சொன்னால் நம்புவீர்கள்
தமிழர்களுக்கு ஒரு
நல்லபழக்கமுண்டு
எதையும்
மனிதர்கள் சொன்னால்
நம்பமாட்டார்கள்–மனிதப்
புனிதனே சொன்னாலும்
நம்பமாட்டார்கள்
முருகன் சொன்னால்
நம்புவார்கள்
தம்பி முருகனை அழைக்கிறேன்
தம்பிதான் முருகன் திருமுருகன்
திருமுருகனை அழைக்கிறேன்…
வா முருகா வா
வா முருகா வா
ஆதிவிழா அறுவடைவிழா
சொல் முருகா சொல்
திருமுருகா சொல்
( அறுவடைத்திருநாள் பற்றி திருமுருகன் பாடுதல்)
///////////////////////////////////////////////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
/////////////////////////////////////////////////////////
வியர்வைச்சொந்தங்களே
என்று
விளித்தார்
வியர்வைத்தாவரங்கள் நூல்வெளியிட்ட
நான் வியந்தேன்
வியர்வையின் விழாதான்
அறுவடை விழாவென்று
விரிவாகச்சொன்னார்-கருத்துச்
செறிவாகச்சொன்னார்
அழகாகச்சொன்னார்
அழகன் முருகன் திருமுருகன்
அவமானங்களை
அறுவடை செய்துபார்
அனுபவம் கிடைக்குமென்றார்
இப்படி
நெருப்பு வார்த்தைகளால்
நின்றார் திருமுருகன்
அதனால்தான்
கருப்புத்தான் எனக்குப்பிடித்த
கலரு
அது
சூப்பர் ஸ்டார் கருப்பு
என்பதால் அல்ல
அர்த்தமற்ற எதையும்
சட்டை செய்யாத
தந்தைபெரியாரின்
சட்டை
கருப்பு என்பதால்–நான்
கட்டியமனைவியும்
கருப்பு என்பதால்
கண்முன் இருக்கும்
கவிஞர் யுகபாரதியும்
கருப்பு என்பதால்
மழைபொழியும் மேகமெல்லாம்
கருத்திருக்கும்
கருத்திருக்கும் திருமுருகன் கவிதையில்
கருத்தான கருத்திருக்கும் என்பதால்
கருப்புத்தான் எனக்குப்பிடித்த
கலரு
தம்பி திருமுருகன்
ஆறுபடைக்குச்சொந்தக்காரனில்லை
அறுவடைக்குச்சொந்தக்காரன் -வயிற்றுக்குச்
சோறுபடைக்கும் சூத்திரக்காரன்
அறுத்தால் குவித்தால்
கதிர்கனக்கும்
கருத்தால் நயத்தால்
கற்பனையால்
கனக்கும் கவிதைதந்த
உனக்கும்
உன் பேனாவுக்கும்
நன்றி
(அடுத்தவாரம் தொடரும்)
- கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!
- நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்
- தாஜ் கவிதைகள்
- சிறகொடிந்த பறவை
- நீர்வலை – (12)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)
- கிளிஜோசியக்காரரின் தேடல்
- பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? –
- ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு
- கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……
- கவிதைகள்
- கவிதை மரம்
- பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- திருட்டும் தீர்ப்பும்
- காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்
- பூக்கள் என் கவிதைகள்
- மடியில் நெருப்பு – 26
- ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது
- சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’
- மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
- முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)
- சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்
- விளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- இன்னும் சில ஆளுமைகள்
- எச்சரிக்கை
- என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
- இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”
- இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி
- எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்
- கடித இலக்கியம் – 46
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !
- An Invitation
- நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா
- தைத்திருநாள் விழா கவியரங்கம்