காதல் நாற்பது (1) – உன்னை நேசிப்பது எவ்விதம் ?

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



எவ்விதம் நேசிப்பது உன்னை ?
எண்ண வேண்டும் நான்
எத்தனை வழிகள் உள்ளன வென்று !
ஆழமானது என் காதல் !
அகல்வது ! நீள்வது என் காதல் !
உணர்ச்சி கண்மறையும் போது,
உயிரின முடிவாய்,
ஒப்பிலா நளினத்தில்
உன்னை எட்டிவிடும் என் ஆத்மா.
பரிதிச் சுடர், மெழுகுவர்த்தி
ஒளிபோல்
அவசியத் தேவை
அனுதினம் காதல் எனக்கு !
மனத் தடங்கலின்றி
காதலிக்கிறேன்,
மானிட உரிமைத் தேடலாய் !
தூய மனதுடன் நேசிக்கிறேன்,
என் புகழின் திருப்பமாய் !
முந்தைத் துக்கங்க ளிடையே
குழந்தையின்
அழுத்த நம்பிக்கை யோடு
பித்தானேன் உன்மேல் !
இழந்த புனிதரிடம்
எனக்கிருந்த காதல் நழுவி
நாடுகிறது உன்னை !
பெருமூச்சு காட்டுது
என் காதலை !
முறுவல் காட்டி விடும்
என் காதலை !
கண்ணீரும் காட்டுது
என் காதலை !
வாழ்வு பூராவும் நேசிப்பேன்.
முடிவிலே
கடவுளின் விதி அதுவாயின்,
அழுத்தமாய் இருக்கும்
காதல் மட்டும்,
உன்மேல்
சாதலுக்குப் பிறகும் !

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan December 19, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா