கவிதைகள்
செந்தில்குமாரன்
உள்ளூரத்தேடிய உணர்வுகள்
இப்போதெல்லாம்
உள்ளிருக்கும் உயிர்வரை
உற்று –
இயல்பு சிறிதும் பிறழாமலே
உற்று உற்று
நோக்கிடினும்
உண்மைகள்
புரிவதில்லை
என் மனவெளியின்
ஒற்றையடிப்பாதையில்
ஓராயிரம்
ஆண்டுகளாய் பயணித்தும் – மன
வெளிச்சம் காண இயலவில்லை
அருந்துகிற நீர்
நிச்சலனத்தினூடேயும
நித்தமும்
நித்திரைத் தருணங்களிலூடேயினும்
என்னுடம்பில் – ஒட்டுவதில்லை
என் சுவாசக்காற்று
என்னுள் – சுதந்திரமாக
சுற்றுத்திரிந்திடினும்
உயிரை உண்மையோடு
உரசுவதில்லை
கண்ணிமை கூட
அதன் உள்ளூரத் –
தூங்காதென் கண்களை
தொட்டுத்தழுவுவதில்லை
ஆன்மாவின் ஆதிக்கமற்ற
அந்தரங்கங்களை
என் சிந்தையெங்கிலும்
சேதாரத்தோடு சிந்திய –
மிச்சங்களாகக்கூட
சேமிக்க முடியவில்லை
எனக்குள்ளே – எங்கெங்கு
நோக்கினும்
எட்டுத்திசை எழுகடலென்று
உள்ளூரத்தொலைந்து
உன்மத்தம் பிறழ்ந்து
திரிந்திடினும்
நான் யாரென்ற
நமத்துப்போன நிந்தனைகள்
எனக்கே புரிவதில்லை
மரணிக்கத்தெரிந்தவன்
நீர் அருந்தும
நீர் இருந்தும் – நீந்தமுடியா
மீன் அவனே
.
தேன் எனவிருந்தும்
தேனிருந்தும்
தேற்றவியலா
வண்ணத்துபூச்சியானவன் அவனே
.
சிறகு இருந்தும்
சிறகென உருவமிருந்தும்
பறக்கவியலா சிறு
பறவை அவனே
.
வெளிதனில் தவழ்ந்தும்
ஒளியினையுண்டும்
காணவியலாக் காட்சி்
அவன்
.
காற்றில் பிறந்தும்
காற்றிருந்தும்
சுவாசம் தொலைத்த
அபலை அவனே
.
நினைவாய் இருந்தும்
நினவினைச்சுகித்தும்
நிந்திக்கத்தெரியாதவன்
அவன்
.
உணர விருந்தும்
உணர்விருந்தும்
உண்மை தொலைத்த
பேதையவனே
.
இறையே
நீ அவனுக்கு
ஒளி யளித்தாய்
அவனோ
அதை இருள் –
வெளியினில் தொலைத்தான்
அவனும்
இருளெனத் தொலைந்தான்
.
நீ
அவனுக்குத்தாய் –
உயிரெனச் சுகித்தாய்
அவனோ
மரணத்தை
துணைக்கழைத்திருந்தான்
அதனையே
மணந்திருந்தான்
அதனுள்ளே
என்றென்றும் உறைந்தான்
தீயிலிட்ட மனது
யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன் !
தீ வைத்து விடுங்களேன் !!
என் மனது
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூற்றாண்டு – என்னைக்
கொன்று கொண்டே இருக்கிறது ! – பசியாய்
தின்று கொண்டே இருக்கிறது !! –
என்னில் உருவகித்து –
என்னையே
முடமாக்கியது
எனக்காக உயிர்த்து
என்னையே நீர்த்தது !
.
அதற்கு நீரூற்றி வளர்த்தவன் நான்
விஷ வித்துக்களையே அளித்தது அது!
தீபமேற்றி வளர்த்தவன் நான்
என் கைகளை கருக்கி விட்டது அது!
காறறு் வீசியவன் நான் – என்
சுவாசத்தையே சுருக்கியது அது!
அதனைக் கண்டறிந்தவன் நான்
என்னையே தொலைத்து விட்டது அது!
பறக்கக் கற்றுத்தந்தவன் நான்
என் சிறகுகளையே வெட்டிவிட்டதே!
விழி தந்தவன் நான் – என் வாழ்வதனின்
ஒளியணைத்து விட்டது அது!
.
எனவே
என்
அடையாளங்களின் மிச்சங்களை
எந்தன் வாழ்வின் எச்சங்களை
அதன் உச்சங்களை – எவ்வித
அச்சங்களின்றி
நிரட
யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன்!
செந்தில்குமாரன்
ஹைடல்பர்க் – ஜெர்மனி
- இருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்!
- ஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி
- மடியில் நெருப்பு – 12
- தாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்
- மழைபோல……
- பேசும் செய்தி – 7
- உள்அலைகளும் புனித குரானும்
- இந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்
- வறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை
- நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?
- ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்
- சுப்புணியின் நாடக அரங்கேற்றம்
- அன்பு ! அறிவு ! அழகு !
- வீணைமகளே என்னோடு பாடவா!
- கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]
- ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம்
- மெளனமான உணர்த்துதல்கள்
- ஒன்றும் ஒன்றும் ஒன்று
- மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்
- இலை போட்டாச்சு – 2 : பாசிப்பருப்புப் பாயசம்
- பதஞ்சலியின் சூத்திரங்கள்-(4)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 11
- கீதாஞ்சலி (99) – மௌனமான என் புல்லாங்குழல்!
- சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்
- பெரியபுராணம் – 112 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கவிதைகள்
- கவிஞனின் கடப்பாடு
- கடித இலக்கியம் – 32
- நாள் முழுதும் இலக்கியம் – நவம்பர் 25 சனிக்கிழமை
- திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா…………?
- தமிழால் முடியும்!