தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

தாஜ்



விடாது காதல்.
——————–

பக்கங்களாகப்
புரண்டுக் கொண்டிருக்கிறேன்.
சூழ்ந்து பரந்த சமூத்திரம்
நித்தம் அலைகழிக்கிறது
தழுவி மேவியே தாவ
முழுகாத தினமில்லை.
மனப் புணர்ச்சி நொடியும்
மங்காததோர் கிளர்ச்சி.
வாசிக்கவே கரையேறி
கவிழ்ந்ததுவே காட்சி.

***

பாவங்கள்.
————–

பார்க்கின்றோம்
நேற்றைக்கு
இன்னொரு நிலத்தில்
சிம்மாசனமிட்ட
பெருத்த யானைகள் எல்லாம்
இன்றைக்கு சாலைகளில்
பிச்சையெடுக்கப்
பழகிவிட்டது.
இதில்….
ஆசீர்வாதம் வேறு.

****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

தாஜ்



செயல்.

எழு
நில்
நட
ஓடு
வேகம் பிடி
உயர்
பற…..
முடியுமென்றாவது நினை
முயற்சி செய்
தோல்வியும் நிகழலாம்
பரவாயில்லை
போராடு
கட்டாயம்
முடவனிடமிருந்து
மாறுபடு.


வித்தியாசப்படு.

எல்லோரும்
கத்திரிக்காய் வாங்கினால்
நீ
வெண்டைகாயாவது வாங்கு
அவர்கள் இல்லை நீ
எவருமில்லை எவரும்
இயற்கையை மீறுவானேன்
சுவை கிடக்கட்டும்
ஆரம்பி.


மேல் நிலை?
மேலே பார்க்கிறாயா? பார்
உற்றுவேறா? சரி
கவனம் செய்.
உயரத்தில்
மேகமெல்லாம் தெரிகிறதா?
கலர் கலராய் நெளிகிறதா?
பகலில் சூரியனும்
இரவில் சந்திர
நட்சத்திரங்களும்
மாறி மாறி
பரவசமூட்டியதா!
என்ன……..
பார்த்து விட்டோமென
பூரித்துவிட்டாயா?
பொறு!
தாண்டி??


satajdeen@gmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தாஜ்



தாலி

அவளைப் பார்த்ததாகச் சொல்லி
அடையாளங்களும் சொன்னான்
ஏழ்மை கோலமெல்லாம்….
சொன்னவரை சரி
கழுத்தில் தாலியாம்!
நடப்பின் யுகப் பெருமை
புரியவில்லை அவனுக்கு
அது அவளாக இருக்காது.


பின்னே விழும் பிம்பங்கள்

உயரே தூக்கி
மாட்டப்பட்டிருக்கிறது
முறுக்கேறிய
ஆணின் பிம்பம்
இன்னும் மேலே
ஏற்றி வைத்துப் பார்க்க
நவீன கலவைகளோடு
பெண்ணை தீட்டுகிறேன்
புத்துயிர்ப்புடன் அவள் எழ!

எத்தனை அற்புதங்களைக்
கூட்டினாலும் அவளின்
மரபார்ந்த மார்பைப்
புடைக்க வைக்கத்தான் வேண்டியிருக்கிறது.
கார்க் கூந்தலைத் தவிர்த்தாலும்
கொஞ்சமேனும் நீள முடி காட்டி
புருவத்தை சிரைத்து நீட்டி
கண்களுக்குள் காந்தத்தை ஏற்றனும்!

ஆணின் மீசைப் பிரதேசம்
இங்கே பொட்டலாக
கொவ்வை உதடுகளுக்கு
வண்ணப் பூச்சைக் கூட்டனும்!
இன்னும் கூடுதலாய் அவள்
பற்களையும் பளிச்சிட வைத்தால்
மாசுப்படுமென விட்டு
குடத்தைத் தட்டி ஒடுக்கி அவள்
இடுப்பின் வடிவில் கூடுதல்
யோசனை கொள்ளும் நேரம்
புருஷர்களால் ஸ்தலம் ஸ்தம்பிக்க
உயிர் கொண்டது சித்திரம்
முறுக்கு மீசையோடு
பளீச்சென தெரிந்தனப் பற்கள்
ஆதி சிரிப்பின்
ஆயுதச் சுழிப்போடு.


satajdeen@gmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

தாஜ்



உயிர்மெய்

பசுமையின் அந்தி
இலையுதிர் கோலம்.
சிதிலம் காண்
யௌவனத்தின் கூறு.
நொருங்கிக் கிடக்கும்
கரிக்கட்டைகளும்
நின்ற மரத்தின் சாட்சி.
இருள் வழியில் இடறும்
ஏதோ அது நான்.

அகமொழி மறந்த
வண்ணத்துப் பூச்சி
இடம்விட்ட மலர்களது
பக்கங்களில் வாசித்து
காற்று சுழித்த
திசையெங்கும் மிதக்க
வட்டமடித்ததெல்லாம்
ஏகமாய் உயிர்த்திருந்தபோது.

உள்முக
இரைச்சலின்
பிடிப்படும் ராகமின்று
விரையத் திரும்பும்
அந்திப் பறவைகளின் ஆனந்தம்.


பின் குறிப்பு

வெந்து தணிந்து
விண்ட பகுதிகளின்
கரிக்கட்டை கொண்டு
அடியும் நுனியுமற்றே
கிறுக்கும் கோடுகள்
பின்னலிட
புது உருவம் காட்டும்.
பிண்டம் கருகிய
முடை நற்றமும் உன்
சுவாசத்தில் அடர்ந்து
ரோமக்கால்களையும் மீட்டும்.
முடிச்சை அவிழ்க்கவும்
நீட்சியை அளக்கவும்
சோபலென்றால்
கூடுப்புழுக்கள் யென
இன்னோரு கிறுக்களில்
பிண்டம் கருகுவதைத் தவிர
வேறு என்ன செய்ய.

******

– தாஜ்.
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்.

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

தாஜ்


மிகு.

உச்சி சாயும் காலம்
வெகு தூரம் கடந்து
வந்து விட்டது உறைத்தது.

சந்தடிகள் கூடிய
சாலைகளை விட்டு
மாற்றுப் பாதைகளில் நடந்து
ஒத்ததையடி வழியாக
விஸ்தீரணப் பொட்டலில்
நடந்து கொண்டிருந்த
தடமும் மறைய
கண் பார்க்கும்
திசையெல்லாம்
பெருவெளி
ராட்ஷசியின் கொண்டாட்டம்.
எதிர்ப்பட்ட ஒருவரிடம்
தங்கும் ஸ்தலமேதும்
உண்டோ இங்கெனக் கேட்டேன்.

வறண்டு தூரத் தெரிந்த
குன்றுகளைக் காட்டி
சிலர் அங்கே தனித்
தனியே வசிக்கின்றார்கள்.
முகங்களைத் தவிர
வேறெதுவும்
அவர்களுக்கில்லை.
திரும்பி நின்ற நிலையில்
அவர்களின் முடியாப் பேச்சை
பேசிக் கொண்டே
இருக்கின்றார்கள் என்றார்.

நீங்கள் யார்யென
வினவியபோது,
அடர்ந்த தாடியை நீவியப்படி
எனக்கு முகமும் இல்லாது
போய் விட்டதேயென வருந்தி
அதே குன்றிலிருந்துதான்
இறங்கி வருகிறேன்.
என் மக்களின்
வசிப்பிடங்களைத் தேடி
இரைச்சல் மிகுந்த அதன்
வழித் தடங்களை
நாடிப் போகிறேன்.
பார்த்துப் போய் வாருங்கள்
விரைவாக கடப்பது நல்லது
இருள் கவிழத்
தோடங்கி விடும் என்றார்.


வேஷம்.

என்னைக்
கழட்டி வைத்தேன்.
அரிதாரம் கொள்ள முழு
வேஷத்திற்குப் பின்
மாறிவிட்டேன்.
மேடை
பிரவேஷத்தில்
கரவோலி.
கண்கள் பூக்க
மலர்ந்த மக்கள்
மீண்டும் மீண்டும்
எதிர்பார்ப்பில்.
எல்லாம் கலைந்து
என்னில்
என்னைக்காண
சாதாரணனானேன்.


– தாஜ்.
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

தாஜ்



நடப்பு
———

இரவும் பகலும் உராசும்
தேய்மானத்தின் கதையைத்தான்
பிடித்தமான நடையில்
மேலே நடத்துகின்றோம்.

காற்றின் சேட்டைகள்
கவனத்தை மீறத்தான் செய்கிறது.
அந்தரத்திலிருந்து விழுந்தாலும்
எழுந்து கம்பிமீதே
நடக்கின்றோம்.

உயர்த்திக் கும்பிட்டு
கர்ணமிடுபவர்களுக்கும்
சேட்டைகளோடான
கோமாளிகளுக்கும்தான்
மண்ணில் கூடுதல் வரவேற்பு.

நிகழ்வில்
கீழே இறங்க மறுக்கிற
நடைக்கு ஞானமில்லை.
நடை நடப்பதற்காக மட்டுமல்ல
கடப்பதற்காகவும்தான்.

( கணையாழி – ஜனவரி 2000 )

*****

வெளி
———

கையளவு தண்ணீர் மொண்டு
தாகம் தணிக்கவும் தவிப்பு.
பெருவெள்ளச் சுழிப்பில்
மனித மிருகங்களுடன்
மூர்த்திகளும் கீர்த்திகளும்
கரை புரள்கிறது.

மண்ணில் நித்தம்
கேள்விகளால்
பஞ்ச பூதங்களையும்
ஆய்ந்தாகிவிட்டது.
ஐந்து நிலங்களை அலசி
இனி ஆவப்போவதுமில்லை.

தகிப்பின் உஷ்ணம்
நெருப்பாய் பற்றி மேவும்
முடை நாற்றக் காற்றில்
சுவாசம் திணருகிறது.
வானின் வெண்மையிலும்
புகை மூட்ட கரிக்கோடு.
தனி உதயமென்றொன்று
சுத்தமாய்
எதுவுமில்லை நமக்கு.

( வேர்கள் – ஏப்ரல் 1999 )

*****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

தாஜ்



பிழை

மோசமான கவிதையிது
பிரசுரத்திற்கு உதவாது.
அடித்தல் திருத்தலாய்
கறுப்பு மை மொழுகலாய்
எழுதும்போதே தெரிகிறது
எல்லாம் காலத்தின் விரயம்.
கற்றுத் தந்த காலமே
காற்றின் சுழிப்பில்
அபகரித்து விடலாம்.
நானேகூட செய்யலாம்தான்
கிழித்து வீசிவிட நாழியாகாது
அத்தனைக்கு கேவலாமாயிது.
படிக்கக் கிடைத்தவர்கள்தான்
சொல்லனும்
எனக்கிது வாழ்க்கை
பிறருக்கது நான்.

(கணையாழி, ஜூலை – 1996)


கவிதை தோழிக்கு இன்றைப்பற்றியும்
தும்பி விட்டுச் சென்ற எச்சத்தைப் பற்றியும்.

கோடை தணிகிறது
முகம் ஜில்லிட
காற்று எழுதிச் சென்ற
செய்தியை வாசிக்கும் முன்
முத்து முத்தாய் தொடர்ந்தது
மழையின் விளக்கம்.

காலடியில் மேவும் ஈரம்
நடையை மாற்றிவிட்டது.
தெளிந்த வானமும்
உறுத்தா வெளியுமாய்
வேர்வையின்
நாற்றமுமில்லை.

செடி கொடி மரங்கள்
பூரணத்தை நோக்க
செழிப்பின் வண்ணமயம்.
என் வீட்டுத் தோட்டத்திலும்
குதூகலத்தின் கூறுகள்.
தவழ்ந்து வந்த சுகந்தத்தில்
மொட்டவிழப் பூத்து நின்றேன்.
வட்டமிட்ட தும்பி ஒன்று
இதழோரம் அமர்ந்து
மகரந்தத்தின் எச்சத்தை
விட்டுச் சென்றது.


– தாஜ்
satajdeen@gmail.com
www.tamailpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

தாஜ்


கனவில் வந்த அப்பா!
————————–

அப்பாவிடம் பயம் அதிகம்
உண்மை மாதிரி பொய்யும்
பொய் மாதிரி உண்மையும்
பேச்சு வழக்கில் பழக்கமாச்சு.
சத்தியத்தைப் போதித்தவருக்கு
பிசிரில்லாக் குரல்
என்னைவிட நேர்த்தி.

நலம் விசாரித்தப்படியே வந்தவர்
அம்மாவின் அறையில் தொங்கிய
தன் புகைப் படத்தில் ஆவலானார்.
ஹிட்லர் மீசை உண்டென்றும்,
அடர்ந்த தாடியோடு
வெள்ளையாய் மிளிர்ந்த
அந்த சாந்த சொரூபம்தான்
இன்றைக்கில்லை யென்க
அதைதான் கொண்டுச்
சென்றுவிட்டதாக
நினைவு கூர்ந்தார்.

நீண்ட நிசப்தத்திலிருந்து விலகி
காத்து தந்த
தேனடை பற்றி நகர்ந்தார்.
பந்துக்களின் நா விளையாட்டுக்கு
வழிவிட்டு நின்றதேடு
வியந்த வியப்பையும் கோடிட்டிட
தீ மிதிக்கு முந்தும் வழக்கத்தை
எப்பவும் நான்
விதியாக்கிக்கொண்டதில் தழதழத்து,
புத்தகங்களுடன் விரைய
மலையேறிப் போவாயே என்றார்.
காலின் விபத்தைக் காட்டாது
கழிப்பறையே
போதுமென்றானதைச் சொல்லவும்
சிகரங்களில் என்னை
தேடியலைந்ததில்
ஆசுவாசமுற்றவராக
மீண்டும் நலம் கேட்டார்.

உங்களின் சொல்லே
கொடையாய் நின்று
காக்குமென்ற நாழியில்
ஈனக்குரலில் நான்
செத்துப்போனவன் என்றார்.

நெஞ்சைவிட்டு அகலா தந்தையே
உங்கள் நினைவு பேணப்படுகிறது
பசுமையின் விஸ்தீரணம்
காலாதிக் காலமும் யெட்ட
என் குழந்தைகளின் ஈரத்தில்
வித்திட்டுக் காக்கனுமென
பாதங்களில் கவிழவும்
கண்கள் சிவக்க அரற்றினார்
பாவி மகனே
இப்படியொரு தூக்கமா
சாவதற்கு முன்பே
நான் செத்துவிட்டேனே.
—————————–
* வேர்கள். / ஜனவரி – 1999

கழிப்பிடக் காட்சிகள்.
————————

நடசத்திர திரைப்படம்
தொடக்கத்திலிருந்தே
உஷ்ண உபாதை.
துவக்குக் குறியில் சிக்க
கிழிப்பட்ட ஆடையோடு
படபடத்தது அழகு.
எதிர்ப்பட்ட எல்லோரையும்
புரட்டியெடுத்தான் நாயகன்.
பயந்தவர்கள் மிரள
கழிப்பிடம் தேடி ஓடினேன்.

அடிவைக்கும் இடமெல்லாம்
காம உறுப்புகளின்
வடிச்சுவடுகள்
மூச்சு முட்டும் நெடி
பாசி படியச் செல்லரித்து
பழுதாகிக் கிடக்கிறது
நான்குபுறச் சுவர்களும்.

ஆசுவாசமாகித் திரும்ப
காட்சி கனக்க ஓடிவிட்டது.
அவஸ்தை இல்லை
கொடுத்த காசு
கொஞ்சத்திற்குக் கொஞ்சம்
உபயோகமாகிடிட்டது.
————————-
* கவிக்கோ. / ஜனவரி – 2000

– தாஜ்..
satajdeen@gmail
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

தாஜ்


ரண களம்
————

எம் மக்களுக்கு
நவீனச் சித்திரங்கள்
புரிவதே இல்லை.
தீர அறிந்தவர்கள்
எப்பவும் மௌனம்.
இப்பவும் அதீதிகளே
சபையலங்காரம்.
மனிதர்களை பூதங்களாகவும்
பூதங்களை மனிதர்களாகவும்
உரக்கக் கணிக்கின்றார்கள்.
இறுகலான காட்சிகளின்
அமைப்பியல் அப்படி.

ஒடுக்கப்பட்ட குரல்களின்
கொந்தளிப்பான வடிவம் அது.
துண்டாடப்பட்ட ஜீவன்களால்
நிற்ம் மாறிய பூமி
ஊரின் பரப்பை விழுங்கும்
கல்லறைகள்
வானை முட்டும்
கந்தக மேக அலை
தீய்க்கப்பட்ட பசுமை
வீழ்த்தப்பட்ட ஆலம்
துவசமான பூங்கொடிகள்
அங்கே ஓடித்திரிந்து
வாழ்விடம் தேடும்
ஊனக்கிளிகளின்
படபடப்புமாய்
கோரப்பிடியில் இறுகுமது
சகோதரக் குடாமண்.
*****

அரங்கேற்ற நேரம்
———————-

பார்வைக்குத்
திறக்கப்பட்டது
என் சித்திரக் கூடம்.

தலைப்பு:
நிர்வாணம்.

விரிந்தே கிடந்தது
குறிப்பேடு.
கண்டுகொண்டவர்களின்
காலடிச் சுவடுகளும்
பதிவுவில்லை.

காலம் தாழ்கிறது.
காற்றின் பெரு வெளிக்கே
அள்ளி தரலாம்
நிச்சயம்
பேரண்டம் காணும்.
****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

தாஜ்


* காலத்தச்சனின் கைவண்ணம்.

ஆகிவிட்டது
இப்பொழுது மலையேறும் படலம்
நிசப்த வெளியில்
திட்டுத் திட்டாய்
தரையிறங்க மிரண்ட
புதர் மனிதர்கள்

தோழமை பாவிக்க அவர்கள்
என் அருகாமை
விலாசங்களையே
எதிரொலிப்பாய்
சொன்னார்கள்

புழுதிப் பாதைகளின் வழியே
கற்கப் போனது தொட்டு
கறுத்த தார் ரோட்டில்
நடந்து வளர்ந்து
மாற்றுப் பாதைகள் பிடித்து
வாகனங்களில் விரைந்து
நீலக்கடலையும் தாண்ட
நினைத்ததையும் கூட

சுற்றுலா தலமெனப் போற்றும்
தற்கொலை முனை காண
எழுந்து நான் ஆயத்தமாக
காலடி மண்ணைத்தாண்டி
விசேஷமாய் அங்கே
எதுவுமில்லை என்றார்கள்
பார்வையில் குகையொன்று
வசீகரிக்கவே முண்டி
தலை நுழைத்தவனாக
நீண்டு ஒடுங்கிப்போனேன்.

***

* காலப்பரிசு.

மண்டைக் குத்தலில்
மூச்சுவிட பரிதவித்த நாளில்
கோப்புகளின்
சிதைவை அறிந்தேன்
ஆக்கங்கள் பல
குலைந்து போக
செல்லரித்து
படிமங்களின் அடுக்கும்
காற்றின் திசைக்கு நழுவிவிட
வசீகரப் பக்கங்களும்
வானத்தைத் துருவிய
கேள்விகளும் தொலைந்து
பத்திரப் படுத்திய
கவிதை நாட்களையும் காணோம்.

***

* காலமும் காலமும்.

(அமரர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு
விழாவையொட்டி எழுதிய நினைவு கவிதை)

தாரைத் தப்பட்டைகளின்
எதிரொலி வெள்ளத்தில்
கரங்கள் குவிய சிரங்கள்
தாழும் ஆராதனை கொண்டு
வலம் வருமாம்
கோலவெளியில்
வித்தகர்களின் தேரழகு

வியக்கும் விரல்களின்
கண்களது நசிவில்
பூத்த மாதிரட்சி
திரு பார்வைகள் தீண்டா
காலத்தில் விண்டு
தடுப்பிற்குள் பொழிவழிய
சுற்று அடி
சந்தைக் கடைகளில்
பரபரப்பு அடையும்
கலைகள் வளர்த்த
வம்சாவளிகள்

மண்ணில் நிறம் தேடி
பகலில் சூரியனையும்
இரவில் சந்திரனையும்
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களையும்
காண வியந்து
இடைமலை
வண்ணங்களில்
பாதம் பாவாப் பாய்ச்சலாய்
நம் நடப்பு
காலத்தைக் கடக்கிறது.

***
satajdeen@gmail
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

தாஜ் கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

தாஜ்


இறந்த காலம்
**
தன் பேரழிவின்
உயிர்வதை யெண்ணி
அடிமரம் அழும்.
நின்று படர்ந்து
நிழல் காத்த காலத்தினை
குரலற்றத் துடிப்பில்
நோந்து கொள்ளும்.
சாய்த்துப் பிளந்த
கோரக் கரங்களின்
ஆராஜகத்தை
மங்கும் ஜீவன் வியக்கும்.
காற்றாய் காலம் தழுவியாற்ற
காய்ந்து வரும் காயங்களில்
பூக்கும் புழுக்கள்
அரித்தெடுக்கும்
நமச்சலையும் சகித்து
ஓர் தூறலின் ஈரத்தில்
தன் வேரடித் துளிர்களை
வெக்களித்த உதயத்தில் காமிக்கும்.

****

வெள்ளை அறிக்கை.
**
இயற்கையின் வீச்சு
மழுங்கி விட்டது.
பேரிடி மின்னலுக்குப் பிறகும்
கொஞ்சம் மட்டும்.
பருவ மழை பொய்த்து விட்டது.

தூறலின் சாரலில்
புலண்கள் விழித்து
ஆனந்தம் பாடியதும்
மலர்களின் மகந்தத்தில்
நீர் பட்டு
சிலிர்க்கக் கண்டதும்
கால்களை மழைநீரில்
நனைய விட்டு
விளையாடியதும்
கெட்டிமேளத்தோடு கைகோர்த்த
அடைமழை காலத்தில்
தொப்பமாய் நனைந்து கிடந்ததும்
ஞாபகத்தில் இனிக்கிறது.

****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்