தாஜ் கவிதைகள்
தாஜ்

நடப்பு
———
இரவும் பகலும் உராசும்
தேய்மானத்தின் கதையைத்தான்
பிடித்தமான நடையில்
மேலே நடத்துகின்றோம்.
காற்றின் சேட்டைகள்
கவனத்தை மீறத்தான் செய்கிறது.
அந்தரத்திலிருந்து விழுந்தாலும்
எழுந்து கம்பிமீதே
நடக்கின்றோம்.
உயர்த்திக் கும்பிட்டு
கர்ணமிடுபவர்களுக்கும்
சேட்டைகளோடான
கோமாளிகளுக்கும்தான்
மண்ணில் கூடுதல் வரவேற்பு.
நிகழ்வில்
கீழே இறங்க மறுக்கிற
நடைக்கு ஞானமில்லை.
நடை நடப்பதற்காக மட்டுமல்ல
கடப்பதற்காகவும்தான்.
( கணையாழி – ஜனவரி 2000 )
*****
வெளி
———
கையளவு தண்ணீர் மொண்டு
தாகம் தணிக்கவும் தவிப்பு.
பெருவெள்ளச் சுழிப்பில்
மனித மிருகங்களுடன்
மூர்த்திகளும் கீர்த்திகளும்
கரை புரள்கிறது.
மண்ணில் நித்தம்
கேள்விகளால்
பஞ்ச பூதங்களையும்
ஆய்ந்தாகிவிட்டது.
ஐந்து நிலங்களை அலசி
இனி ஆவப்போவதுமில்லை.
தகிப்பின் உஷ்ணம்
நெருப்பாய் பற்றி மேவும்
முடை நாற்றக் காற்றில்
சுவாசம் திணருகிறது.
வானின் வெண்மையிலும்
புகை மூட்ட கரிக்கோடு.
தனி உதயமென்றொன்று
சுத்தமாய்
எதுவுமில்லை நமக்கு.
( வேர்கள் – ஏப்ரல் 1999 )
*****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
தாஜ்
- ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான் -ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி
- கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – முதல் ஓசை- கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
- எதிர்காலம் என்று ஒன்று
- சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்
- அருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே?!
- “இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை
- அணி நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வெளிவருகிறது
- மடியில் நெருப்பு – 10
- இஸ்லாமிய நவீனத்துவமும் திருக்குர்ஆனும்
- பெரியபுராணம் – 110 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2
- National Folklore Support Centre – INTERNET BROADCASTING SCHEDULE
- இரவில் கனவில் வானவில் – 9 ,10
- தாஜ் கவிதைகள்
- இருள் வெளிச்சம்
- காதல், மோதல், நோதல் !
- குளிர் விட்டுப் போச்சு !
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு
- அலெக்ஸாந்தர் காவியம் – சிறு குறிப்புகள்
- பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!
- குலாமின் உள்மனத்தூண்டல்
- கிராமப்புற மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்!
- மெல்பேனில் குதிரை பந்தயம்
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 9
- சிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்…
- கீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி!
- எதார்த்த ஞானம்தான் இன்றைய தேவை
- கடித இலக்கியம் – 30
- கனவுகள், காட்டாறுகள்..!-‘சதாரா’ மாலதியின் கவிதைகள்
- பதஞ்சலி சூத்திரங்கள்….(2)
- மழைவெயில்
- அன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி
- ரவிக்குமாரின் எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு
- வன்முறை