என் கவிதை

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

கே ஆர் மணி


வாழ்க்கைக்கும்
இருத்தலுக்கும்
கவிதைக்குமான –
போரட்டத்தில்
கவிதை தோற்கும்
என் குற்ற உணர்வு
மேலொழும்போதெல்லாம்
நான் அந்தக் கவிதையை
படிப்பதுண்டு.

கடந்த முப்பது வருடமாய்
அதனுடன் என் பழக்கம்.
அதன் வரிகள்
மாறிக்கொண்டேயிருக்கிறது.
பொருட்பற்றி சொல்லவே
வேண்டியதில்லை.

அந்தக்கவிதை
ஒடிக்கொண்டேயிருக்கிறது
என்று சொன்னாலும்
தப்பில்லை.

அந்தக் கவிதையை நான்
அடிக்கடி படிக்கிறேன்.
உங்களில் சிலர்
பார்த்திருக்கலாம்.
வெகுசிலர்
படித்திருக்கலாம்..
யாருக்கும் புரிந்திருக்க
வாய்ப்பேயில்லை..

எனக்கு சிலசமயம்
அதுபுரிகிறது.
பல சமயம் அழுத்தி பிடித்த
மணல் போல்
கை நழுவி விழுகிறது..
அது
மாறிக்கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு முறை
படிக்கும்போது
கலைடாஷ்கோப்பின்
கலைக்கப்பட்ட கலர் போல..

அதை புரிவதற்கான
போரட்டங்களில்
நான் தோற்த்துபின்,
ஜெயிப்பதாய் கற்பிதம்
கொள்கிறேன்..

அது எளிமையானது..
பின் கடினமானது.. அதனுள்
ரொம்பவும் எளிமையானது..

நிறைய வியாஞ்னங்கள்..
விளக்கங்கள்..
குழப்பங்கள்..

சில சமயம்
பயமாயிருக்கிறது..
மறுசமயம்.. நெகிழ்வாய்..
எரிவாய்…

அடிக்கடி
அதைப்படித்துக்கொண்டேயிருப்பேன்..
புரிதலை
எழுதிக்கொண்டேயிருப்பேன்..
அதுதான் என் வளர்தலை
மெய்ப்படுத்தும்போலும்..


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி