தன் விரல்களை துண்டித்த சூபி
ஹெச்.ஜி.ரசூல்
1)மிதந்துவரும் புகைமூட்டத்திலிருந்து
அறிந்து கொண்டாய்
எங்கோ எதுவோ எரிகிறது.
தூரத்தில் நின்றாலும்
கொழுந்து விட்டெரியும் சுவாலைகளைக் கண்டு
எரிகிற ஏதோ ஒன்றை
தரிசனம் கொண்டாய்
விரலால் தொட்டு பார்த்தபின் மட்டுமே
புரிந்து கொண்டாய்
தீ சுடும் என்றும்
பூ தீயல்ல என்றும்
2)மரம் செடி கொடி தாவரங்கள்
ஸப்புகளில்
உன்னைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன.
பறவைகள் தக்பீர் கட்டுகையில்
உன்னைப் போல் சிறகு விரிக்கின்றன.
ஆடு மாடு ஒட்டகங்கள்
ருகூவு செல்லும்
உன்னைப் போல் நகர்கின்றன.
உட்கார்ந்திருக்கும் மலைகள்
அத்தஹியாத் செய்யும்
உன்னைப் போல் இருப்பு கொள்கின்றன.
கருவறைக் குழந்தை
ஸுஜுது செய்யும்
உன்னைப் போல் வடிவம் கொள்கிறது.
எல்லாமாகவும் நீ இருக்கிறாய்
எதுவாக நீ இல்லை….
3)தன்னை கிள்ளிப் பார்த்த போது
வலித்தது
பிறரை கிள்ளிப் பார்த்த போது
அடிக்க வந்தார்கள்.
மிருகங்களை கிள்ளிப் பார்க்க
கொம்பாலும்
கொம்பற்றும் முட்டித் தள்ளின.
செடிகளை கிள்ளிப் பார்க்கையில்
தொட்டாவாடி இலை மூடி
வருத்தம் தெரிவித்தது.
உயிரைத் தேடி புறப்பட்ட சூபி
தன் விரல்களையே துண்டித்துக் கொண்டான்,
mylanchirazool@yahoo.co.in
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)
- கடிதம்
- வஞ்சித்த செர்னோபில்
- மடியில் நெருப்பு – 3
- என் கவிதை
- பெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)
- தன் விரல்களை துண்டித்த சூபி
- எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா
- தெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்
- கையறு காலம்
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]
- சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)
- இரவில் கனவில் வானவில் – 1
- ஆணிவேர் திரைப்படம் வெளியீடு
- டோடோ: ஒரு இரங்கல் குறிப்பு
- கல்வெட்டாய்வு: இந்திரப் பிரேத்து
- பட்டறை தயாரித்த பரமார்த்த குரு
- ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்
- தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து
- கடித இலக்கியம் – 22
- ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்
- சாம வேதமும் திராவிட வேதமும்
- தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்
- கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!
- அலன்டே & பினொச்சே – சிலி
- மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்
- முதுமை வயது எல்லோருக்கும் வரும்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை