ஓதி உணர்ந்தாலும்!

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புதுவை ஞானம்


ஓதி உணர்ந்தாலும்!

நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அது இருக்கிறது
நான் தெரிந்து கொள்வதற்கு முன்பிருந்தே அது இருக்கிறது
நான் தெரிந்து கொள்வதால் என்னவாகப் போகிறது
நான் தெரிந்து கொள்ளாவிட்டல் என்னவாகப் போகிறது
இருந்தது -இருக்கிறது – இருக்கும்- பிரபஞ்சம் !

தெரிந்து கொண்டு விட்டதால் என்ன மகிழ்ச்சி
தெரியப் படுத்துவதால் என்ன மகிழ்ச்சி
தெரியப் படுத்த முடியவில்லையே என்ன துக்கம்?
தெரியப்படுத்தா விட்டால் என்ன துக்கம்?
இருந்தது -இருக்கிறது – இருக்கும் பிரபஞ்சம் !

இருக்கும் நாம் மட்டும் தான் இல்லாமல் போவோம்
என்ன லாபம் என்ன நஷ்டம் ?
ஓதி உணர்ந்தாலும் ஒன்றும் தான் இல்லையடி !

புதுவை ஞானம்

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்