கீதாஞ்சலி (86) – மரண தேவனுக்கு வரவேற்பு .. !

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அதோ! மரண தேவன்
எதிரில் நிற்கிறான்,
எனது வாசற் கதவருகிலே,
உனது வேலையாள் அவன்!
எவருக்கும் தெரியாத தூரக்
கடல் கடந் தெனது
வீட்டிற்கே,
வந்து விட்டான்
உந்தன் கட்டளை நிறைவேற்ற!
காரிருள் கப்பி விட்ட திரவில்!
குடிகொண்ட தச்சம்
நெஞ்சில்! ஆயினும்
தீபத்தை கையில் கொண்டு
திறக்கிறேன்,
முன்வழிக் கதவை!
வரவேற் கிறேன்,
சிரம் தாழ்த்தி நான்
மரண தேவனை!
உந்தன் தூதுவன்தான்
வந்து நிற்கிறான்,
வாசலில்!

கரங்களைக் குவித்து,
மரண தேவனை வணங்குவேன்,
கண்ணீர் சொரிய!
திருப் பதங்களைத்
துதிப்பேன்,
இதயச் செல்வத்தை
அர்ப்பணம் செய்து!
திரும்பிச் செல்வான், மரண தேவன்
ஒருநாள்
கட்டளை நிறைவேற்றி, எந்தன்
காலைப் பொழுதை
வெறும்
கருநிழ லாக்கி!
வெறுமையான என் வீட்டில்
புறக்கணித்த
தனி ஆன்மா மட்டும்
எஞ்சி நிற்கும்,
எனதிறுதிக் கொடையாக
உனக்கு!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 13, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா