கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


குருநாதரின் மாளிகையி லிருந்து,
முதன்முதல்
வெளியேறிய போது,
தீவிரப் படையாளர் தமது
போர்க் கவசத்தையும், ஆயுதங் களையும்,
ஒளித்து வைத்தது எங்கே?
மூர்க்கப் பராக்கிர மத்தை
பதுக்கி வைத்தது எங்கே?
பார்த்தால் பாவம் அவர்
வறியவராய், அனாதையராய்
உதவுவா ரற்றுத்
தெரிகிறார்!
அம்புகளை எய்தார்கள் வெகுண்டு
அவர்கள் மீது,
குருநாதர் மாளிகையி லிருந்து
வெளியேறிய நாளன்று!
திரும்பவும்,
தீவிரப் போர்வீரர்
குருநாதர் பெருமனைக்கு ஒருநாள்
விரைந்த வேளையில் தமது
பராக்கிர மத்தை
மறைத்து வைத்தது எங்கோ?
தரையின் மீது
வாளையும், வில்லையும்
கீழே போட்டார்!
நிலவுக அமைதி என
நெற்றியில் எழுதிப் பறை சாற்றினார்,
வெளிப் படையாக!
வாழ்க்கையில்
உற்றதையும், பெற்றதையும்
சுற்றத்தையும் விட்டு விட்டு,
ஒருநாள் சரண் அடைந்தார்,
மறுபடியும்
குருநாதர் மாளிகைக்கு,
விரைந்து!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 5, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா