கீதாஞ்சலி (83) : என் கண்ணீர் முத்தாரம்..!

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



அன்னையே! சோகத்தில்
சிந்துமென்
கண்ணீர்த் துளிகளை எல்லாம்
ஓர் முத்தாரமாய்க்
கோர்த்துச் சூட்டுவேன்,
உன்னெழில் கழுத்தினில்!
விண்மீன் பரல்கள்
நடமிடும்
ஒளிச் சலங்கைகள்
ஒப்பனை செய்கின்றன உன்
திருப்பதங்களை!
ஆயினும்
கழுத்தில் தொங்குமென் முத்தாரமே,
ஊஞ்சல் ஆடுது
உன் மார்பின் மீது!
செல்வமும், புகழும்
தேடி வருகின்றன, நினது
திருவருளால்!
அவற்றை அளிப்பவனும் நீ!
பெற முடியாமல்,
நிறுத்தி விடுபவனும் நீ!
ஆயினும்
என்னைச் சார்ந்தவை,
என் துயர்கள் அனைத்தும்
முழுமையாய்!
என் துன்பங்களை
உன்னிடம் சமர்ப்பிக்கும் போது,
வெகுமதி
அளிக்கிறாய் எனக்கு
நளினமாக!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 24, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா