திருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

தியாகு



சாயபட்டறைகளில் எங்கள்
சந்ததிகள் வளருது!
காலையில் காய போட்ட
துணியெடுக்க -சூரியன்
போனபிறகு வருகிறாள் அம்மா

நிக்க நேரமில்லை நினைத்து
பார்க்க வழியுமில்ல -வேலை
எட்டுமணிநேரமல்ல!

நீங்கள் போட்டுருக்கிறபனியனுக்குள்
புதைந்திருக்கு எங்கள்
வாழ்க்கை-வேலை
எட்டுமணிநேரமல்ல!

படிக்க போன பிள்ளைக்கு
பசியாத்த வழியுமில்ல
குடிக்கிற கூலுக்கே
குடும்பம் முழுக்க
வேலைக்கு-வேலை
எட்டுமணிநேரமல்ல

பள்ளிகூடம் விட்டவுடன்
பறந்து வருவான் பிள்ளை-அம்மா
பாயாசம் வைத்திருப்பாளென
பாசத்துடன் அள்ள வழியில்ல-வேலை
எட்டுமணிநேரமல்ல

நின்னுகிட்டே பார்க்கிறாள்
வேலை அம்மா-
உட்கார வாரத்தில்
ஒரு நாள் லீவு
அன்னைக்கும் வேலையாம்
அர்ஜென்டாம் ஆர்டரு-வேலை
எட்டுமணிநேரமல்ல

அன்புடன்

(திருப்பூரில் பனிரெண்டுமணிநேரவேலை கட்டாயம்குறித்துஎனது வேதனையை எழுதியுள்ளேன்)

Series Navigation

தியாகு

தியாகு