கவிதைகள்
அன்பாதவன்
இரண்டாம் தாய்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய்
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும்
மவுனம்கவிந்த பொழுதுகள்
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள்
பாறையாயிருந்தேன்;
சிற்பமானேனுன் செதுக்கலில்
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா
கடன் பெற்ற நெஞ்சம்
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய்
தேடிக் கொ ‘ண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை.
ஹைபுன்
ஏமாற்றங்களிலான சரளை நிறைந்த
என் பூமியில் மாற்றத்தை விதைத்த
முதல் மழைத்துளி நீ
பெருமழையாய்ப் பெய்த ப்ரியத்தில்
பூமி நனைந்தது
தன்னை இழந்தது;கவலை மறந்தது
இதமான உரையாடலில்
பதமானது பயிர் வளர்க்க
ஊடுபயிராய் நுழைந்து
பெரும்பயிராய் வளர்ந்த கதிரசைவில்
தீண்டும் மென்தென்றல்
பரிவு சுமந்த பனித்துளி வார்த்தைகள்
உள்நுழையும்போதெல்லாம் உளக்குளிர்ச்சி
என்னுள் பசுமை வளர்த்த
இயற்கையின் ரூபமே
வாடத வாழ்வை வரமாய்த் தா!
ஈர இதழ்கள்
உறிஞ்சிய சூரியன்
சிவந்த ரோஜா.
கவிதை
அரூபங்களின் தரிசனம்
இயலாதென்னால் அரூபமாய் உணர்வதை
படைப்பாக்கும் உயர்கலை
உன்னிலிருந்து எழும் தீயில் ஓவியம் தீட்ட
கிடைக்குமோ தூரிகை
மூச்சுக்காற்றின் ஆரோகண அவரோகணங்களை
கொஞ்சல் சிணுங்கல்களை
கொலுசொலியின் லயங்களை
இசைக்கோர்வை அமைக்க
இல்லையடியெனக்கு இசைஞானம்
விரல்கோத கலைந்தாடும் கூந்தலிழை நடனத்துக்கு
படிமங்கள் தேடுகிறேன்
முத்தம் பதித்த இதழ்களின் ஈரவடிவம்
எதன் குறியீடென்று
ஆராய்கிறேன் தனிமைகளில்
மடிசாய்ந்து கிறங்கிய விழிகளைப் படம்பிடிக்க
ஒளிக்கருவி உருவாகவேண்டுமினித்தான்
இதழ்கவ்வும் தருணங்களில் கசியும்
கேவல் விம்மல்களுக்கு
இசையாகும் வாய்ப்புமுண்டு
சாத்தியம்தான் இவையனைத்துங்கூட
விடைபெறும்போது வெளியிடும்
ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த
கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க
திரிந்தலைகிறேன்
உலக மொழிகளின் காடுகளுள்.
—-
anbaadhavan1963@gmail.com
- ரா கு கே து ர ங் க சா மி -4
- தண்டனை
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அந்தக் கணம்
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- என் கணவரின் மனைவி!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- சன் டிவி
- கடிதம்
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- கடிதம்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- அவுரங்கசீப்…. ? !!!