மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
மூங்கில் நினைவு.
முட்கம்பி தாண்டி
மூங்கில் மரம்தறித்து
முழுசாய் முடிவதற்குள்
முதுகில் மூங்கிலடி.
வாரிச் சுருட்டி
வேலி பாய்ந்து
வீடு வந்தபோது
விழுந்த அடிகள்
மூங்கில் தாகினை
முழுமை பெறச்செய்தன.
முந்தநாள் மூத்தமகன்
மூங்கில் வேண்டுமென்று
முகத்தைப் பார்த்தபோது
முதுகைத் தடவிக்கொண்டேன்.
முப்பது வருடங்களாக
முதுகைத்தான் தடவுகிறேன்
மூங்கில் நினைவுமட்டும்
முதுகைவிட்டு நீங்கவில்லை.
சட்டைப்பைக்குள் சங்கிலி.
பக்கத்து மாணவனின்
பென்சிலைத் திருடி
மூன்றாக்கிச் சட்டைப்பைக்குள்
மறைத்து விட்டேன்.
சட்டைக்குள் என்னவென
சடுதியாய் விசாரணை
~சங்கிலி| என்றேன்
கிலிபிடித்து நின்றநான்.
அன்று அதிபராயிருந்த
என் அப்பாவின்
ஐந்து விரல்களும்
என் கன்னத்தில்.
இன்று சங்கிலியைக் காணும்போதெல்லாம்
என் சட்டைப்பைக்குள் பென்சிலையும்
கன்னத்தில் வடுவினையும் – ஏதோ
எண்ணத்திற் தேடுகிறேன்.
மீண்டுமொரு சந்தர்ப்பம்
இருளின் பிடியின்
இறுக்கத்தைத் தளர்த்தி
கதிரவன் மெல்லமெல்ல
கண்திறந்து பார்க்கிறான்.
உலகம் இன்னும்
உறங்கிக் கிடக்கிறது,
பறவைகளும் மிருகங்களும்
புல்-பூண்டுகளும் தவிர.
பூச்சிகளும் தாவரங்களும்கூட
புத்துயிர்பெற்று – தங்களை
உயிர்ப்பித்துக் கொண்டு
உற்சாகமாய் உறக்கம்கலைத்தன.
மெல்ல மெல்ல
வெளிச்சத்தைப் பரப்பி
உலகம் முழுவதையும்
ஆக்கிரமித்துக்கொண்டான் கதிரவன்.
மாற்றமில்லை மாற்றமேயில்லை
மனிதரில்மட்டும் மாற்றமில்லை
கொலை பொய்-களவு
கள்ளருந்தல் குருநிந்தை.
பஞ்சமா பாதகங்கள்
பரவிக் கிடக்கும்
உலகைத்தான் காண்கிறான்
உச்சிக்குயர்ந்துவிட்ட கதிரவன்.
வெட்கித் தலைகுனிந்து
விழிதாழ்த்தி மீண்டும்
சிறை கொள்கிறான்
சினங்கொண்ட இருளின்பிடிக்குள்.
நாளையொரு சந்தர்ப்பம்
காலை வருமென்று
மாலைச் சூரியன் – தன்
வாலைச் சுருட்டிக் கொண்டான்.
காதல் திருட்டு
அவளைத் தொலைத்துவிட்டு
அகிலமெலாம் தேடுகிறேன்.
ஆசையாய்த் துடைத்து
அன்பு முத்தமிட்டு
அழகாய் வைத்திருந்தேன்
அரைக்கைச் சட்டைக்குள்.
அலுவலக உபயோகத்திற்காய்
அவ்வப்போது பதிவுசெய்த
ஆயிரம் இலக்கங்கள் – அவளை
ஆக்கிரமிப்புச் செய்தன.
நிஜக் காதலியின்
நித்திரைச் செய்தியெல்லாம்
அவளுள்தான் அமைதியாய்
அடங்கிக் கிடந்தன.
மகாபொலவில் புது
மணத் தம்பதிகள்
கைகோர்த்துச் சென்றதையும்
கிளிக்செய்து வைத்திருந்தேன்.
செல்லிடம் என்பதால்
சென்றுவிட்டாயோ என்னிடம்
சொல்லிக் கொள்ளாமல்
செருக்குடன் நீ!
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
தொலைபேசிக் காதலியை
தெரிந்தவர்கள் தயவுடன்
திருப்பித் தந்திடுங்கள்.
காதலைத் திருடுவது – உங்களுக்குக்
களங்கமெனத் தெரியாதா ?
கல்லாய்ச் சமைந்து…
வாசல் தோறும் உன்வரவை
எதிர்பார்த்துக் காத்து நிற்பேன்
யாசகம் என்றெண்ணி எட்டிநிற்பாய்.
அண்ணன் வருகை கண்டு
அண்ணார்ந்து பார்க்கும் நீ
அந்நியமாய் எனைக் காட்டிக்கொள்வாய்.
மழையென்று மரத்தடி ஒதுங்கி
தளையொன்றை உசுப்பி விட
ஏளனமாய் எனைப் பார்ப்பாய்.
கடலை வண்டிக் காரனிடமும்
கச்சான் விற்கும் சிறுவனிடமும்
கண்ணசைத்து ஜாடை காட்டிடுவாய்.
உனை ஆவலாய் முத்தமிட
நெருங்கும் போதெல்லாம் நீயென்னை
அரைவேக்காடு அசிங்கம் என்பாய்.
ஆசையாய் உன் கரம்பிடித்து
அன்பு மொழி பேசி
அழகழகாய் ஐந்தாறு பெற்றெடுத்து
அரசாள எண்ணி யிருந்தேன்.
சுனாமிப் பேயலை வில்லனாய்மாறி
உனை சுருட்டிச் சென்றபோது
கல்லாய்ச் சமைந்து நின்றேன்
எல்லாக் காலமும் போல்.
நம்பிக்கை
என் பெற்றோரை மட்டும்
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!
சுனாமிச் சுருள் அலைகளுக்குள்
சிக்குண்டு சிறையுண்டு மாண்ட
என் பெற்றோரை மட்டும்
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!!
டெனிம் காற் சட்டையும்
ரீசேட்டும் இன்று எனக்கில்லை
என் பிய்ந்த சட்டையையும்
என் கிழிந்த சாறனையும்
என் வாப்பா கண்டால்
உயிர் நீத்திடுவார் என்முன்னே.
என் ஒட்டிய வயிற்றையும்
என் உப்பிய வதனத்தையும்
என் உம்மா கண்டால்
கண்முன்னே கதறி அழுதிடுவாள்
நானும் சேர்ந் தழுவதற்கு
என்விழிகளுக்குச் சொந்த நீருமில்லை.
கட்டிய வீடும் காரும்
பெட்டியில் துண்டுதுண்டாய்
ஏற்றிச் சென்று கொட்டிய காட்சிகள்
என் மனதில் மட்டும்
மாறாப் பதிவுகளாய் இருக்கட்டும்.
நாளை ஒரு காலம்வரும்
நானும் வீடுகட்டிக்
குடியிருப்பேன் இன்று என் வீடு
வீதியாய் விரிந்து கிடந்தாலும்.
—-
abdulgaffar9@yahoo.com
- ரா கு கே து ர ங் க சா மி -4
- தண்டனை
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அந்தக் கணம்
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- என் கணவரின் மனைவி!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- சன் டிவி
- கடிதம்
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- கடிதம்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- அவுரங்கசீப்…. ? !!!