கவிதைகள்
பெருந்தேவி
கடைத்தெருவில் குட்டிச்சீதை
குரங்குப்படைகளும் சீதையும் லட்சுமணனும்
இல்லாமல்
தகர வில்லோடு
ராமன் வேஷமிட்ட குழந்தையைப்
பார்த்தேன் ஒருநாள்
கடைத்தெருவில்.
நீலநிறத்துக்கும்
அட்டைக் கங்கணத்துக்குமிடையே
சொறிந்துகொண்டிருந்தவனுக்கு
காசு கொடுத்துவிட்டு
சீதையைப் பற்றிக் கேட்டேன்.
அம்மாவோடு முறுக்கு சுற்றிக்கொண்டிருப்பதாகச்
சொன்னான் அவன்.
அதே வழியில் அடுத்த நாள்
சீதை வேஷமும்
அனுமானும் எதிரே.
மட்கிய பாவாடை கமகமத்தவளிடம்
ராமன் எங்கே என்றேன்.
இஸ்கோலுக்குப் போய்விட்டானாம்.
ராவணனை விசாரித்ததும்
தெரியலை
என்றுவிட்டு நகர்ந்தாள்.
அனுமான் அப்போது
குச்சிமிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தது.
சீதை இலங்கையை மறந்தே விட்டாளா
அல்லது
ராவணன் அவர்கள் கதைக்குள்
இன்னும் நுழையவே யில்லையா
என்று விசாரித்தறிய
வாடா உறுதியோடிருந்தும்
ராவணக் குழந்தையை
இன்றுவரை நான்
பார்க்கவேயில்லை.
கண்
எப்போதும்
நேர்
கோணத்தில்
பார்க்க
சச்சதுரமாக
ஏன்
செவ்வகமாகவேனும்
இருந்திருக்கலாம்.
sperundevi@yahoo.com
- ரா கு கே து ர ங் க சா மி -4
- தண்டனை
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அந்தக் கணம்
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- என் கணவரின் மனைவி!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- சன் டிவி
- கடிதம்
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- கடிதம்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- அவுரங்கசீப்…. ? !!!